Pages

Monday, September 16, 2013

ஜமாத்தே இஸ்லாமி , இக்வான் சகோதரர்களுக்கு மனம் திறந்த மடல் :

________________________________________

உலக முஸ்லிம்களை காபிர்கள் என்று சொல்லும் வழிகெட்ட கொள்கையை கொண்டுவந்ததே வழிகெட்ட இக்வானிய கூட்டம்தான். செய்யித் குதுப் உலக முஸ்லிம்கள் அனைவரும் காபிர்கள் ஆகிவிட்டனர் என்றார் ஆனால் இன்று வந்த வழிகெட்ட கர்ளாவி செய்யித் குதுப் வழிகேடர் என்றார். மேலும் வழிகேட்ட மவ்தூதி தஜ்ஜாலின் வருகையை மறுத்துள்ளார், எவருமே மறுக்க முடியாத தஜ்ஜாலின் வருகை பற்றிய "முதவாதிரான" ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் தவறாக சொல்லிவிட்டதாக நபி (ஸல்) அவர்களை பிழை காண்கிறார் மவ்தூதி.

இக்வாங்களின் தலைவர் உமர் தில்மிசாணி கபுர்வணக்கம் செய்வது சரி என்கிறார். எடுத்த எடுப்பில் யாரையும் நாம் வழிகேடு என்று சொல்லவில்லை உசூல் விதிகளை பேணி ஆய்வு செய்து அதில் பிழை வந்தால் வழிகேடு அல்ல ஆனால் இஸ்லாத்தில் "மா உளிம பி அத்தீனி பிள்ளரூரா " என்ற மிகவும் அறியப்பட்ட விடயங்களில் அத்து மீறி இஜ்திஹாத் செய்து வலிகேடான பத்வா சொல்லும் கூட்டத்தையே நாம் வழிகேடு என்று சொல்கிறோம்.

பன்றிக்கொழுப்பு ஹராம் என்று அறியப்பட்டது அதை ஹலால் என்று கர்ளாவி சொல்கிறார், கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்து சொல்வது ஹராம் இதை கூடும் என்று கர்ளாவி சொல்கிறார், அல்லாஹ்வுக்கு அர்ஷ் எனும் சிம்மாசனம் உள்ளது என்று கருத்து வேறுபாட்டுக்கு அப்பாற்பட்ட விடயத்தை செய்யித் குதுப் இல்லை என்கிறார், இது இது வழிகேடு இல்லையா ? நன்மை தீமை அளக்கும் மீசான் எனும் தராசு பற்றி அல்லாஹ் சொல்லியிருக்க அது இல்லை என்று செய்யித் குதுப் அல்லாஹ்வுக்கு பாடம் சொல்லிகொடுக்கிறார் இது வழிகேடு இல்லையா ?..............

பெண்களுக்கு கைகொடுப்பது ஹராம் என்று அறியப்பட்ட விடயம் ஆகும் அதை கூடும் என்று கர்ளாவி சொல்கிறார் இது வழிகேடு இல்லையா ? இந்த வழிகேட்டை சாதாரண மஸாயில் பிரச்சினை என்று வழிகெட்ட மன்சூர் சொல்கிறார் இது வழிகேடு இல்லையா ? சியோநிசத்துடன் முஸ்லிம்களுக்கு மார்க்க ரீதியான பிரச்சினை இல்லை அரசியல் ரீதியான பிரச்சினைதான் உள்ளது என்று யூத சியோனிச கொள்கைக்கு வக்காலத்து வாங்குகிறார் கர்ளாவி இது வழிகேடு இல்லையா ?.....

பன்றி கொழுப்பு , இசை, கிறிஸ்மஸ் வாழ்த்து , புத்தாண்டு வாழ்த்து, பெண்களுக்கு கை கொடுத்தல், என்பவை ஹலால் என்று சொல்லும் ஜமாத்தே இஸ்லாமி இக்வான் அதை எதிர்க்க ஒன்றும் இல்லை என்று இந்த கூட்டம் கருதினால் இவ்வாறான எந்த வழிகேடும் இல்லாத தவ்ஹீதை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் ?......

உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜாஹிலிய கால காபிர்கள் நிலையை அடைந்த காபிர்கள் என்று செய்யித் குதுப் சொன்னது வழிகேடு இல்லை என்று ஜமாத்தே இஸ்லாமி கூட்டம் கருதினால் இவ்வாறான் எந்த வழிகேடும் இல்லாத தவ்ஹீதை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் ?......

கபுர்வணக்கம் சரி என்று சொல்லும் இக்வானின் தலைவர் உமர் தில்மிசாணி வழிகேடர் இல்லை என்றால் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது வழிகேடு இல்லை என்றால் இந்த இணைவைப்புக்கு எதிராக எந்த பிரச்சாரமும் செய்யாத இக்வான்கள் இப்படியான ஷிர்க் இல்லாத தவ்ஹீத் வாதிகளுடன் ஏன் எதிர் பிரச்சாரம் செய்கின்றனர் ?.......

மேலே சொன்ன வற்றில் பன்றி கொழுப்பு, இசை, கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வது , புத்தாண்டு கொண்டாடுவது கூடும் கபுர்வனங்குவது சரி என்று சொல்வது தஜ்ஜாலின் வருகை இல்லை என்று சொல்வது, அன்னிய பெண்ணுக்கு கைகொடுப்பது கூடும், அல்லாஹ்வின் அர்ஷ் அல்லாஹ்வின் மீசான் இல்லை என்று சொல்வது பாரதூரமாக எதிர்க்க வேண்டிய விடயங்கள் இல்லை என்றால் மற்ற விடயங்களை விட பாலஸ்தீன விடயத்தில் அதிக தீவிரம் காட்டும் ஜமாத்தே இஸ்லாமி இக்வான்கள் பலஸ்தீனை ஆக்கிரமித்திருக்கும் சியோனிச யூதர்களுடன் மார்க்க ரீதியான பிரச்சினை எதுவும் இல்லை என்று யூசுப் கர்ளாவி சொன்னதை கூட ஏற்றுகொள்வீர்களா ? அது வழிகேடு இல்லையா ?......

இவை எல்லாம் வழிகேடு இல்லை என்றால் எதற்காக கிளை விடயமான அரசியலில் அதிக தீவிர போக்கு கொண்டு மாற்று கட்சிகளை தீவிரமாக விமர்சிக்கின்ரீர்? அதற்காக சண்டை பிடிகின்ரீர், கிளை விடயமான அரசியலில் பேதம் கொண்ட சகோதரர்களை கொலை செய்கின்றீர் ?.....

இதுதான் உங்கள் கொள்கை என்றால் ஜமாத்தே இஸ்லாமி இக்வான்கள் வழிகேடர்கள் என்று சொல்வதில் கடுகளவு சந்தேகம் கூட எமக்கு கிடையாது, நீங்கள் இந்த கொள்கை சரி என்று வாதிக்கும்வரை உங்கள் கொள்கை வழிகேடே ......!

எப்போது இஸ்லாத்தின் அடிப்படையை சாதாரண மஸாயில் என்றும் இஸ்லாத்தின் கிளை விடயமான அரசியலை அடிப்படை போன்ற எண்ணத்துடனும் ஏற்று அதன்படி உங்கள் வழிகெட்ட தாவாவை செய்துவருகிண்றீர்களோ அப்போதே நீங்கள் வழிகேடர்கள் என்பதில் சந்தேகம் இல்லை ....!

அல்லாஹ் இவர்களுக்கும், இவர்களை நம்பியவர்களுக்கும் நேர்வழியை வழங்க வேண்டும் என பிராத்திக்கின்றேன் 

உங்கள் சகோதரன் : அஹ்மத் ஜம்ஷாத்