Pages

Friday, July 22, 2011

Narrated by Ubadah ibn as-Samit (radiAllahu anhu) that The Prophet (salAllahu alayhi wasalam) said,
“I have told you so much about the Dajjal (Anti-Christ) that I am afraid you may not understand. The Anti-Christ is short, hen-toed, woolly-haired, one-eyed, an eye-sightless, and neither protruding nor deep-seated. If you are confused about him, know that your Lord is not one-eyed. -[Abu-Dawud :4306]
 
Arrivals
 
Before download the videos, please read the notes which are given at the end of this page.         
Description on respective topics
Download Hereதலைப்புகள் பற்றிய சிறுகுறிப்பு
 IntroductionIntro அறிமுகம்
 Proof From The Holy QuranPart-1 திருக்குர்ஆனின் அத்தாட்சிகள
 Shocking Evidence Of The PharaohsPart-2 அதிர்ச்சியூட்டும் ஃபிர்அவ்னிய சாட்சிகள்
 Architecture And EnergyPart-3 கட்டிடக் கலையும் சக்தியும்
 The Battle Of Human EnergyPart-4 மனித சக்தியின் போராட்டம்
 Pharaohs Of TodayPart-5 இன்றைய நவீன ஃபிர்அவ்ன்கள்
 Structures Dedicated to AntichristPart-6 தஜ்ஜாலுக்காக அர்பணிக்கப்பட்டவைகள்
 Mind Control Feat. George CarlinPart-7 அறிவை கட்டுப்படுத்துதல்
 Children's Mind ControlPart-8 குழந்தைகளின் அறிவை கட்டுப்படுத்தல்
 Hashem's FilmsPart-9 சகோதரர் ஹிஷாமைப்பற்றி சிறுகுறிப்பு
 The New Worldly OrderPart-10 புதிய உலகிற்கான பிரகடனம்
 Musical SorceryPart-11 மதிமயக்கும் மந்திர இசைகள்
 Light Up The DarknessPart-12 இருளுக்கு ஒளியூட்டல்
 Lady In RedPart-13 சிவப்பு மங்கை
 HollywoodPart-14 ஹாலிவுட்
 Hollywood And The Promised LandPart-15 ஹாலிவுட்டும் வாக்களிக்கப்பட்ட பூமியும்
 The Media And IslamPart-16 ஊடகமும் முஸ்லிம்களும்
 The War On TerrorPart-17 தீவிரவாதத்திற்கெதிரான போர்
 Hypocrisy And DemocracyPart-18 நயவஞ்சகத்தனமும் ஜனநாயகமும்
 The UFO PhenomenaPart-19 யுஏப்ஓ தோற்றப்பாடு
 The UFO Phenomena (Continued)Part-20 யுஏப்ஓ தோற்றப்பாடு (தொடர்ச்சி)
 What Is Yet To ComePart-21 இனி வெளிவர இருப்பவைகள் என்ன?
 Our Satanic Pop CulturePart-22 சாத்தானிய பாப்இசை கலாச்சாரம்
 Materialism And The Battle WithinPart-23 பொருள்முதல்வாதமும் அத்தோடு நம்   போராட்டமும்
 Freedom UnpluggedPart-24 பறிக்கப்பட்ட சுதந்திரம்
 The Antichrist Dajjal Is HerePart-25 தஜ்ஜால் இங்கே இருக்கிறான்
 The Antichrist Dajjal Is here (Continued)Part-26 தஜ்ஜால் இங்கே இருக்கிறான் (தொடர்ச்சி)
 Why Leaders Practice SatanismPart-27 தலைவர்கள் ஷைத்தானிய கோட்பாட்டை  பின்பற்றுவதேன்?
 Why Leaders Practice Satanism (Continued)Part-28 தலைவர்கள் ஷைத்தானிய கோட்பாட்டை  பின்பற்றுவதேன்? (தொடர்ச்சி)
 The Truth About GodsPart-29 கடவுள்கள் பற்றிய உண்மைகள்
 The Checkered Floor And The GodsPart-30 சதுரங்க தளமும் கடவுள்களும்
 The Great DeceptionPart-31 மாபெரும் பித்தலாட்டம்
 The Most Valuabe TruthPart-32 விலை மதிப்பற்ற உண்மை
 The Choice Is YoursPart-33 இனி தேர்ந்தெடுப்பது உங்கள் கையில்
 The Infiltration Of ReligionPart-34 மதக்கோட்பாட்டில் ஊடுருவல்
 The Temple Of SolomonPart-35 சாலமோன் கோயில்
 The Story Of JesusPart-36 நபி ஈஸா (அலை) அவர்களின் சரிதை
 The Sun GodPart-37 சூரியக் கடவுள்
 The Story Of IslamPart-38 இஸ்லாத்தின் சரித்திரம்
 The Prophet's LineagePart-39 நபி(ஸல்) வழியைத் தொடர்ந்தோர்
 The Common GroundPart-40 பொதுவான அடிப்படைகள்
 The BloodlinesPart-41 இரத்த பந்தங்கள்
 The GatekeepersPart-42 வாயிற் காப்போன்
 The Symbolism Of 9-11Part-43 செப்டம்பர் 11 குறியீடுகள்
 The Significance Of The KaabaPart-44 இறையில்லம் கஃபாவின் முக்கியத்துவம்
 The Kaaba And The 9-11 RitualPart-45 புனித கஃபாவும் செப் 11 சடங்குகளும்
 The Complete HumanPart-46 முழுமையான மனிதன்
 The Free HumanPart-47 விடுவிக்கப்பட்ட மனிதன்
 The Arrival Of MahdiPart-48 மஹ்தி (அலை) வருகை
 The Arrival Of AntichristPart-49 தஜ்ஜாலின் வருகை
 The Arrival Of Jesus The MessiahPart-50 நபி ஈஸா (அலை) வருகை
 EndPart-51 முற்றும்
Important Notes:
  1. We have published these Arrival videos in our website due to its mammoth information which can wakeup our society against the satanic luciferian cults and their evil plans against the humanity, where most of our peopleunaware of it
  2. As per the current scenario of  Muslim Ummah, The global Muslim community has divided into 2 major sects i.e. Sunni and Shia. This satanic split has been done by the JEWS and the Luciferians; we strictly against those satanic concepts of Shiaism. Moreover, whave strongly believe that the foundation/basis for Islam is the Teachings of Glorious Qur’an and authentic Ahadhees of our beloved Prophet Muhammed (SAL).
  3. In addition with the given background music in the video clips, if you find anything contradicting to Quran and Sunnah then – PLEASE   IGNORE IT COMPLETELY.
  4. We are sincerely requesting to our respected viewers, Please take only optimistic things from these videos. For Example videos like #39#48 , #49 are giving some baseless information while showing Imam's names and showing the imaginary depictions for both Prophet Esa (AL) and Imam Mahdhi (AL).
  5. We sincerely express our gratitude and deep sense of appreciation to Noreagaaa & Achernahr production team, for providing such eye opening episodes with brainstorming efforts.  May Allah bless them and guide them into right path.
please contact us through email:  info@ottrumai.net for further clarifications.

இரகசிய சமுதாயம் - தொடர்-9


இரகசிய சமுதாயம் - தொடர்-9
ஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற
முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள். தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான். (2:208)

இரகசிய சமுதாயம்!. ஒற்றுமை இணையவாசகர்களை ஒரு மாதகாலமாக வலம்வந்த இத்தொடரின் நிறைவுப்பகுதி இது. இத்தொடர் கட்டுரைகள் மூலம் நவீன ஷைத்தானிய, தாவூத்திய சக்திகளின் படுபாதகங்களையும், சூழ்ச்சிகளையும் ஓரளவு அறிந்து கொண்டோம் அல்ஹம்துலில்லாஹ். அத்தகைய சூழ்ச்சிகளை வெற்றிகொண்டு முழுமைபெற்ற முஸ்லிமாக வாழ்ந்திட இயலுமோ என்று ஏங்குபவர்களுக்கு சில முக்கிய தகவல்களை வழங்குவதே இந்நிறைவு பகுதியின் நோக்கம். ஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற முஸ்லிம்கள் செய்ய வேண்டியவைகள் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னர் சில அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.
 
முஃமின்கள் (இறைவிசுவாசிகள்) மீது ஷைத்தானுக்கு அதிகாரமில்லை. 

இறைவிசுவாசிகளே! ஷைத்தானின் சூழ்ச்சிகள் மிகப் பிரம்மாண்டமாகவும் சக்திமிக்கதாகவும் தெரிந்தாலும் உண்மையில் ஷைத்தான் மிகவும் பலஹீனமானவன் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். ஆம்அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனது கட்டளைகளை சரிவர நிறைவேற்றி, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித்தந்த இறைநெறியில் வாழும் ஒரு உண்மை முஃமினுக்கு முன்னால் ஷைத்தான் மிகவும் பலஹீனமானவன். இன்னும் அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ள அத்தகைய முஃமின்கள்மீது ஷைத்தானுக்கு எவ்வித அதிகாரமுமில்லை.

எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக ஷைத்தானுக்கு எவ்வித அதிகாரமுமில்லை. திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அவனுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் செல்லும்.(16:99-100)
''நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர'' என்று கூறினான். நிச்சயமாக உன்னைப் பின்பற்றும் அனைவரும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும். (15:42-43)

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான் ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள் அவன் தன்னைப் பின்பற்றும் தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான். (35:6)

ஷைத்தானை வணங்கும் இலுமனாட்டிகளும் பலஹீனமானவர்களே!
அறிவாற்றல், ஆட்சி அதிகாரம், பணம்பலம் மற்றும் படைபலம் என்று இவ்வுலகின் அனைத்து சக்திகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்த மிரோவிஞ்ஜியன் இலுமனாட்டிகளை நாம் வெற்றிகொண்டு தூய இஸ்லாத்தை நிலைநாட்டுவது சாத்தியமா? என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படலாம். அத்தகையவர்களுக்கு நாம் தெளிவாக சொல்லிக் கொள்கிறோம், லூசிஃபர் எனும் ஷைத்தானின் ஆட்சியை இப்பூமியில் அமைத்திடத் துடிக்கும்இந்த மிரோவிஞ்ஜியன் இலுமனாட்டிகளும் முஃமின்களுக்கு முன்னால் பலஹீனமானவர்களே!. ஆம் நாம் முஃமின்களாக இருக்கும் பட்சத்தில், அல்லாஹ்வின் உதவி நமக்கு இருக்கும் வரை நம்மை எந்த ஷைத்தான்களாலும் வெற்றி கொள்ள இயலாது என்பதை கீழ்க்காணும் இறைவசனங்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

... மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.(4:141)

...அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.(8:7)

எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் நன்மாராயம். ஆகவே என்னுடைய நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! (39:17)

எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் அருள் மிக்க அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
 (2:249)

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொல்லாதீர்கள் நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (3:139)
எனவே உண்மை முஃமின்களுக்கு முன்னால் ஷைத்தானிய இலுமனாட்டிகளும் பலஹீனமானவர்களே என்பதையும், இலுமனாட்டிகளை ஒப்பிடும்போது உண்மை முஃமின்கள் சிறுகூட்டத்தினராக, பலம்குன்றியவர்களாகத் தெரிந்தாலும் இறுதிவெற்றி முஃமின்களுக்குத்தான் என்பதையும் அறியமுடிகிறது – அல்ஹம்துலில்லாஹ்.
நாம் முதலில் முஃமின்களாக இருக்கவேண்டும்.

ஆனால் ஒரு நிபந்தனை!. அல்லாஹ்வின் உதவியும், ஷைத்தானிய சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாப்பும், வெற்றியும் நமக்குக் கிடைக்க வேண்டுமெனில் நாம் முதலில் முஃமின்களாக வாழவேண்டும். இதுவே அந்த நிபந்தனை. நாம் உண்மையான, உளத்தூய்மையான, உறுதிமிக்க முஃமின்களாக வாழ்ந்தால் மட்டுமே உன்னதமான வெற்றிகளை அடைய இயலும். இதைத்தான் திருமறைகுர்ஆனும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களுக்குத் தகுதி கொடுத்து உங்களை நம்மளவில் நெருங்கி வைக்கக் கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான நல்ல அமல் செய்கின்றாரோ அத்தகையோருக்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு. மேலும் அவர்கள் சுவனபதியின் உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள். (34:37)

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும் நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (6:32)

நபியே! யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். (6:70)

ஏனென்றால் அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம். 
(7:51)
எனவே ஒவ்வொரு உண்மை முஃமினுடைய இலட்சியமும், குறிக்கோளும் நாளை மறுமையில் ஈடேற்றம் அடைவதை நோக்கியே இருக்கவேண்டும். மறுமையை மறந்து அற்பமான இவ்வுலக வாழ்க்கையின் தற்காலிக சுகபோகத்தில் மயங்கிக் கிடப்பவன் உண்மை முஃமின் அல்ல. அவனுக்கு அல்லாஹ்வுடைய உதவியோ, இம்மை மறுமை வெற்றியோ, ஈடேற்றமோ கிடையாது என்பதை மேற்கண்ட இறைவசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

எனவே இவ்வுலக மாயையில் சிக்குண்டு, இஸ்லாமிய மார்க்கத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்ட அத்தகையவர்களுக்கு ஷைத்தான்கள், இலுமனாட்டிகள் என்று (நம் ஒற்றுமை இணையதளம் போல எத்தனை இணையங்கள்) எத்தகைய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்காது. இவ்வுலக இச்சைகளில் மயங்குவதை விட்டொழித்து மறுமை வெற்றியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படும்வரை அவர்கள் பரிசுத்த முஃமின்கள் என்ற நிலையை அடையவே மாட்டார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
முஃமின்கள் அல்லாஹ்வின் சோதனைகளுக்கு உள்ளாவர்

பிரிவினைகளும், சுயநலமும், சுகபோகமும், சூழ்ச்சிகளும் நிறைந்த இச்சோதனையான காலகட்டத்தில் ஒரு உண்மையான முஃமினாக நாம் வாழ்வதென்றால் கருங்கல்லில் நாற் உரிப்பதைப்போன்று மிகக்கடுமையான ஒன்றாகத்தான் தெரியும். இத்தகைய சூழ்நிலைகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் முஃமின்கள் எதிர்நோக்கித்தான் இருந்துள்ளனர். இது ஒருபக்கம் இருக்க, ஒரு முஃமினாக இவ்வுலகில் வாழ்ந்து எல்லையும், உவமையும் இல்லாத பேரின்ப சுவனத்தை இறைவனின் பரிசாகப் பெறவேண்டுமென்றால் படைத்த இறைவனின் சோதனைகளை நாம் சந்தித்தே ஆகவேண்டும்.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமை, பிணி போன்ற கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன. 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்'' என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் ''நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது'' என்று நாம் ஆறுதல் கூறினோம்.
 (2:214)

முஃமின்களே! உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணைவைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறைவனிடம் பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.
 (3:186)

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் இன்னல்களை சகித்துக் கொள்ளுங்கள் ஒருவரை ஒருவர் பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் இம்மையிலும், மறுமையிலும் நீங்கள் வெற்றியடைவீர்கள்!.
 (3:200)

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்.(3:103)

ஆம் உலக சரித்திரத்தில் தங்களுக்கென்று தனிமுத்திரை பதித்துள்ள உலகத்திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும், அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட உத்தமத் தோழர்களான சத்திய ஸாஹாபாக்களின் சோதனைமிக்க வரலாறுகளில் நமக்கோர் அழகிய முன்மாதிரி நிச்சயம் இருக்கிறது. சோதனைகளை அல்லாஹ்வின் உதவிகொண்டு சாதனைகளாக மாற்றிக்காட்டி, ஈருலவெற்றிகளின் இருப்பிடமாய்த் திகழும் அத்தியாகச் செம்மல்களிடம் இருந்தது ஒன்றுதான். அது கற்பாறைகளையும் விஞ்சும் உறுதிமிக்க ஈமான் என்றால் மிகையில்லை. எனவே நம்மை எதிர்நோக்கும் சோதனைகளைக் கண்டு துவண்டுவிடாமல், தடைக்கற்களாகத் தெரிபவற்றை படிக்கற்களாக மாற்றி அந்த உத்தமத்தோழர்களின் வெற்றிவழியில் நாமும் நடைபோடுவோமாக.
அல்லாஹ் முஃமின்கள் மீது பேரன்பு கொண்டவன்:

அல்லாஹ் மிகப்பெரும் கருணையாளன், நீதியாளன். அல்லாஹ் வெருமனே முஃமின்களை சோதித்துவிட்டு இருந்துவிடுவதில்லை. மாறாக அதற்கான பரிசுகளையும் வழங்கும் இறைவன் நம்மீது பேரன்பும், நிகரற்ற கருணையும் வைத்துள்ளான் என்பதற்கு கீழ்க்காணும் நபிமொழிகள் (ஹதீஸ்குத்ஸி) சான்று பகர்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.அல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய அடியான் என்னைப்பற்றி நினைக்கின்ற விதத்தில் நான் உள்ளேன். அவன் என்னைப் பற்றி அவனது மனதிற்குள் நினைவு கூர்ந்தால், நானும் அவனைப் பற்றி எனது மனதிற்குள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு சபையில் நினைவு கூர்ந்தால், நானும் அவர்களை விட மேலான வானவர்கள் நிறைந்த சபையில் அவனை நினைவு கூறுகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால், அவனை நோக்கி நான் ஓடிச் செல்வேன். நூல்:புகாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் அல் கிஃபாரி(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அல்லாஹ் கூறினான்: 'அடியார்களே!  அநீதி இழைப்பதை என் மீது ஹராம் ஆக்கியுள்ளேன். (நீங்கள்) உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அநீதி இழைப்பதையும் தடை செய்துள்ளேன். எனவே, ஒருவர் மற்றவருக்கு அநீதி இழைக்காதீர்கள்.

என் அடியார்களே! உங்களில் நான் நேர்வழி காட்டியவர்களைத்தவிர மற்றவர்கள் அனைவரும் வழி கேட்டிலுள்ளீர்கள். எனவே என்னிடம் நேர் வழியை வேண்டுங்கள். நான் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுவேன்.

என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கின்றீகள். எனவே என்னிடம் உணவை வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிப்பேன்.

என் அடியார்களே!  உங்களில் நான் ஆடையளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆடையின்றி உள்ளீர்கள். எனவே என்னிடம் ஆடையை வேண்டுங்கள். நான் உங்களுக்கு ஆடை அணிவிப்பேன்.

என் அடியார்களே!  நீங்கள் இரவும், பகலும் பாவம் செய்கின்றீர்கள். நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பேன். எனவே என்னிடம் பாவமன்னிப்பை தேடுங்கள். நான் பாவங்களை மன்னிப்பேன்.

என் அடியார்களே!  எனக்கு நன்மையோ, தீமையோ செய்வதற்கு உங்களால் கண்டிப்பாக முடியாது. அவ்வாறு இயன்றால் அல்லவா எனக்கு நன்மையோ, தீமையோ செய்வீர்கள்.

என் அடியார்களே!  முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் பயபக்தியுடையவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் அதிகரித்து விட முடியாது.

என் அடியார்களே!  முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் கொடியவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் குறைக்க முடியாது.

என் அடியார்களே!  முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் (எதையாவது) வேண்டினால், நான் அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேண்டியதை கொடுத்தாலும், என்னிடமுள்ளவற்றுக்கு, ஒரு ஊசியைக் கடலில் முக்கி எடுத்தால் ஏற்படும் இழப்பைவிட அதிகமான இழப்பு ஏற்படாது.

என் அடியார்களே!  நிச்சயமாக நான் உங்களுடைய செயல்களைக் கொண்டே அடையாளம் காண்பேன். பிறகு அவைகளுக்கு கூலியும் வழங்குவேன். எனவே (மறுமையில் தனக்கு) நன்மையைக் காண்பவன் அல்லாஹ்வாகிய என்னை புகழட்டும். இதற்கு மாறாக காண்பவன், தன்னைத் தானே பழித்துக் கொள்ளட்டும். நூல்:முஸ்லிம்.
முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
1) இன்றைய தேவை ஓர் இஸ்லாமிய எழுச்சி. ஆம் டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நீங்கள் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் வீட்டின் குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. இது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் பின்னர் தன் மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு, காதல் - காதலர்தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம். கேளிக்கைகள்தாம் இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை. இத்தகைய அவலங்களை மாற்றி, மண்மூடச்செய்து ஆரோக்கிமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அத்தகைய ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி.

2அத்தகைய மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மலர ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை இஸ்லாத்தில் முழுமையாக நுழைத்திட வேண்டும். நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள நிபந்தனைகள் அடிப்படையில், பெயரளவில் முஸ்லிம் என்று இல்லாமல் இஸ்லாத்தின் கடமைகளையும், சட்டதிட்டங்களையும் தெளிவாக விளங்கி செயல்படக்கூடிய முன்மாதிரி முஸ்லிமாக முதலில் நீங்கள் இருக்க வேண்டும். இஸ்லாத்தின் 5 முக்கியக் கடமைகளான சாட்சிபகர்தல், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்றவற்றில் மிகுந்த பேணிக்கையுடன் நடந்து காட்டவேண்டும். ஒரு முஸ்லிமின் அடிப்படை அம்சங்களான உண்மை, நேர்மை, பணிவு, நன்னடத்தை, வாக்குறுதி மீறாமை போன்ற நற்பண்புகளின் உறைவிடமாக நீங்கள் திகழவேண்டும். இந்திய மண்ணில் இஸ்லாம் வேரூண்டக் காரணமாக அமைந்தவைகளுள் ஒன்று நம்மக்களிடம் அன்றைய அரபுமுஸ்லிம் வணிகர்கள் நடந்து காட்டிய நேர்மையான நன்னடத்தைகள் என்பதையும் கவனத்தில் கொள்க.

3உங்கள் வீட்டின் குழந்தைகள் ஒரு முன்மாதிரி இஸ்லாமியக் குழந்தைகளாகத் திகழவேண்டும்.பசுமரத்தாணிபோல என்ற உவமைக்கு ஒப்ப இஸ்லாமியக் கோட்பாடுகளை உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தெளிவாக பயிற்றுவிக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய எழுச்சி ஒரளவு துடிப்போடு இருக்கும் நமது காலகட்டத்திலேயே இத்தனை சவால்களை நாம் எதிர்கொள்கிறோம் என்றால் நாளைய இளைய சமுதாயமாக மாறவிருக்கும் நம் குழந்தைகள் எத்தகைய ஷைத்தானிய சூழ்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டிவரும்? என்பதை கனத்த மனதுடன் நினைத்துப் பார்க்கிறோம். அத்தகைய இடர்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் அளவிற்கு அவர்களின் ஈமானிய பலத்தை குழந்தைப் பருவத்திலேயே அளிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

4இஸ்லாமிய குடும்ப உறவுகள் மேம்படவேண்டும். சிறுசிறு கருத்துவேறுபாடுகள், பிரச்சனைகளால் பல முஸ்லிம் குடும்பங்களுக்குள் பல பிரிவினைகள் ஏற்பட்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல அத்தகைய பிளவுகள் அனைத்திற்கும் முதற்காரணமாக இருப்பது, மறுமைக்கான பரிசோதனைக் கூடமான அற்ப உலக வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்டுள்ள பற்றுதலே. சுயநலமாகவும், அகங்காரமாகவும், பழிவாங்கும் எண்ணத்துடனும் வாழ்ந்திருந்து இறுதியில் நாம் எதைக் கொண்டு செல்லப்போகிறோம்? என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். தனிப்பட்ட விரோதங்கள்தாம் நாளடைவில் குடும்பப் பிரச்சனைகளாக வலுக்கிறது. நம் குடும்ப உறவுகளை முறித்து, பல பிளவுகளை நமக்குள் ஏற்படுத்தி அவற்றையே ஒரு இயக்கப்பிளவாக, ஒரு சமுதாயத்தின் பிளவாக மாற்றி, நம்மை கோழைகளாக ஆக்கிவிடுவது கெட்ட ஷைத்தானுடைய (இப்லீஸ் - லூசிஃபருடைய) வேளைதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கான வித்து உங்கள் குடும்பத்திலிருந்து ஊன்றப்பட வேண்டும்.

5உங்கள் குடும்பம் ஒரு உள்ளரங்கு இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக மாறிடவேண்டும். உங்கள் பெற்றோர்கள், மனைவியர் மற்றும் குழந்தைகள் உட்பட உங்கள் குடும்பத்தார்கள், உங்கள் பொறுப்பிலுள்ளோர் என்று அனைவருக்கும் ஷைத்தானுடைய, இலுமனாட்டிகளுடைய சூழ்ச்சிகளை விளக்கவேண்டும். மேலும் அவர்களையும் தூய இஸ்லாத்தின் கோட்பாடுகளால் வார்த்தெடுத்து இஸ்லாம் என்னும் சத்தியமார்க்கத்தில் இறுகிப் பிணைத்திடவேண்டும். ஒரு வீட்டிற்கு படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை என்பன எவ்வாறு அவசியமோ அது போல ஒவ்வொரு முஸ்லிம்களின் வீட்டிலும் குறைந்தது 50 புத்தகங்களாவது கொண்ட ஒரு இஸ்லாமிய நூலகம் அவசியம் இருக்க வேண்டும். உங்கள் வீட்டிற்குள் வரும் வருகையாளர் இஸ்லாத்தின் அம்சங்களில் எதையாவது ஒன்றை கற்று அறிந்தவராக உங்கள் வீட்டைவிட்டு திரும்பிச்செல்ல வேண்டும்.

6முஸ்லிம்கள் பயனுள்ள கல்வி பெறவேண்டும். கல்வி கற்பதை இஸ்லாம் வலியுறுத்தும் அளவிற்கு வேறு எந்த மார்க்கமும் வலியுறுத்தவில்லை. உலக கல்வி வேறு, மார்க்கக் கல்வி வேறு என்று கல்வி இருகூறாக பிரிக்கப்பட்டுள்ளதின் பின்னனியில் யூதசூழ்ச்சிகள் இருப்பதையும், மார்க்கக் கல்வியோடு கூடிய உலக கல்விதான் உங்களுக்கு பயனளிக்கும் என்ற உண்மையையும் உணர்ந்து கொள்ளுங்கள். கல்வி கற்பதை நம் மார்க்கம் கடமையாக்கியுள்ளதை உணர்ந்து நீங்களும், உங்கள் குடும்பமும் அத்தகைய இருகல்விகளையும் ஒருங்கே பெற முயலுங்கள். பிரித்து வைக்கப்பட்டுள்ள இருகல்விமுறையை ஒன்றிணைக்கவும், இதைப்பற்றிய விழிப்புணர்வை நீங்கள் வாழும் பகுதியில் ஏற்படுத்திடவும் பாடுபடவேண்டும். உலக ஊடகங்கள் பொரும்பாலும் இஸ்லாத்திற்கெதிரான நச்சுக்கருத்துக்களை வெளியிடுவதையும், பொய்களைப் பரப்புவதையுமே மூலதனமாகக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவைகளை பிரித்தறிந்து உண்மையை விளங்கும் அளவிற்கு அறிவாற்றல் பெற்றவராக நீங்கள் திகழவேண்டும். ஊடகங்களில் வெளியிடப்படும் இஸ்லாத்திற்கெதிரான விஷயங்களை உணர்ச்சிப் பூர்வமாக அணுகிடாமல் அவற்றை அறிவுப்பூர்வமாக அணுகி உண்மை நிலையை உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும்.

7வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் இஸ்லாத்தையே முன்னிலைப் படுத்துங்கள். உங்களின் வேலைப்பளுக்கலோ, நீங்கள் வாழும் சுற்றுச்சூழலோ, அல்லது நீங்கள் வகிக்கும் பதவிகளோ நீங்கள் இறைவிசுவாசியாக வாழ்வதற்கும், மேற்காணும் நல்ல விஷயங்களை செயல்படுத்துவதற்கும் தடையாக இருப்பின் அத்தகைய நிலையைவிட்டு தெளிவான திட்டமிடலுடன் விரைவாக மீட்சிபெற முயலுங்கள். உங்கள் ஈமானை பலஹீனப்படுத்தி மறுமையை மறக்கடித்திடும் அளவுக்குள்ள பொருளீட்டலோ, வேலைப்பளுவோ, பதவிகளோ அல்லது சுற்றுச்சூழலோ அபாயகரமானது, அவசியமற்றது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். நான் மிகவும் வேலைப்பளு மிக்கவன், இஸ்லாமிய அறிவில் பலஹீனமானவன் என்பன போன்ற தாழ்வு மனப்பான்மையான, போலியான மாயையை விட்டொழித்து தன்னம்பிக்கையுடன் உங்கள் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் இஸ்லாத்தை முன்னிலைப்படுத்திட உறுதிகொள்ளுங்கள்.

இவ்வாக்கத்தில், நீங்கள், உங்களின், உங்களுடைய போன்ற முன்னிலை வாசகங்கள் எங்களையும் சேர்த்தே குறிக்கும். எனவே அவற்றை நாம், நமது, நம்முடைய என்ற பொருளில் புரிந்துகொள்ளவும். இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ள விஷயங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க முன்வரும் நன்மக்களாக நம் யாவரையும் ஆக்கிஅருள்வதற்கு வல்ல அல்லாஹ் போதுமானவன். ஷைத்தானிய இலுமனாட்டிகளின் சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற்ற முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ்ந்திட பிராத்தனைகளுடன் வாழ்த்தி முடிக்கிறோம்.

... எங்கள் கடமை இறைவனின் தூதுச் செய்தியை விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை(36:17)

எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (13:11)


இரகசிய சமுதாயம் - தொடர்-8

இரகசிய சமுதாயம் - தொடர்-8
மனிதத்தையே அழிக்கும் மாபாவிகள் பற்றி
இளைஞர்களே எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (95:4)

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56)

உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (15:99)

அல்லாஹ் மனிதர்களாகிய நம்மை மிகவும் அழகிய படைப்பாக படைத்துள்ளான். அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதற்காக படைக்கப்பட்டுள்ள மனித உடலில் ஆன்மா என்ற ரூஹூம் இரண்டரக் கலந்துள்ளது. இறைவனை மட்டுமே வணங்கவேண்டிய மனிதனை, இறை நினைப்பைவிட்டும் மாற்றி தாங்கள் வணங்கும் ஷைத்தானை வணங்கச்செய்வது எவ்வாறு என்று இந்த இலுமனாட்டி ஷைத்தான்கள் சிந்தித்தனர். இவர்களின் ஆராய்ச்சிபடி மனிதனின் சிந்தனை, செயலாற்றல் மற்றும் அவனுடைய உடல் இம்மூன்றையும் வசப்படுத்திவிட்டால் அம்மனிதனை தாங்கள் விரும்பியபடியெல்லாம் ஆட்டிப்படைக்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். அதன் அடிப்படையில் இவர்கள் மனித இனத்தின் புனிதத்தை எவ்வாறெல்லாம் அழிவிற்கு உட்படுத்துகின்றனர் என்பதை அறிந்துகொள்ள ஆக்கத்தை இறுதிவரை படியுங்கள்.



யோகாசனக் கலை மற்றும் உடற்கூறியல் தத்துவங்கள் படி மனித உடலமைப்பை 7 முக்கியப் பகுதிகளாக (சக்கரங்களாக)ப் பிரிக்கலாம். பௌதீகம் மற்றும் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட இச்சக்கரங்களில் ஒன்று கெட்டுவிட்டாலும் மற்றொன்று தானாவே கெட்டுவிடும். சக்கரங்கள், மற்றும் யோகாசனக் கலைகள் இந்து புராணங்களோடும், இந்துமத மரபோடும் கலந்துவிட்டபடியால் இவைகளை பற்றிய செய்திகள் முஸ்லிம் சமூகத்தில் பரவலாக அறியப்படவில்லை. இருப்பினும் இம்முக்கிய பகுதிகள் ஒவ்வொன்றையும் பாதுகாக்கும் வண்ணம் இஸ்லாமியக் கோட்பாடுகளும் அதன் சட்டதிட்டங்களும் அரண்போல அமைந்திருப்பதை அறியமுடிகிறது. முஸ்லிம்களின் இறைவணக்கக் கடமைகளில் ஒன்றான தினம் 5-வேளை தொழுகையானது மிகப்பெரிய யோகாசனப் பயிற்சி் என்பதை நினைவில் கொள்க. மனிதனின் சிந்தனை, செயலாற்றல் மற்றும் அவனுடைய உடல் இம்மூன்றையும் ஷைத்தானின் பிடியில் சிக்கிவிடாமல் தூய்மையான நிலையில் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வழிவகை செய்யும் அல்லாஹ்வுடைய மார்க்கமாகிய இஸ்லாம் எத்தகைய முழுமையான வாழ்க்கை நெறி என்பதை அறிந்து உண்மையிலேயே வியப்படைகிறோம் - அல்லாஹூஅக்பர். 
இச்சக்கரங்களில் மிக முக்கியமாக 1.புனிதச் சக்கரம் (Sacral Chakra) (மொழிபெயர்ப்பு மாற்றப்பட்டுள்ளது),2.தொப்புள் சக்கரம் (Navel Chakra) 3.இதயச் சக்கரம் (Heart Chakra),  4.தொண்டைச் சக்கரம் (Throat Chakra),  5.கீரிடச் சக்கரம் (Crown Chakra) என 5 சக்கரங்களைச் சொல்லலாம். இதனுடைய விளக்கங்கள் பின்வருமாறு.

புனிதச்சக்கரம் (Sacral Chakra) என்பது மனிதனின் மர்மப்பகுதிக்கு சற்று மேல்பகுதியில் அமைந்துள்ளது. இச்சக்கரம் மனிதனின் பாலியல் ஆற்றல் சம்பந்தப்பட்டது. Sacral என்ற ஆங்கிலச்சொல் Sacrum என்ற சொல்லிலிருந்து மறுவியது. Sacrum என்பதற்கு இடுப்பும் முள்ளந்தண்டும் இணையும் (Pelvic) பகுதியைக் குறிக்கும். இச்சக்கரத்தை முறைதவறி பயன்படுத்தினால் சக்திக்குப்பதிலாக அழிவு ஏற்படும். இஸ்லாமிய கோட்பாடு ஹலால், ஹாராம் என்று அனைத்தையும் பிரித்துவிடுகிறது. உதாரணமாக உடலுறவு என்பது திருமணத்திற்குப்பின்னர் கணவன் மனைவியருக்கு இடையே மட்டும்தான் நடைபெற வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகிறது. இது அல்லாத மற்ற வழிகள் அனைத்தும் ஹராம் என்று தடைபோடுகிறது. மேலும் விபச்சாரத்தின் பக்கம்கூட நெருங்காதீர்கள் என்று திருமறை குர்ஆன் கட்டளையிடுகிறது. இஸ்லாம் அறிவுருத்தியுள்ள இந்த சட்டங்களை எவர் மீறுகிறாரோ அவரின் புனிதச்சக்கரம் கெட்டு அழிவின்பால் இட்டுச்செல்லும், பின்னர் எயிட்ஸ் நோய் வந்து அவனையே கொல்லும்.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும் தீய வழியாகவும் இருக்கின்றது. (17:32)

எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சுவர்க்கத்திற்கு  நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)

தொப்புள் சக்கரம் (Navel Chakra) என்பது உங்கள் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. அதாவது நீங்கள் நல்ல தூய்மையான, ஆரோக்கியமான, இயற்கை உணவுகளை உட்கொள்ளும் போது அவற்றை ஆற்றலாக, சக்தியாக மாற்றும் கட்டமைப்பு கொண்டது இந்த தொப்புள் சக்கரப்பகுதி. அளவிற்கு அதிமான உணவுகள், அசுத்தமான உணவுகள், கேடுவிளைவிக்கும் உணவுகள் மற்றும் தேவையில்லாத உணவுகளை உட்கொள்ளும் போது இந்த தொப்புள் சக்கரம் கெட்டுவிடும். இதை பாதுகாக்கும் வகையில்தான் உடலுக்கு கேடுவிளைவிக்கும் உணவுகளை இஸ்லாம் ஹராம் - தடுக்கப்பட்டது என்கிறது. ஹாலான உணவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும் என்று அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் தெளிவாக கட்டளையிட்டு விட்டார்கள். ஹாராமான உணவால் வளர்ந்த உடம்பை உடையவரின் பிராத்தனை ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் ஒவ்வொருவரும் தானாக உழைத்துச் சாப்பிடவேண்டும், பிறர் உழைப்பிலிருந்து அனுமதியின்றி உண்ணாதீர்கள் என்றெல்லாம் இஸ்லாம் உணவு உட்கொள்ளும் விஷயத்தில் மிகத்தீவிரம் காட்டியுள்ளதைக் காணலாம்.

தானாகச் செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட அறுக்கப்பட்டதும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப்பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்துச் செத்தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. அனுமதிக்கப்பட்டவற்றில் எதை நீங்கள் உயிரோடு பார்த்து, முறைப்படி அறுத்தீர்களோ அதைத்தவிர (அதை உண்ணலாம்). அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச் சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன - இவையாவும் பெரும் பாவங்களாகும். இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை அழித்து விடலாம் என்பதைப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள் எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே இசைவானதாகத் தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து விட்டால் அது குற்றமாகாது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
 (5:3)

"தலை கலைந்து, புழுதி படர்ந்த நிலையில் நீண்ட பயணம் செய்யக் கூடிய ஒரு மனிதன், "என் இறைவா! என் இறைவா!'' என்று வானத்தை நோக்கி, தனது இரு கைகளையும் நீட்டுகின்றான். அவனுடைய உணவு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய குடிப்பு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய உடை ஹராமாக இருக்கின்றது. அவன் ஹராமிலேயே மூழ்கடிக்கப்பட்டு இருக்கிறான். இவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1686

இதயச்சக்கரம் (Heart Chakra) என்பது நமது உள்ளத்தைக் குறிக்கும். மனிதனுக்கு எண்ணங்கள் மூளைப்பகுதியிலிருந்து தூண்டப்பட்டாலும் உள்ளம் என்ற உடனேயே நாம் அனைவரும் இதயத்தைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். இரக்கம், பணிவு, அமைதி, கருணை, உணர்ச்சி, போன்ற மனிதப் பண்புகளின் உறைவிடமாய் விளங்குவதே இந்த இதயச்சக்கரம். ஒரு மனிதனின் இதயச்சக்கரம் சரியாக இருக்கும் போது அவர் மற்றவர்களிடம் மேற்கூறிய நல்ல பண்புகளோடு நடந்துகொள்வார். இதுவே வளர்ச்சியடைந்து சமூக அமைப்பில் மக்களிடையே நல்லிணக்க சூழலாக மலர்கிறது. இந்த இதயச்சக்கரம் கெட்டுவிடும் போது மக்களிடையே பரஸ்பர உணர்வு கெட்டு சண்டை சச்சரவுகள் மேலோங்கி இறுதியில் அந்த சமூகச்சூழலில் நிம்மதி அழிந்துவிடும். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் மேற்கண்ட நற்பண்புகளை மிகமிக வழியுருத்துவதை திருமறை குர்ஆனில் பரவலாகப் பார்க்கலாம். இஸ்லாம் என்ற சொல்லுக்கே சாந்தி, கட்டுப்படுதல் என்றுதானே பொருள். மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இரக்கம், பணிவு, அமைதி, கருணை போன்ற நற்குணங்களின் தாயகமாக வாழ்ந்து காட்டி அதையே அனைத்து  முஸ்லிம்களுக்கும் அறிவுருத்தியுள்ளதை கவனத்தில் கொள்க.

”நிச்சயமாக ஹலால் (அனுமதிக்கப்பட்டது) தெளிவாக்கப்பட்டு விட்டது” ஹராம் (விலக்கப்பட்டது) தெளிவாக்கப்பட்டுவிட்டது. இவை இரண்டிற்குமிடையில் சந்தேகத்திற்கிடமான பல உள்ளன. மக்களில் பெரும்பாலோர் இதைப் பற்றி அறியாமாட்டார்கள். எவர் சந்தேகத்திற்கிடமானதை விட்டுவிட்டாரோ அவர் தான் மார்க்கத்தையும், தன் மானத்தையும் காத்துக் கொண்டார். எவர் சந்தேகத்திற்கிடமானதில் விழுந்து விடுகிறாரோ அவர் ஹராமில் விழுந்து விடுகிறார். எப்படியென்றால் மேய்ப்பாளன் (தனது ஆடுகளை) வேலி வேயப்பட்ட வயல்களை சுற்றி மேய்க்கின்றான். அப்போது (அந்த ஆடுகள் வேலியைத் தாண்டி வயலில்) இறங்கி விடக் கூடும். அறிந்து கொள்ளுங்கள்! ஒவ்வோர் அரசனுக்கும் ஒரு வேலியுண்டு. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வினால் வேலி வேயப்பட்ட வயல்கள் அவனால் தடை செய்யப்பட்ட ஹராமான காரியங்களாகும். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சரியாகிவிட்டால், உடல் முழுவதும் சரியாகி விடும். அது கெட்டுவிட்டால், உடல் முழுவதும் கெட்டுவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அது இதயமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவிக்கிறார். நுஃமான் இதைக் கூறும்போது தமது இரண்டு காதுகளின்பால் தமது இரண்டு விரல்களைக் கொண்டு சென்றார். (புகாரீ, முஸ்லிம்)

தொண்டைச் சக்கரம் (Throat Chakra) என்பது கருத்தாற்றல், மொழி மற்றும் மனிதனை மனிதன் தொடர்பு கொள்வது சம்பந்தமான பகுதி ஆகும். நாம் பேசும் நாக்கு இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. நாக்கினால் வருகின்ற பிரச்சனைகளை நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. நாம் பொறுமையை இழக்கும் போது நாவு ஏதேதே பேசிவிடுகிறது. அதனால்தான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பேசினால் நல்லவற்றை பேசுங்கள் அல்லது மௌனமாக இருந்துவிடுங்கள் என்று கட்டளை பிறப்பித்துள்ளார்கள். மேலும் திருமறை குர்ஆன் தொண்டைச் சக்கரத்தை பயன்படுத்தும் முறையை கீழ்க்கண்டவாறு தெளிவுபடுத்துகிறது.

காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான நல்ல அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர அவர்கள் நஷ்டத்திலில்லை.
 (103:1-3)

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தராமல் இருக்கட்டும். யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும். இல்லையெனில் வாய் மூடி இருக்கட்டும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)

முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது எவருடைய நாவினாலும், கரத்தினாலும் ஏனைய முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறாரோ அவரே என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.(நூல்-புகாரி)

அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அவர் யார் ? என்று கேட்கப்பட்டது. ‘எவருடைய துன்பத்திலிருந்து அன்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’.
 (நூல்-புகாரி)

ஒரு மூஃமீன் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்கமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-திர்மிதி)

கீரிடச் சக்கரம் (Crown Chakra) என்பது மனிதனின் ஞானம் மற்றும் சிந்தனைத் திறனைக் குறிப்பதாகும். மதிநுட்பம், உள்ளளுணர்வு, விழிப்புணர்வு மற்றும் ஆன்மீக உணர்வு போன்றவற்றை இந்த கீரீடச்சக்கரம் கட்டுப்படுத்தும். மனிதனின் மூளைதான் இந்த கீரீடச்சக்கரத்தின் இயக்கத்திற்கு முக்கியப் பங்களிக்கிறது. இச்சக்கரத்தை மனிதன் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அவன் 5 அறிவு மிருகமாக மாறிவிடுவான்.

மேற்கூறிய 5 சக்கரங்களின் புனிதத்தை உணர்ந்து அவைகளை நல்ல வகையில் பயன்படுத்தி உங்கள் கட்டுக்குள் வைத்திருந்தால் மட்டுமே நீங்கள் முழுமையான மனிதனாக ஆகலாம். இதை திருமூலர் போன்ற பழங்கால தமிழ் சித்தர்கள்கூட கீழ்க்கண்டவாறு கூறியுள்ளனர்

    ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்.   நன்றே நினைமின் நமன் இல்லை
    உடம்பார் அழியின் உயிரார் அழிவர்.   திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே.   உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
    ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்.   ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
    ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்.   ஆசை விடவிட ஆனந்தம் ஆமே!

புனிதச் சக்கரம் முதல் கீரீடச்சக்கரம் வரை உள்ள பயன்பாடுகள் அதன் இயக்கம் போன்ற அனைத்து விஷயங்களையும் இந்த ஷைத்தானிய இலுமனாட்டிகள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். படைத்த இறைவனால் பாதுகாக்க வேண்டி அறிவுறுத்தப்பட்டு இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறிமூலம் அவைகளைக் கையாளும் முறைகளையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ள மேற்கூறிய சக்கரங்களின் செயல்பாடுகளை கெடுத்தால் மட்டுமே ஒரு மனிதனை ஷைத்தானிய வழிக்கு இட்டுச்செல்ல முடியும் என்பதை ஆராய்ந்து அவைகளின் சக்திகளை ஒவ்வொன்றான திட்டமிட்டு அழிக்கின்றனர். 

முதலாவதாக, புனிதச்சக்கரம் (Sacral Chakra) என்ற உங்கள் மர்ம உருப்புக்களின் இயக்கத்தைக் கெடுத்து உங்களை அழிவின் பக்கம் அழைத்து செல்ல பெண்களை அரைநிர்வானமாக, முழுநிர்வானமாக படமெடுத்து இவ்வுலகம்முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளதைக் காணலாம். ஆண்களுக்கு நிகராகப் பெண்களையும் இதே ரீதியில் வீழ்த்துவதற்கு பலான பாலியல் காட்சிகளில் ஈடுபடும் பெண்களை வெற்றிவாகை சூடிய பெண்ணாகக் காண்பித்து, பல பரிசுகளையும் வழங்கி கௌரவித்து இம்மானங்கெட்ட செயலை மற்ற பெண்களும் செய்யுமாறு தூண்டப்படுவதைப் பார்க்கிறோம். விபச்சாரத்தின் பக்கம் இழுத்துச் செல்லும் இத்தரங்கெட்ட செயலை பரப்புவதற்காக வேண்டி ஆயிரக்கணக்கான இணையதளங்கள், 24 மணிநேரத் தொலைக்காட்சிகள், இணைய தொலைபேசிகள் என்று அனைத்துவித ஊடகமும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதையும் கண்கூடாகக் காண்கிறோம். இத்தீய செயல்களால் உலக அளவில் ஏற்பட்டுள்ள அசிங்கங்களையும், கொடுமைகளையும், பல குடும்பங்களுக்குள் நிகழ்ந்துள்ள பாதிப்புக்களையும் சொல்லி மாளாது, அவைகளை எழுதவே கூசுகிறது. இவை அனைத்திற்கும் பின்னால் இலுமனாட்டிகள் என்று சொல்லப்படும் ஷைத்தானை வணங்கும் கூட்டத்தின் சூழ்ச்சி இருப்பது நம் எத்தனை பேருக்குத் தெரியும்?

எனவே முஸ்லிம் இளைஞர்களே, யுவதிகளே!  பாலியல், செக்ஸ், பாப்இசைகள், டிஸ்கோ நடனங்கள் என்று உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி உங்களை வீழ்த்தி நாசப்படுகுழியில் தள்ளும் இலுமனாட்டிகளின் மேற்கண்ட சூழ்ச்சிகளை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். சிற்றின்பத்திற்காக வீழ்ந்து பேரின்பத்தை இழந்துவிடாதீர்கள் என்று கனத்த உள்ளத்தோடு அறிவுருத்துகிறோம்.

தீமையான சூழ்ச்சிகளைச் செய்யும் அவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ, அல்லது அவர்கள் அறியாப் புறத்திலிருந்து அவர்களை சேதனை வந்து அடையாதென்றோ அவர்கள் அச்சந்தீர்ந்து இருக்கின்றார்களா? (16:45)

நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் இவ்வாறே சூழ்ச்சிகள் செய்தார்கள் அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டிடத்தை அடிப்படையோடு பெயர்த்து விட்டான். ஆகவே அவர்களுக்கு மேலே இருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது. அவர்கள் அறிந்து கொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது.
 (16:26)

இரண்டாவதாக, தொப்புள் சக்கரம் (Navel Chakra) என்ற நமது வயிற்றுப் பதியை கெடுப்பதற்காக நாம் உண்ணும் உணவில் இயற்கைத்தன்மையை அழித்து சுவைபோல தோன்றும் மெக்டொனால்ட்ஸ், KFC போன்ற செயற்கை உணவுகளுக்கு நம்மை அடிமைப்படுத்துகின்றனர். இவ்வகை உணவுகளில் இஸ்லாம் தடைசெய்தவைகள் வேண்டுமென்றே கலக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க, இத்தகைய உணவுகளை உட்கொள்ளும் ஒருவர் பருமந்தனம் (Obesity) நோய்களால் அவதிப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம். மெக்டொனால்ட்ஸ், KFC முதல் பெப்ஸி, கொக்காகோலா வரையுள்ள இத்தகைய உணவுகளுக்கு அரபு முஸ்லிம் உலகமே அடியாகிவிட்ட நிலையை அங்குள்ளவர்கள் அறிந்தேயிருப்பர். மேற்கண்ட உணவு வகைகள் அமெரிக்க பிரிட்டானிய தயாரிப்புகளாக இருப்பினும் அரபுநாடுகளில் அவர்களுக்குக் கிடைக்கின்ற விற்பனையில்தான் அந்நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடைந்து கொண்டிருப்பது உண்மையிலும் உண்மை.

எனவே இஸ்லாமிய இளைஞர்களே, யுவதிகளே! பாஸ்புட், பேஸன்புட் என்ற பெயரால் உங்கள் உடலுக்கு சேரவேண்டிய சக்தியை இழந்துவிடாதீர்கள். உங்கள் தாய்மார்கள், உங்கள் மனைவியர், வீட்டில் தாயாரிக்கும் உணவு இத்தகைய கலப்பின உணவுகளை விட பலமடங்கு தரமானது, சக்திமிக்கது என்பதை அறிந்துகொள்ளுங்கள். பெப்ஸி, கொக்காகோலாவிற்கும் மெக்டொனால்டஸ், KFC போன்ற உணவு வகைகளுக்கு ஒருபோதும் அடிமையாகி விடாதீர்கள். ஒரு பலம்குன்றிய முஃமினைவிட பலமாக முஃமின் சிறந்தவனாவான் என்ற நபிமொழிக்கொப்ப இந்த தஜ்ஜாலிய, ஷைத்தானியக் கூட்டத்தை எதிர்கொண்டு அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் வெற்றிபெற வேண்டுமென்றால், ஆரோக்கியமும் சக்தியும் உங்களுக்கு மிகமிக அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இதயச் சக்கரம் (Heart Chakra) மற்றும் தொண்டைச் சக்கரங்களை (Throat Chakra) செயலிழக்கச்செய்வதற்கு உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி இரக்கம், பணிவு, அமைதி, கருணை போன்ற நற்குணங்களுக்குப் பதிலாக உங்களிடம் வெறுப்பு, ஆத்திரம், அமைதியின்மை, கோபம் போன்ற தீய குணங்களை வெளிப்படுத்துவதற்கு இந்த இலுமனாட்டிகள் தூண்டுவார்கள். உங்களை நிதானம் இழக்கச்செய்து பின்னர் உங்கள் செயல்களின் மூலமாகவே இஸ்லாத்திற்கு கலங்கத்தை கற்பிக்கத் தூண்டுவார்கள். இதற்கு சிறந்த உதாரணங்களாக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு சமீபத்தில் கேலி சித்திரம் வரைந்து வெளியிட்டது, ஈராக் அபூகிரைப் சிறையில் முஸ்லிம்களை நிர்வானமாக விட்டு கொடுமைபடுத்தி அப்படங்களை வெளியிட்டு முஸ்லிம் உலகை புண்படுத்தியது, மேலும் ஈராக், ஆப்கான், பாலஸ்தீன குழந்தைகளின் பிஞ்சு உடல்களை துப்பாக்கித் தோட்டாக்களால் துளையிட்டு கொடூரமாகக் கொலை செய்து காட்டியது, இஸ்லாமியத் தீவிரவாதம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று தொடர்ந்து மீடியாக்களில் மீண்டும் மீண்டும் பொய்யுரைப்பத என்று இந்த இலுமனாட்டிகளின் சூழ்ச்சிகளை அடிக்கிக்கொண்டே போகலாம்.

எனவே முஸ்லிம் இளைஞர்களே, யுவதிகளே! உங்கள் மனதை பாதிப்படையச் செய்யும் இத்தகைய சூழ்ச்சிகளின் போது நீங்கள் மிகவும் கனவமாகவும், அறிவுப்பூர்வமாகவும் நடந்துகொள்ள வேண்டுமே அல்லாமல் உணர்ச்சிகளுக்கு ஆளாகி உணர்ச்சிப்பூர்வமாக நடந்துவிடக் கூடாது என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள் ஆனால் அவர்கள் அறியாதவாறு நாமும் சூழ்ச்சி செய்தோம். ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! முடிவு அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் எல்லோரையும் நாம் அழித்தோம். ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் அதோ அழந்து போன அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன் நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது. (27 : 50,51,52)

இறுதியாக உங்கள் கீரிடச் சக்கரம் (Crown Chakra) என்னும் உங்கள் சிந்தனைத்திறனையும், மதிநுட்பத்தையும் திசை திருப்பி இலுமனாட்டிகளின் சதித்திட்டங்களை நீங்கள் உணர்ந்துவிடாமல் இருக்க வேற்றுகிரகத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள் (Aliens) என்று ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளை வைத்து சொல்ல வைப்பார்கள். மேலும் ஹார்ப் தொழிநுட்பம் (HAARP), ஸ்டார் வார்(Star War), பறக்கும் மர்மத்தட்டு என்றெல்லாம் கூறி உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவார்கள். பின்னர் அவர்கள் அறிவியல் ஆய்வு என்று எதையெல்லாம் கூறுகிறார்களோ அவைகள் அனைத்தையும் உண்மை என்று உங்களை நம்பவைப்பார்கள். இறுதியில் மனித உயிரின் மூலத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்பதுபோன்ற அல்லாஹ்விற்கு இணைவைத்தலை மறைமுகமாக திணித்து அவைகளையும் நம்பச் செய்வார்கள்.

எனவே இஸ்லாமிய இளைஞர்களே, யுவதிகளே! இப்பூமியைத்தான் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அல்லாஹ் ஆக்கியுள்ளானே தவிர வேற்றுகிரகங்களில் எந்தமனிதனும் சுயமாக வாழ இயலாது என்பதையும், அல்லாஹ்வைத்தவிர வேறு எவனாலும் உயிரை படைக்க இயலாது என்ற குர்ஆன் கூறும் உண்மையையும் கவனத்தில் கொள்ளுங்கள். இலுமனாட்டிகளின் பொய்ப் பிரச்சாரங்களையும், சூழ்ச்சிகளையும் தெளிவாக அடையாளம் காணவேண்டுமென்றால் அவர்களின் மாயாஜால உலகமாயைகளை விட்டும் விடுபட்ட முழுமனிதனாக நீங்கள் மாறவேண்டும். அவ்வாறு மாறுவதற்கு மேற்கூறிய சக்கரங்களான புனிதச் சக்கரம் (Sacral Chakra), தொப்புள் சக்கரம் (Navel Chakra) இதயச் சக்கரம் (Heart Chakra), தொண்டைச் சக்கரம் (Throat Chakra), கீரிடச் சக்கரம் (Crown Chakra) ஆகிய அனைத்தையும் இஸ்லாம் கூறுகின்ற அடைப்படையில் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மிகமிக 
அவசியமாகும்.
முஸ்லிம்களே! கிபி 1600 வரை ஐரோப்பா இருண்ட கண்டமாக இருந்தபோது இவ்வுலகிற்கே அறிவொளியைப் பாய்ச்சி ஆரோக்கியமான அறிவியில் ஆராய்ச்சிக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் வித்திட்டவர்கள் நமது அப்பன் பாட்டன்களான முஸ்லிம் அறிஞர்களே என்பதை நினைவில் வையுங்கள். அத்தகைய எழுச்சிமிகு காலத்தை இவ்வுலகில் மீண்டும் ஏற்படுத்திட இக்கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இலுமனாட்டிகளின் ஜாஹிலிய்யாக்களை தகர்த்தெரியும் இஸ்லாமிய அறிஞராக, முஸ்லிம் விஞ்ஞானியாக மாறவேண்டும். இறைமார்க்கமாம் இஸ்லாத்தை எட்டுத்திக்கும் பரவச்செய்ய இஸ்லாமிய இளைஞர்கள் முன்வரவேண்டும். அத்தகைய இஸ்லாமிய பேரெழுச்சி இவ்வுலகில் விரைவில் ஏற்படஇருகரமேந்தி இறைவனிடம் பிராத்திக்கிறோம்.
இன்னும் அவர்கள் தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள். (25:73).

பின்குறிப்பு:- இலுமனாட்டிகள் பற்றிய இத்தொடர் கட்டுரைகளை நாம் வெளியிடும் நோக்கத்தை முதல் தொடரிலேய விளக்கிவிட்டோம். நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி சக்கரங்கள் பற்றிய கருத்துக்கள், ஆய்வுகள் அனைத்தும் இந்து மத போதனைகளை ஒட்டியே போதிக்கப்படுவதால் நாம் மேலோட்டமாக அதைத் தெரிவித்திருக்கிறோம். இக்கட்டுரையிலிருந்து இலுமனாட்டிகளின் சூழ்ச்சிகளை மட்டும் நினைவில் வைக்குமாறு ஒற்றுமை வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

 



தொடரும் இன்ஷா அல்லாஹ்...

இரகசிய சமுதாயம் - தொடர்-7


இரகசிய சமுதாயம் - தொடர்-7
த டாவின்ஸி கோட் நொருங்கியக் கனவுகள்
ARAGO   -   BLOOD LINE  -   ROSE LINE
Hides beneath the rose.  The Holy Grail 'neath ancient Rosline waits,
Adorned in the masters' loving art, she lies.  The Blade and Chalice guarding o'er her gates,
S  H  E      R  E  S  T  S     A  T      L  A  S  T      B  E  N  E  A  T  H      S  T  A  R  R  Y      S  K  I  E  S
கடந்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவ்ன் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நாவல்தான் த டாவின்சி கோட். 44மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்த புத்தகம் 80மில்லின் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அந்த நாவலை கருப்பொருளாகக் கொண்டு இயேசு கிருஸ்துவுக்கும் மகதலேனா மரியாள் என்ற மேரி மெக்டலினுக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் உண்டும் என்று புனைந்து, கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த நாவலின் பெயராலேயே திரைப்படம் தயாரித்து வெளியிட்டனர்.  கிருஸ்தவக் கோட்பாட்டை தரைமட்டமாக்கும் இந்த ஹாலிவுட் திரைப்படத்திற்கு உலகெங்கிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் உயிராக மதிக்கும் சங்கைக்குரிய இறைதூதர் நபி ஈஸா (அலை) அவர்களை த டாவின்சி கோட் திரைப்படம் அவமரியாதை செய்திருப்பதை அறிந்து உலக முஸ்லிம்கள் தங்களின் கண்டனக்குரலை ஆழமாக பதிவுசெய்தனர்.
பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வழக்கம்போல இத்திரைப்படம் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுவிட்ட நிலையில் உலகமக்களும் தங்கள் சொந்த வேலைப்பளுவில் டாவின்சி கோடை தற்போது மறந்துவிட்டனர்.
இப்படத்தின் தாயாரிப்பாளர்கள், இயக்குளர்கள் என்று (Ron Howard – Director, Brian Grazer – Producer, John Calley – Producer, Dan Brown - Executive Producer, Book Author, Todd Hallowell - Executive Producer, Second) அனைவரும் இல்லுமனாட்டிகளின் கைப்பாவையாக செயல்பட்டு அவர்களது திட்டத்தை கனகச்சிதமாக நிறைவேற்றினர். நமது இக்கட்டுரையின் நோக்கம் டாவின்சி கோட் படத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டுள்ள இலுமனாட்டி ஷைத்தானியக் கூட்டத்தின் திட்டங்களை வெளிக்கொண்டு வருவதே! ஹாலிவுட் திரைப்படம் உள்ளிட்ட மீடியாக்கள் மூலம் இந்த இல்லுமனாட்டி கும்பல்கள் எப்படியெல்லாம் தங்கள் சூழ்ச்சிகளை நிரைவேற்றுகின்றனர் என்பதை இவ்வாக்கத்தை இறுதிவரை படித்தால் புரியும்.

இந்த டாவின்சி கோட் ஹாலிவுட் திரைப்படத்தின் மூலம் 3 முக்கிய விஷயங்கள் பதிவு செய்யப்பட்டன. அவைகள் பின்வருமாறு

1.இயேசுவிற்கும் மகதலேனா மரியாள் என்ற மேரி மெக்டலினுக்கும் திருமணமானது. அந்த திருமணத்தின் மூலம் இயேசுவிற்கு குழந்தையும் பிறந்தது. உலகப்புகழ்பெற்ற ஓவியர் லியொ நார்டோ டாவின்ஸி, தான் வரைந்த இயேசுவின் இறுதி இராப்போசனம் என்ற ஓவியத்தின் மூலம் இச்சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே இயேசுவும் மேரிமெக்டலினும் கணவர் மனைவியர்தான்.

2.மிரோவிஞ்ஜியன் என்பது இயேசுவின் இரத்தபந்தம். மேரிமெக்டலின் மூலம் தொடர்ந்த அந்த இரத்தபந்தத்தில் பிறந்த இறுதி நபர் ஃபிரான்ச் நாட்டில் உள்ளார். எனவே இயேசுவின் சந்ததி என்னும் சங்கிலித்தொடரும், இது சம்பந்தமான உண்மைகளும் கடந்த 2000 வருடங்களாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
3.இத்திரைக்கதையின் மூலம் இவ்வுலகில் தோன்றிய மதங்கள் அனைத்தும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவையே என்று சொல்லாமல் சொன்ன அதே வேளையில் ஷைத்தானை வணங்குபோன்ற காட்சிகள், எகிப்த்திய பரமிடுகளிலுள்ள ஷைத்தானிய சித்திரங்கள் மற்றும் இல்லுமனாட்டிகள் தங்கள் லூசிஃபர் கடவுளை சித்தரிப்பதற்காக வரைந்து தள்ளியுள்ள ஓவியங்கள் என்று அனைத்தையும் இப்படத்தில் பதிவுசெய்தனர்.

... அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் இறை நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களே தவிர வேறில்லை. எனினும் அவர்கள் இதை உணர்ந்து கொள்ளவில்லை. (2:9)

யார் இவ்வேத உண்மைகளை நிராகரிக்கிறார்களோ, இன்னும் நிராகரிக்கும் காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும். (2:161)


இதில் முதல் விஷயத்திற்கு வருவோம். இயேசுவிற்கு திருமணம் முடிந்தது என்ற விபரத்தை இயேசு சொன்னாரா? அல்லது மேரி மெக்டலினாவது சொன்னாராஇத்தகவலைக் கூறும் இயேசுவின் உண்மையான சுவிசேஷம் எங்கே?அல்லது இயேசுவிற்குப் பிறகு இயற்றப்பட்ட பைபிளிலாவது இச்சம்பவம் பற்றி குறிப்பேதும் உண்டா? என்றெல்லாம் பலர் கேட்டு முடித்துவிட்டனர். இதில் நாம் சொல்வது என்ன வென்றால், அணுவின் திரணை உலகிற்குச் சொன்ன ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளையே இந்த இலுமனாட்டிகள் தங்கள் வலையில் வீழ்த்தி அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த போது, இந்த லியொ நார்டோ டாவின்ஸி என்ற ஓவியர் எம்மாத்திரம்ஒருவேளை இயேசுவின் இறுதி இராப்போசனப் படத்தில் மேரிமெக்டலின் உருவத்தை மறைமுகமாக வரைந்துவிடு இல்லாவிட்டால் உன் கையை வெட்டிவிடுவோம் என்று அவரை இக்கொலைகார இல்லுமனாட்டிகள் மிரட்டியிருப்பார்கள். அல்லது லியொ நார்டோ டாவின்ஸியே இந்த ஷைத்தானை வணங்கும் லூசிஃபர் கூட்டத்தைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம். டாவின்சி கோட் மூலம் இந்த உண்மையை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் அவ்வளவுதான்.

இயேசுவும் மேரிமெக்டலினும் கணவர் மனைவியர் என்ற பொய்யை இவர்கள் எத்தனை ஹாலிவுட் படங்களை வெளியிட்டுக் காட்டினாலும் உலகமக்கள் நம்பத் தயாரில்லை என்பதை இவர்களே விளங்கிக் கொண்டார்கள். இயேசுவைக் கடவுளாகக் கருதும் கிருஸ்தவர்களே இக்கூற்றை நிராகரித்துவிட்டபடியால் டாவின்ஸி கோட் திரைப்படம் மூலம் இவர்கள் பரப்பப நினைத்த இவர்களின் முதற்கனவு தவிடுபொடியானது.

நபியே! இன்னும், சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும் என்று கூறுவீராக. (17:81)
இரண்டாவதாக மிரோவிஞ்ஜியன் இரத்தபந்தம் என்பது இயேசுவின் இரத்தபந்தம் என்று இத்திரைப்படம் மூலம் சொல்லப்பட்டுள்ளது. நாம் ஆய்வு செய்த வரையில் மிரோவிஞ்ஜியன் வம்சவழி இயேசுவிற்கு முந்திய காலத்தில் வாழ்ந்த யூதர்களின் வம்சவழியாகவோ அல்லது இரண்டாம் ரம்ஈஸஸ் என்று அழைக்கப்பட்ட கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் சந்ததியாகவோ இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மிரோவிஞ்ஜியன் இரத்த பந்தம் என்பது ஏசுவின் வம்சவழியினர் என்றால் மிரோவிஞ்ஜியன் இனம் சம்பந்தப்பட்ட ஆவனங்களில் இயேசுவுடைய கொள்கை கோட்பாடுகள், அவர் சம்பந்தப்பட்ட வரலாறுகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் கிருஸ்தவர்கள் நம்புவது போல இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றாவது சித்திரங்கள் இருக்கவேண்டும். ஆனால் மிரோவிஞ்சியன் வம்சவழி ஆவனங்களில் பிரமிடுகளும், ஃபிர்ஆவ்ன் காலத்தில் கடவுளாக வணங்கப்பட்ட சிலைகளும், அன்றைய இஸ்ரவேலர்களின் பழக்கத்தில் இருந்த நாணயங்களுமே காட்டப்படுகின்றன.

எது எப்படி இருந்தாலும் பாதுகாக்கப்பட்ட உண்மை இறைவேதமாம் திருமறை குர்ஆனின் போதனைபடி சங்கைக்குரிய இறைத்தூதர் இயேசு என்ற நபி ஈஸா (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைபடி தந்தை இல்லாமல் பிறந்தார்களே தவிர எந்த ஆணுடைய இரத்தக்கலப்பினாலும் அவர்கள் உருவாகவில்லை. மேலும் அவர்கள் மேரி மெக்டலினைத் திருமணம் செய்தார்கள் என்ற தகவலை திருமறை குர்ஆனோ, அல்லாஹ்வின் இறதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களோ கூறவில்லை என்பதால் முஸ்லிம்களாகிய நாம் இவ்விஷயத்தில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இந்த மிரோவிஞ்ஜியன் இரத்தபந்தம் பற்றி இஸ்லாமிய வரலாற்று அறிஞர்கள் ஆய்வு செய்தால் இதில் பொதிந்துள்ள பல மர்மங்கள் மேலும் வெளிச்சத்திற்கு வரலாம்.

ஒரு விவாதத்திற்காக நாம் த டாவின்சி கோட் திரைப்படம் சொல்வது போன்றே மிரோவிஞ்ஜியன் என்பது இயேசுவின் இரத்தபந்தம் என்றே வைத்துக்கொள்வோம், நாம் கேட்பது என்னவென்றால் 2000 ஆண்டுகளாக இயேசுவின் இரத்தபந்தத்தையே பாதுகாக்கத் தெரிந்த மிரோவிஞ்ஜியன் குடும்பத்தினருக்கு, இயேசுவிற்கு கடவுள் வழங்கிய உண்மை சுவிசேஷத்தை பாதுகாக்கத் தெரியாமல் போய்விட்டதா? இயேசுவிற்கு பின்னர் தோன்றிய பவுலும் அவரது வகையறாக்களும் எழுதித்தள்ளிய விஷயங்களை புனித வேதமாக உலக கிருஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இயேசுவிற்கு கர்த்தர் நேரடியாக வழங்கிய சுவிசேஷமான இன்ஜீல் வேதத்தை பாதுகாத்து அதை இவ்வுலகிற்கு வழங்கியிருந்தால் எவ்வளவு பிரயோஜனமாக இருந்திருக்கும்?இயேசுபிரானின் நேரடிக்கட்டளைகளை பின்பற்றுவது நன்மையைத்தருமா? அல்லது இயேசுவிற்கு பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டதை பின்பற்றுவது நன்மையைத் தருமா? இயேசுபிரானின் நேரடிக்கட்டளைகளை பின்பற்றுவது இயேசுவின் அன்பைப் பெற்றுத்தருமா?, அல்லது இரத்தபந்தம் புண்ணாக்குபந்தம் என்று கதையளந்து இயேசுவின் கட்டளைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு அவர் எச்சரித்த லூசிஃபர் சாத்தானையே கடவுளாக வணங்குவது இயேசுவின் அன்பைப் பெற்றுத்தருமா? என்பதை இந்த இல்லுமனாட்டி போலி மிரோவிஞ்ஜியன்கள் சற்று சிந்திப்பார்களாக. இவர்கள் எங்கே இயேசுவின் சுவிசேஷத்தை பாதுகாத்திருப்பார்கள், இயேசுவிற்கு வழங்கப்பட்ட சுவிசேஷத்தில் கலப்படம் செய்து அதை ஒழித்துக்கட்டும் வேளையில் வேண்டுமென்றால் இவர்களின் முன்னோர்கள் இறங்கியிருப்பார்கள் என்று எண்ணுகிறீர்களா? அதுவும் சரிதான்.

மக்களே! இயேசு, இரத்தபந்தம், மிரோவிஞ்ஜியன் வம்சம் என்பதெல்லாம் இவர்களின் குறிக்கோளில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்கும். இல்லுமனாட்டிகளைப் பொருத்தவரையில் லூசிஃபர்தான் மம்மி மற்றவைகள் அனைத்தும் டம்மிகளே!. ஆம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இல்லுமனாட்டிகளின் அடிவருடிகள் கோடைகால ஆன்மீகச் சடங்கு என்ற பெயரால் லூசிஃபர் ஷைத்தானை வெளிப்படையாகவே வணங்கியதையும், ஷைத்தானுடைய பெயரால் மந்திரங்கள் புரிவதற்கு குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பதுபோல திரைப்படங்களில் காட்டப்படுவதையும் கீழுள்ள வீடியோக்கள் மூலம் பார்த்துக் கொள்ளுங்கள்.


இன்னும் சொல்லப்போனால் இயேசுவின் இரத்தபந்தத்தைப் பாதுகாப்பதிலாவது இவர்கள் உண்மையாளர்களாக இருந்தார்களா என்றால் அதுவுமில்லை. ஃபிரான்ஸ் நாட்டின் ஸ்பென்சர் ராஜபரம்பரையில் பிறந்த இளவரசி டயானாவை இயேசுவின் இரத்த பந்தத்தில் இறுதியாக தோன்றியவள், மிரோவிஞ்ஜியன் இனத்தில் இயோசுவின் புனித இரத்தத்தை பாதுகாக்கும் புனிதக்கிண்ணம் என்றுதானே டயானாவை இளவரசர் சார்லஸூக்கு மணமுடித்து வைத்தனர். பிறகு ஏன் இவர்களாகவே டயானாவின் கதையை முடித்தார்கள்? (பார்க்க). இயேசுவின் இரத்தபந்தம் உலகமுடிவு நாள்வரை பாதுகாக்கப்படவேண்டும் என்றல்லவா இவர்கள் எண்ணியிருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் அல்லவா இவர்கள் இறங்கியிருக்க வேண்டும். மிரோவிஞ்ஜியன் வம்சம் பல்கிப் பொருக வேண்டுமெனில் இளவரசி டயானா பல குழந்தைகளைப் பெற்று அவளின் வம்சம் இவ்வுலமுழுவதும் பரவவேண்டும் என்று நினைப்பார்களா அல்லது அவளையே கொலை செய்வார்களா? சற்று யோசித்துப்பாருங்கள். எனவே இளவரசி டயானாவை படுகொலை செய்ததற்குப் பின்னர் இவர்களின் சுயரூபம் மேற்கத்திய சமூகத்திற்கே தெரிந்துவிட்டது. இந்நிலையில 2000வருடங்களாக இயேசுவின் இரத்த வழியை பாதுகாத்து வருகிறோம் என்ற இவர்களின் பொய்யையும் எத்தனை ஹாலிவுட் திரைப்படம் எடுத்து வெளியிட்டாலும் உலகம் நம்புவதற்குத் தயாரில்லை என்பதை உலகமக்கள் இத்திரைப்படத்திற்கெதிரான தங்கள் எதிர்ப்புகளை பிரதிபலித்ததின் மூலம் டாவின்ஸி கோட் திரைப்படத்தால் இவர்கள் நிறைவேற்ற நினைத்த இரண்டாவது திட்டமும் நொருங்கிப்போனது.

நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம் அதனால், சத்தியம் அசத்தியத்தின் சிரசைச் சிதறடித்துவிடுகிறது. பின்னர் அசத்தியம் அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் கற்பனையாக இட்டுக்கட்டி வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.
 (21:18)

இவர்களின் மூன்றாவது திட்டமான மீடியாக்களில் தங்கள் லூசிஃபர் கடவுளை அறிமுகப்படுத்தி, ஷைத்தானிய, ஃபிர்அவ்னிய சித்திரங்களை பிரபலப்படுத்துவதாகும்.


மேற்காணும் இத்தகைய படங்களை நாம் அன்றாடம் பயன்படுத்தும் வணிகப் பொருட்கள், அழகு சாதனங்கள், ஆடைகள் போன்றவற்றில் பார்வையிடலாம். குறிப்பாக குழந்தைகளின் ஆடைகள் மற்றும் அவர்களின் விளையாட்டு சாதனங்களிலும், கார்ட்டூன்கள் மற்றும் வீடியோகேம்களில் வரும் கதாபாத்திரங்களிலும் இப்படங்களைக் காணலாம். மேலும் பிரமிடுகளைப் பிரதிபலிப்பது போன்று அடுக்கமாடி கட்டிடங்கள் பல கட்டப்படுவதையும், பல கட்டிடங்களின் உள்ளரங்கு அலங்காரங்களில் இத்தகைய படங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் பரவலாகக் காணலாம்.

இன்னும் சொல்லப்போனால் இந்த சித்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட பல ஹாலிவுட் திரைப்படக் காட்சிகளில் ஒருசிலவற்றை இங்கு தந்துள்ளோம், பதிவிறக்கம் செய்து பார்த்து விழிப்படையுங்கள்.



மேற்காணும் மூன்றாவது திட்டத்தில் இலுமனாட்டிகள் தற்போதைக்கு வெற்றி பெற்றிருப்பது போல தோன்றினாலும் உலக மக்கள் விரைவில் விழிப்படைந்து இதிலும் பெரும் தோல்வியைத்தான் தழுவ இருக்கிறார்கள் - இன்ஷா அல்லாஹ். இதை எப்படி சொல்கிறோமென்றால் இந்த இல்லுமனாட்டி ஷைத்தானியக் கூட்டத்தின் சதித்திட்டங்களை தோலுரிக்கும் கட்டுரைகளை நமது இணையதளத்தின் மூலம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ். சில நாட்களாக வெளிவரும் இந்த கட்டுரைகளுக்கு ஐம்பதாயிரத்திற்கும் (50,000) மேற்பட்ட ஹிட்ஸூகள் பதிவாகியுள்ளது. நாம் எதிர்பார்த்த அளவைவிட பல ஆயிரக்கணக்கானோர் இப்பதிவுளை பார்த்து படித்து பயனடைந்துள்ளனர். மேலும் பலர் தங்களின் மனநிறைவான கருத்துக்களை நமக்கு எழுதிய வண்ணம் உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ் அனைத்து புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!. மிகக் குறைந்தளவு ஆற்றல் கொண்ட ஒற்றுமை இணையக் குழுவினராலேயே இந்த இலுமனாட்டி ஷைத்தான்களை இவ்வளவு தூரம் அடையாளம் காட்டமுடிகிறது என்றால், ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் விழிப்படைந்து இவர்களின் சூழ்ச்சிக்கெதிராக கிளம்பினால் என்ன ஆகும் என்பதை சிந்தித்துப் பார்க்கிறோம், அந்த காலம் வெகுதூரத்தில் இல்லை.

இவர்களின் மூன்றாவது திட்டத்தின் மற்றொரு பகுதியான மதங்கள் அனைத்தும் மனிதனால்  இயற்றப்பட்டவையே என்ற கற்பனையை நிலை நாட்டுவதிலும் பெரும் தோல்வியைத்தான் தழுவியுள்ளார்கள். இத்திரைப்படம்வெளியிடப்பட்டு 4 வருடங்கள் உருண்டோடிய நிலையிலும், இஸ்லாத்திற் கெதிரான இந்த இலுமனாட்டி ஷைத்தான்களின் பொய்ப் பிரச்சாரங்களையும் வெற்றிகொண்டு இவ்வுலகில் இன்றும் வேகமாகப் பரவும் மார்க்கம் இஸ்லாம் என்ற உண்மை மேற்கண்ட இவர்களின் கனவுகளை  தவிடுபொடியாக்குகிறது. இவர்களின் ஆதிக்கம் முழுஅளவில் இருக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் கூட நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இஸ்லாம் அசுர வேகத்தில் பரவிவருவதை வைத்து இஸ்லாம் உண்மையான இறைமார்க்கம்தான் என்பதை இவர்களும் நம்பித்தான் ஆகவேண்டிய என்ற கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
நிச்சயமாக தீனுல் இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமாகும். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் இதுதான் உண்மையான மார்க்கம் என்னும் அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக இதற்கு மாறுபட்டனர்;. எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய கணக்கைத் துரிதமாக முடிப்பான்(3:19)

இன்னும் இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் அது ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அத்தகையவர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (3:85)

நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் மரணத்தற்குப் பின்னும் மீள வைக்கிறான். அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன் மிக்க அன்புடையவன். அவனே அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன். தான் விரும்பியவற்றைச் செய்கிறவன். (85 :12-16)
 


தொடரும் இன்ஷா அல்லாஹ்.