Pages

Saturday, April 23, 2011

பிரான்ஸின் ஹிஜாப் தடை சட்டம்

பிரான்ஸ் ஹிஜாபை தடை செய்யவில்லை.
முஸ்லீம்கள் புரிய வேண்டிய சரியான கோணம்.
RASMIN M.I.Sc
கடந்த சில நாட்களாக முஸ்லீம்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்றாக ஹிஜாபும் மாறியிருக்கிறது. பிரான்ஸ் அரசாங்கம் அந்நாட்டுப் பெண்கள் அணியும் ஆடையில் சில வகையான ஆடைகளை தடை செய்ததே இதற்கான காரணமாகும்.

கடந்த ஏப்ரல் 11 திங்கட்கிழமை அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தினால் பிரான்ஸில் சில இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டது.

பெரும்பாலான முஸ்லீம்கள் பிரான்ஸ் அரசு தடை செய்த ஆடை எது அவா்கள் தடை செய்யது மார்க்க அடிப்படையில் நியாமானதா? இல்லையா என்பதை சரியாக அறியாமல் இருக்கிறார்கள். 

இன்னும் சிலரோ பெண்கள் அணியும் ஹிஜாபையே பிரான்ஸ் தடை செய்துவிட்டதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் முதலாவதாக பிரான்ஸ் அரசு எந்த வகையிலான ஆடைகளை பெண்களுக்கு தடை செய்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டால் மார்க்கத்தின் தெளிவை சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

பிரான்ஸ் ஹிஜாபை தடை செய்ததா?

பிரான்ஸ் அரசாங்கம் பெண்கள் அணியும் முகத்திரை பற்றி மாத்திரம் தான் தடை உத்தரவைப் பிரப்பித்துள்ளது. அது தவிர பெண்களின் ஹிஜாபுக்கு முழு உடலையும் மறைப்பதற்கு பிரான்ஸ் தடை விதிக்கவே இல்லை. தடை விதிக்கவும் முடியாது.

எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் பெண்கள் தமது உடலை மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது. ஆடைகளைக் குறைக்கவும்உடலை மறைக்கவும் ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு உரிமை உள்ளது. பிரான்ஸிலும் இந்த உரிமை உண்டு. மக்களுக்கு உரிமை வழங்கப்படாத சர்வாதிகார நாடுகளில் தான் இது சாத்தியமாகும்.

முகம் மற்றும் முன் கை தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது.

பெண்கள் முகத்திரை அணிந்து கொண்டு செல்வதையே பிரான்ஸ் அரசு தடை செய்துள்ளது. பெண்கள் உடலை மறைப்பதை பிரான்ஸ் தடை செய்யவில்லை.

ஹிஜாபின் வகையும், பிரான்ஸின் தடையும்.


பெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்.

பிரான்ஸ் அரசின் இந்த சட்டத்தின்படி பொது இடங்களான வீதிகளிலும்,ஷாப்பிங் சென்டர்கள்ஹோட்டல்கள்,பூங்காக்கள்மருத்துவமனைகள்,அரசு அலுவலகங்கள், (ரயில் நிலையங்கள்/பஸ் நிறுத்தங்கள் போன்ற) பொது போக்குவரத்து இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முகத்திரை அணியக் கூடாது. முகத்தை மறைக்க உதவும் எந்த வகை ஆடைகளும் தடைச் செய்யப்படும். இந்த தடையை மீறி முகத்திரை அணிந்து பெண்கள் நடமாடினால் அவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒரு ஆணோபெண்ணோ கட்டாயப்படுத்தி மற்றொரு பெண்ணை முகத்திரை அணிய வற்புறுத்தினால்அவர்களுக்கு 30,000யூரோ அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
அதே சம‌யம் வீடுகள் மற்றும் தனியார் இடங்கள்வழிபாட்டு தல‌ங்கள் போன்றவற்றில் முகத்தை மறைப்பதை தடை செய்யக்கூடாது. மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி முகத்திரையை அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றும் முகத்திரையை அணிந்திருப்பவரே அதை அகற்றவேண்டும் அல்லது அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் யாரென்று அடையாளம் காண‌ சோதனை செய்யப்படுவார்கள் என்றும்அதிகபட்சமாக‌ நான்கு மணி நேரம் வரை அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்படலாமே தவிரமுகத்திரை அணிந்ததற்காக அவரை காவலில் வைக்கக்கூடாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது. மேலும் இந்த சட்டம் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும் பொருந்தும். அத்துடன் பிரான்ஸ் குடியுரிமையின் சட்டங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காக‌ (படிப்பதற்கு) அவர் அனுப்பப்படுவார்.

தடை செய்யப்பட்ட முகத்திரை வடிவங்கள். 

பெண்கள் அணியும் ஹிஜாபில் நான்கு வகையான முறைகள் உலகலவில் பின்பற்றப்படுகின்றன அவை ஹிஜாப், நிகாப், சடோர், புர்கா என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஹிஜாப் : முகத்தை மறைக்காமல் காதுதலைமுடி மற்றும் கழுதை மறைப்பதே  இந்த வகையை சேரும்.இந்த முறை தான் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வழக்கத்தில் உள்ளது.

நிகாப் : உடல் முழுவதையும் மறைத்து கண்களுக்கு மட்டும் மெல்லிய துணியை பயன்படுத்துவதையே நிகாப் என்கின்றனர்.இது அரபு நாடுகளில் குறிப்பாக சவுதி அரேபியாவில் நடை முறையில் உள்ளது.

சாடோர் : இந்த வகை ஈரான் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.படத்தை பார்த்து இதன் வடிவமைப்பை தெரிந்துக்கொள்ளுங்கள்.

புர்கா : இந்த முழு அளவிலான ஆடை ஆப்கானிஸ்தான் பகுதியிலும் இந்தியாவில் சில பகுதியிலும் அதிகமாக நடைமுறையில் உள்ளது.உடல் முழுவதையும் மறைத்து கண்களுக்கு மட்டும் வலைகளை கொண்டிருக்கும் வகையே புர்கா எனப் படுகிறது


.மேற்கண்ட முறைகளில்நிகாப் மற்றும் புர்கா வகையையே ஃபிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது.முகத்தை மறைத்து தங்களுடைய அடையாளத்தை மறைப்பதினாலேயே இந்த வகை முகத்திரைக்கு பிரான்ஸ் அரசு தடைவிதித்துள்ளது.
தங்கள் முகம் மற்றவர்களுக்கு தெரியாத விதத்தில் முகத்தில் திரையிட்டு மறைப்பதையே பிரான்ஸ் அரசு தடை செய்துள்ளதே தவிர முழுமையாக ஹிஜாப் அணிவதையே தடை செய்யவில்லை.

பெண்கள் முகத்திரை அணிவது கட்டாயக் கடமையா?

சில முஸ்லீம்கள் பிரான்ஸ் அரசு பெண்கள் முகத்திரையை போட்டுக்கொள்வதைத் தடை செய்துள்ளதினால் பிரான்சுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதுடன், பிரான்ஸ் அரசு இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதாகவும் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் இஸ்லாம் பெண்கள் தங்கள் உடலை மறைக்க வேண்டும் என்றுதான் கட்டளையிடுகிறதே தவிர எந்த இடத்திலும் பெண்கள் முகத்திரை அணிந்து முகத்தை மறைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.

எந்தப் பெண்ணாவது தனது சுயவிருப்பத்தின் பேரில் முகத்திரை அணிந்தால் அதை இஸ்லாம் தடுக்கவும் இல்லை. ஆனால் முகத்திரையை பெண்கள் அணிவது கட்டாயக் கடமை என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது.

இஸ்லாம் கட்டாயப்படுத்தாத ஒரு ஆடை முறையைத்தான் பிரான்ஸ் அரசும் தடை செய்துள்ளது. தனது தடைக்கான காரணமாக பாதுகாப்புப் பிரச்சினையைத்தான் பிரான்ஸ் முன்வைக்கிறது. முகத்தை மறைப்பதன் மூலம் குறிப்பிட்ட நபர் பெண்ணா அல்லது ஆணா என்று சரியாக அடையாளம் காண முடியாமல் இருப்பதினாலேயே இந்தச் சட்டத்தை பிரான்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ற பல நாடுகளிலும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைப்பதை சாட்டாக வைத்துக் கொண்டு பலரும் பல தவறான காரியங்களுக்கும் இந்த முகத்திரையைப் பயன்படுத்துகிறார்கள்.
இஸ்லாம் கட்டாயப்படுத்தாத மக்ககளாக கட்டாயமாக்கிக் கொண்ட இந்தப் பழக்கத்தினால் முஸ்லிம் சமுதாயத்துக்கு அதிகமதிகம் கேடுகள் ஏற்படுவதை பெரு நகரங்களில் வசிப்பவர்கள் அனுபவப்பூர்வமாக உணரலாம்.

பொதுவாக தன்னை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற காரணத்துக்காகவே மனிதன் ஒழுக்கமாக வாழ்கிறான். (இறையச்சத்துடன் உள்ளவர்கள் விதிவிலக்கு)

தான் யார் என்று தெரியாவிட்டால் எந்தத் தவறு செய்வதற்கும் அது துணிவை அளித்து விடுகிறது. இது தான் எதார்த்தமான உண்மை. சொந்த ஊரில் நல்லவனாக இருப்பவன் தன்னை யாரும் அறிந்து கொள்ள முடியாத ஊரில் தவறுகள் செய்வதற்கும் அல்லது தவறுகள் செய்வதற்காக வெளியூர் செல்வதற்கும் இதுவே காரணம்.

இந்திய அளவில் சென்னைமும்மைகல்கத்தா போன்ற நகரங்களில்கல்லூரி மாணவிகளில் பலர் முகத்தை மறைத்துக் கொண்டு செய்யும் அநியாயம் கொஞ்சமல்ல.

முஸ்லிமல்லாத பெண்களும் தங்களின் ஆண் நண்பர்களுடன் சுற்றும் போது முகத்திரை போட்டு தம்மை மறைத்துக் கொள்கின்றனர். சென்னைகிழக்குக் கடற்கரை போன்ற இடங்களைப் போய் பாத்தால் இப்படி சுற்றும்பலரைக் காணலாம் ஆனால் இப்படி அலையும் இளவட்டங்களில் சரிபாதிப் பேருக்கும் மேல் முஸ்லிம்கள் அல்லர் என்பதே உண்மை.

அது போல் வேசித் தொழில் செய்யும் முஸ்லிமல்லாத பெண்களும் போலீஸ் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக முகத்திரை அணிந்து ஆண்களுக்கு வலை வீசுவதை நாம் காணலாம்.

பல சந்தர்பங்களில் விபச்சாரக் குற்றச் சாட்டுக்களில் சிக்கிய சினிமா நடிகைகள் கூட முகத்திரை அணிந்து கொண்டு நீதி மன்றங்களுக்கு வந்த வரலாறுகள் அதிகம்.

சமூக விரோதச் செயலில் ஈடுபடும் ஆண்கள் கூட முகத்திரை அணிந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதை நாம் காண முடிகிறது.

பிரான்ஸில் வாழும் அணைத்து முஸ்லீம்களும் அரசுக்கு எதிராகப் போராடுகிறார்களா?

பெண்கள் முகத்தை மறைக்கும் நிகாப் மற்றும் புர்கா வகை ஆடைக்கு எதிராக பிரான்ஸ் அரசு கொண்டு வந்த சட்டத்தை பிரான்ஸில் வாழும் அனைத்து முஸ்லீம்களும் எதிர்க்கவில்லை.

முகத்தை பெண்கள் கண்டிப்பாக மறைக்க வேண்டும் என்ற தவறான கொள்கை உடைய சிலர் மாத்திரம் தான் இதனை எதிர்க்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுருக்கமாக நாம் தெரிய வேண்டியது.

பெண்கள் முகத்தை மறைப்பதென்பது அவர்களுடைய சுயவிருப்பதில் உள்ளதுதானே ஒழிய மார்க்கம் பெண்கள் முகத்தை மறைத்துத்தான் ஆக வேண்டும் என்று எங்கும் கட்டளை பிறப்பிக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் முகத்தைத் திறந்து கொள்வதற்கு மிகத் தெளிவான அனுமதியை இஸ்லாம் வழங்கியிருக்கும் போது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்குப் பிரச்சினையாக இருக்கிறது என்பதற்காக பெண்கள் முகத்திரை அணிவதை ஒரு நாடு தடை செய்தால் அதை எதிர்ப்பதற்கோ அல்லது குறிப்பிட்ட சட்டம் இஸ்லாத்தையே கொச்சைப்படுத்துகிறது என்று சொல்வதற்கே எந்த முகாந்திரமும் இல்லை.

Wednesday, April 20, 2011

அபாண்டங்களா? அடுக்கடுக்கான ஆதாரங்களா?

விமர்சனக் கேள்வி.

ஜனவரி அழைப்பு இதழில் பிரசுரிக்கப்பட்ட இலங்கையை இலக்கு வைக்கும் ஷீயாக்கள்’ என்ற ஆக்கம் பொய்களையும் அபாண்டங்களையும் அடிப்படையாக வைத்து காழ்ப்புணர்வுடன் கூடிய ஒரு கட்டுரையாகவே அமைந்திருந்தது. சில பித்அத்துகளில் மட்டும் முரண்படும் ஷீயாக்களை காபிர்கள் போன்று சித்தரித்துஇஸ்லாமியப் பணியில் மும்முரமாக செயற்படும் நளீமிக்களை ஷீஆக்களோடு தொடர்பு படுத்தி,இஸ்லாமிய சமூக அமைப்பை உருவாக்கத்துடிக்கும் ஜமாஅதே இஸ்லாமி,இக்வானுல் முஸ்லிமீன் போன்ற இயக்கத்தினரை ஷீஆவாதிகள் போன்று சித்தரித்து அவதூறுகளை அள்ளிவீசியிருக்கும் உங்கள் எழுத்து கண்டிக்கத்தக்கது.மனதில் தோன்றியதையெல்லாம் வாந்தியெடுக்காமல் தன் எழுத்துக்கான சான்றுகளுடன் இதன் பிறகாவது எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.

முஹம்மது ஹலீம் - மாவனல்லை.


பதில்.

நமது ஜனவரி இதழில் பிரசுரிக்கப்பட்ட இலங்கையை இலக்கு வைக்கும் ஷீஆக்கள்’ என்ற ஆக்கம் தொடர்பான உங்கள் மன உளைச்சலின் வெளிப்பாடே மேற்குறித்த விமர்சனம். ஓன்றை எழுதும் போது அது குறித்த சான்றாதாரங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதை அறிந்த உங்களுக்கு ,ஒன்றை விமர்சிக்கும் போதும் அது குறித்த அறிவை தான் பெற்றிருப்பது அவசியம் என்பதை வாசகர் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.


ஈரானின்அமெரிக்க - இஸ்ரேல் எதிர்ப்புணர்வுசர்வதேச ஒற்றுமை குறித்த அஹ்மது நஜாதின் கருத்துக்கள்இஸ்லாமிய கலை நுட்பத்தை வெளிப்படுத்தும் எழுத்தோவியங்கள்வறிய முஸ்லிம் நாடுகளுக்கான உதவிகள்,ஈரானின் அணு ஆயுத பலம் போன்ற சில புறத்தோற்றங்களை மட்டும் காணும் பெரும்பாலான முஸ்லிம்கள் ஈரான் ஓர் இஸ்லாமிய தேசம் என்றும்அதன் ஆட்சியாளர்களும் ஆன்மீகத் தலைவர்களும் மிகப் பெரும் இஸ்லாமிய வாதிகள்அங்கு ஆட்சிபீடத்தில் இருக்கும் ஷீயாயிஸம் இஸ்லாத்தின் ஒரு பகுதி தான் என்றும் கருதுகின்றனர்.

உண்மையில் ஓர் அமைப்பை அல்லது இயக்கத்தை நாம் புறத்தோற்றங்களையும்வெளிப்பகட்டையும் வைத்து சரிகாணக்கூடாது. அதன் அடிப்படைக் கொள்கை கோட்பாடுகளை அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸ_ன்னா எனும் உரைகற்களின் மூலம் உரசிப்பார்த்தே ஓர் இயக்கத்தை சரிகாணுதல் வேண்டும். ஷீயாக்கள் என்போர் யார்அவர்களின் கொள்கைகள் என்னஎன்பதை நன்கு அறிந்த எந்தவொரு முஸ்லிமும் அவர்களை ஆதரிக்க மாட்டான். அப்படித்தான் ஆதரித்திருந்தாளும் தன் நிலைப்பாட்டை உடனே மாற்றிக் கொள்வான். வினா தொடுத்த வாசகர் ஷீயாக்களின் கொள்கைகளை புரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் குறித்த மிகவும் சுறுக்கமான அறிமுகத்தை இங்கே தருவது பொருத்தமென்று கருதுகிறோம்.

ஷீயாக்களின் வழிகெட்ட சிந்தனைகளில் சில:

கிலாபத் பற்றிய கோட்பாடு:

ஒவ்வொரு நபிக்கும் ஒரு வாரிசும் பிரதிநிதியும் உண்டு. நபி (ஸல்) அவர்களின் வாரிசும் பிரதிநிதியும் அலியாவார்.

 நபிக்குப் பின் ஆட்சி அலிக்கே சொந்தம். அபூபக்கர்உமர்உஸ்மான் ஆகியோர் அதனை பறித்துக் கொண்டனர். இவர்கள் மீது அல்லாஹ்,மலக்குமார்கள்அனைத்து மக்களினதும் சாபம் உண்டாவதாக.  (நூல்: அல் காபிபாகம்: 08, பக்கம்: 245)

நபித்துவம் பற்றிய கோட்பாடு:

முஹம்மது (ஸல்) அவர்களைவிட அலியே நபித்துவத்திற்கு மிகப் பொருத்தமானவர்: சிறந்தவர்.

எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப்படாத சிறப்புகள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது. நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலி (ரழி) கூறினார்.(நூல்: அல் புர்ஹான் பீ தப்ஸீரில் குர்ஆன். பாகம்: 04, பக்கம்: 226)

அல் குர்ஆன் பற்றிய கோட்பாடு:

நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் கொண்டு வந்த குர்ஆன் 17 000 வசனங்களை உடையதாகும். (நூல்: அல் காபிபாகம்: 02,பக்கம்: 463)

இறக்கப்பட்டது போல் முழுக்குர்ஆனையும் தான் ஒன்று சேர்த்ததாக எவன் வாதிடுவானோ அவன் பொய்யனாவான்.(நூல்: அல்காபிபாகம்: 01, பக்கம்:228)

அல் ஹதீஸ் பற்றிய நிலைப்பாடு:

 அபூ ஜஃபர் முஹம்மத் இப்னு யஃகூப் அல் குலைனி என்பவரால் எழுதப்பட்ட உஸ_லுல் காபி’ என்ற நூலை மட்டுமே ஆதார நூலாக கொள்வர். புகாரிமுஸ்லிம் உட்பட அனைத்து ஹதீஸ் கிரந்தங்களையும் ஏற்க மறுப்பர்

ஸஹாபாக்கள் பற்றிய நிலைப்பாடு.

மிக்தார் இப்னுல் அஸ்வத்அபூதர் அல்கிபாரிஸல்மானுல் பாரிஸி ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித்தோழர்களும் காபிர்களாகி விட்டனர்.(நூல்: கிதாபுர் ரவ்லா மினல் காபிபாகம்: 08, பக்கம்: 245

அல் காயிம் வந்து ஆயிஷாவை திரும்ப எழுப்பி அவர்களை சவுக்கால் அடிப்பார். பாதிமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.(நூல்: தப்ஸீர் ஸாபிபாகம்: 02, பக்கம்: 108)

12 இமாம்கள் பற்றிய கோட்பாடு:

12 இமாம்களுக்கும் இருக்கக் கூடிய ஆத்மீகமான அந்தஸ்தை மலக்குகளும்,நபிமார்களும் கூட அடைய முடியாது என்பது எமது கொள்கையாகும். ஏனெனில் 12 இமாம்களும் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே ஒளியாக அர்ஷ_க்கு அடியில் இருந்தார்கள்.இது நமது அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.(ஆசிரியர்;: இமாம் குமைனிநூல்: விலாயதே பகீஹ் தர் குஸ_ஸே ஹ_கூமதே இஸ்லாமிதஹ்ரான் வெளியீடு. பக்கம்:58)

முத்ஆ எனும் விபச்சாரத் திருமணம் பற்றிய கோட்பாடு:
  
 கூலி கொடுத்து வாடகைப் பெண்ணுடன் எவராவது ஒரு முறை உடலுறவு கொண்டால் நரகத்தை விட்டும் 13 பங்கு உரிமை சீட்டைப் பெற்றுக் கொண்டார். இரு முறை உறவு கொண்டால் மும்மடங்கு நரக வேதனை உரிமை சீட்டை பெற்றுக் கொண்டார். மூன்று முறை உறவு கொண்டால் பூரணமாக நரகை விட்டும அவன் விடுதலை பெறுகின்றான். (நூல்: அஷ்ஷீயா வ அஹ்லுல் பைத்பக்கம்: 218)

தர்ஹாக்கள் பற்றிய கோட்பாடு:

_ஸைன் (ரலி) அவர்களை ஸியாரத் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட 100ஹஜ்ஜூகளுக்கும்ஏற்றுக் கொள்ளப்பட்ட 100 உம்ராவுக்கும் சமமானதாகும். (நூல்: அல் இர்ஷாத்பக்கம்: 252)

யார் ஹ_ஸைன் மரணித்த பின் அவரது கப்ரை ஸியாரத் செய்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல் இர்ஷாத்பக்கம்: 252)

ன்னிகள் பற்றிய கோட்பாடு:

ஷீயாக்களின் எந்தப் பாவமும் பதியப்படுவதில்லை. மழை துளியளவுக்கும்,கற்கள்மணல்கள்மரங்கள்முட்கள் எண்ணிக்கை அளவுக்கு பாவம் செய்தாளும் அவை பதியப்படுவதில்லை என்று 8வது இமாம் அபுல் ஹஸன் குறிப்பிட்டார். (நூல்: உயூனு அக்பாரிர் ரிழாபாகம்: 02, பக்கம்: 236)

இவை ஷீயாக்களின் சீர்கெட்ட சிந்தனைகளிலிருந்து சில நச்சுத் துளிகள் மட்டுமே. இப்போது கூறுங்கள்: அல்லாஹ்வின் பண்பை அலிக்கு வழங்கியவர்கள்அலியை அல்லாஹ்வாக்கியவர்கள்நபிகள் நாயகத்தை குறை கண்டவர்கள்அல்குர்ஆனை நம்ப மறுத்தவர்கள்ஹதீஸ்களை புறக்கணித்தவர்கள்சுவர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட அபூபக்கர்உமர்,உஸ்மான் (ரழி) ஆகியோரை காபிர்கள் என்று கூறியவர்கள்இறை விசுவாசிகளின் அன்னையரும் அண்ணலாரின் அருமை மனைவியருமான ஆயிஷாஹப்ஸா (ரழி) போன்றோரை வேசிகள் என்று முழங்கியவர்கள்,தங்கள் இமாம்களை நபியை விடமலக்கை விட உயர்வாகக் கருதுபவர்கள்ஒட்டுமொத்த ஸஹாபா சமூகத்தையும் காபிர்கள் என்பவர்கள்நபிகளார் இடிக்கச் சொன்ன கப்ருகளை(தர்ஹாக்களை) வழிபடும் இடமாக எடுத்துக் கொண்டவர்கள்அடுத்தவன் மனைவியை பங்கு வைத்துக் கொள்ளும் விபச்சாரக் கலவியை சுவனச் செயலாக பிரகடணப்படுத்திய காமுகர்கள்  எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்

இவ்வளவு ஈனத்தனமான கொள்கைகளை கொண்டவர்களை எந்த அடிப்படையில் நேர்வழியில் சேர்க்க முடியும்இவர்களை எப்படி ஓர் உண்மை முஸ்லிம் அங்கீகரிக்க முடியும்அவர்களோடு எப்படி நேசம் கொள்ள முடியும்இக்கேடுகெட்ட கொள்கை அரசோட்சும் இராச்சியத்தை எப்படி இஸ்லாமிய குடியரசாக நாமம் சூட்ட முடியும்இத்தகைய வழிகேடர்களை எப்படி எமது மார்க்க நிகழ்ச்சிகளுக்கு மேடையேற்ற முடியும்??

இவ்வளவு வழிகேடான ஒரு கொள்கையை ஒருவன் அல்லது ஓர் இயக்கம் ஆதரித்தால்அவர்களுக்கு சார்பாக தம் எழுத்துக்களையும் நாவன்மையையும் பயன் படுத்தினால் அவன் அல்லது அவ்வியக்கம் நேர்வழியில் உள்ளதாவழிகேட்டில் உள்ளதா?

இன்று இலங்கையில் செயற்பட்டு வரும்இஸ்லாமிய சமூக அமைப்பை உருவாக்கத்துடிக்கும் ஜமாஅதே இஸ்லாமி மற்றும் இஹ்வானுல் முஸ்லிமீன் (DA, MFCD) போன்ற இயக்கத்தினர் இவ்வழிகெட்ட ஷீயாயிஸத்தை ஆதரிப்பதை பார்க்கிறோம். ஷீயாயிஸத்தை தம் இயக்கப் பெயர்களின் ஊடாக வாந்தியெடுப்பதை பார்க்கிறோம். ஈரானில் ஆயத்துல்லா கொமைனியினால் தோற்றுவிக்கப்பட்ட ஷீயா புரட்சியை இஸ்லாமிய புரட்சியாக சித்தரித்து,வழிகேடன் கொமைனியை இஸ்லாத்தை காக்க வந்த ஈமானிய புருஷராக உருவகப்படுத்தி இலங்கை நாட்டுக்குள் முதன் முதலாக ஷீயாயிஸத்தை விதைத்து வேரூன்றச் செய்து ஈமானுக்கு வேட்டு வைத்த பெருமைஇலங்கையில் கிலாபத் கனவில் சஞ்சரிக்கும் ஜமாஅதே இஸ்லாமிக்கே உரியது. ஈரானின் ஷீயா புரட்சியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்காக ஈரான் மக்கள் புரட்சி’ என்ற நூல் காலம் சென்ற  S.M.மன்சூர் அவர்களால் 1979ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதுவே ஷீயாயிஸத்தை அறிமுகப்படுத்திய முதல் நூல்.
                                               

ஷீயாக்கள் குறித்த ஜமாஅதே இஸ்லாமியின் தற்போதைய நிலைப்பாடும் கூட அவர்களை ஆதரிப்பதாகவே உள்ளது. ஜமாஅதே இஸ்லாமி மற்றும் இஹ்வான்கள் பெரிதாக போற்றும் நவீன கால இஸ்லாமிய சிந்தனையாளர் என்று சிலாகிக்கப்படும் கலாநிதி யூசுப் அல் கர்ளாவி ஷீயாக்கள் குறித்து வெளியிட்ட பேட்டியை ஜமாஅதே இஸ்லாமியின் வெளியீடான அல்ஹஸனாத் சஞ்சிகையின் 2008 ஒக்டோபர் இதழ் ஷீஆக்கள் பற்றி யூசுப் அல் கர்ளாவி என்ன சொல்கிறார்?’ எனும் தலைப்பில் வெளியிட்டிருந்தது.கர்ளாவியின் கருத்தை தமது இதழில் வெளியிட்டதன் மூலம் ஜமாஅதே இஸ்லாமியின் தற்போதைய நிலைப்பாடும் இது தான் என்பதை மீண்டும் ஒரு முறை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்கள். 

இப்பேட்டியில் கர்ளாவி ஷீயாக்கள் குறித்து கூறும் போது கடும் போக்காளர்கள் கூறுவது போன்று நான் அவர்களை (ஷீஆக்களை) நிராகரிப்பாளர்கள் என்று கூற மாட்டேன்.அவர்கள் முஸ்லிம்கள்.எனினும், (அஹ்லுஸ்ஸ_ன்னாவின் கொள்கைகளுக்கு முரணான கொள்கைகளை உடைய) பித்அத்வாதிகள்’… ‘இவர்கள் பகிரங்க குப்ரில் இருப்பதாகவோ,இஸ்லாத்துக்கு வெளியில் சென்றுவிட்டதாகவோ நாம் கூறுவதில்லை.
அலியை கடவுளாக்கிஅல்லாஹ்வை இழிவு படுத்தி,நபிகளாரை மறுத்து,புனிதக் குர்ஆனை குறைகண்டுஹதீஸ்களை நிராகரித்துஸஹாபாக்களை காபிராக்கிவிபச்சாரத்தை ஹலாலாக்கிய வழிகேட்டுக் கும்பலை முஸ்லிம் என்பதாமுஷ்ரிக் என்பதாஅவர்கள் செய்தது பித்அத்தாஷிர்க்காகர்ளாவி மற்றும் ஜமாஅதே இஸ்லாமியினரின் பார்வையில் ஷீயாக்களும் முஸ்லிம்கள் என்றால் உங்கள் கிலாபத் ஆட்சியில் அலி தான் நபியா?உங்கள் சமூக உருவாக்கத்தில் விபச்சாரம் ஹலாலாஉங்கள் சாம்ராஜ்ஜியத்தில் தர்ஹாக்களுக்கு என்றும் அங்குரார்ப்பண விழாவா?ஈமானை பறிக்கும் இத்துணை வழிகேடுகளும் உங்கள் பார்வையில் சில்லறை என்றால் எதுதான் உங்கள் ஆட்சியில் பெரியது?

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி மட்டுமன்றி இந்திய ஜமாஅதே இஸ்லாமியும் ஷீயாக்களின் விசிரிகள் தான் என்பதற்கு இந்திய வெளியீடான சமரசம் 1 – 15 மார்ச் - 1999ம் அன்று பிரசுரிக்கப்பட்ட பின்வரும் புகைப்படம் தக்க சான்றாகும். ஜமாஅதே இஸ்லாமியின் மாநாட்டில் ஷீயாக்களோடு கைகுழுக்கும் இந்திய ஜமாஅதே இஸ்லாமி தலைவர் மற்றும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைவர்கள் ஒன்றாக நிற்பதையும்அவர்களுக்கிடையிலான உறவுப் பாலத்தையும் இப்படம் சித்தரித்துக் காட்டுகின்றது.
                                                          

இதுபோகநளீமிக்கள் என்போர் ஏதோ இஸ்லாமியப் பணியில் கரைகண்டவர்கள் என்றும் அவர்களுக்கும் ஷீயாக்களுக்கும் தொடர்பில்லை என்றும் விமர்சித்திருந்தீர்கள். இலங்கையில் ஷீயாக்களின் வளர்ச்சியில் நளீமீக்களுக்கு பாரிய பங்கு உண்டு என்பதற்கு பின்வரும் புகைப்படங்கள் சான்றாகும். தஃவா களத்தில் பிரகாசிக்கும் பல நளீமீக்களும் வேறு சில குர்ஆன் ஸ_ன்னா போர்வையில் செயற்படும் பிரசாரகர்களும் ஷீயாக்களின் வெளியீடுகளுக்கு அணிந்துரை வழங்கிஅவற்றின் விற்பனைக்கு துணைபோவதனையும்ஷீயாயிஸத்தின் வளர்ச்சிக்கு பசலையாக மாறுவதனையும் இப்புகைப்படங்கள் தோலுரித்துக் காட்டுகின்றன:







நூல்: இஸ்லாமிய உலகும் சவால்களும்
ஆசிரியர்: S.H.மவ்லானா 
வெளியீடு: மிலேனியம் கல்வி ஸ்தாபனம்
அணிந்துரை: அஷ்ஷெய்க் றவூப் ஸெய்ன்(நளீமி MA ஆசிரியர் மீள்பார்வை பத்திரிகை)








நூல்: பாலியலும் பருவ வயதும்
ஆசிரியர்: அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்(கும்மி)
அணிந்துரை: அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்(நளீமி,பிரதிப் பணிப்பாளர்- ஜாமிஆ நழீமிய்யா கலாபீடம்)







நூல்: மனைவியை தேர்ந்தெடுப்பது எப்படி?’
ஆசிரியர்:  அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்(கும்மி)
அணிந்துரை: DR.மரீனா தாஹா ரிபாய்
MBBS(Cey), ஸ்தாபகர்: அல்முஸ்லிமாத் மாதர் அமைப்பு.

மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஓர் உண்மையை புலப்படுத்துகின்றன: இலங்கையில் ஷீயாக்களை திட்டமிட்டு வளர்க்கும் பணியில் இஸ்லாமிய இயக்கங்கள் என்று தம்மை பெருமை பாராட்டிக் கொள்ளும் ஜமாஅதே இஸ்லாமி,இஹ்வான்கள் போன்ற ஜமாஅத்துக்கள் பின்புலத்தில் இருப்பதோடு,நளீமிக்களும் ஷீயா வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றனர் என்பதுவும் வெள்ளிடை மலை. 

நாம் இவர்களை அம்பலப்படுத்துவது காழ்ப்புணர்ச்சியில் அல்ல,சமுதாயத்தை இவர்களின் சதிகளில் இருந்து காப்பதற்காகவே என்ற உண்மையை வாசகர் புரிந்து கொள்ள வேண்டும்.

 (குறிப்பு - இவா்களைப் பற்றிய இன்னும் பல தகவல்கள் நம்மிடம் உள்ளன தேவைப்படும் போது வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்.)

Sunday, April 17, 2011

பெயா் குறிப்பிட்டு விமா்சிப்பது தவறா?


குறுக்கு விசாரணை
பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறா?…உங்கள் சஞ்சிகையில் இடம் பெறும் அதிகமான ஆக்கங்கள் இன்னொருவரை அல்லது இயக்கத்தை குத்திக்காட்டும் விதமாகவும்காயப்படுத்தும் விதமாகவும் எழுதப்பட்டுள்ளது. பல பிரபலமான தாஈக்களை தரம் குறைத்து மதிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. அவர்களால் செய்யப்படும் சேவைகளை மறைத்து சில கருத்து முரண்பாடுகளுக்காய் அவர்களை மிக மோசமாக வர்ணித்து எழுதப்பட்டுள்ளது. அதிலும் பெயர் குறிப்பிட்டு விமர்சனங்களை எழுதியிருப்பது ஒரு தரக்குறைவான செயலல்லவாகருத்து முரண்பாடுகள் இருக்கிறது என்பதற்காக யாரையும் காரசாரமாக விமர்சித்து எழுதுவதோ,வழிகேடர்கள் போல் சித்தரிப்பதோ நல்லதோர் விடயமல்லவேபின்த் அப்தில் காதர் – மள்வானை
தர்கா வழிபாடு என்றும்சந்தனக்கூடு என்றும்கொடி மரம் என்றும்தட்டு – தகடு என்றும் ஷிர்க்கில் மூழ்கிப்போயுள்ளவர்களையும்பாங்குக்கு முன் ஸலவாத்துமிஃராஜ் – பராஅத் நோன்புதஸ்பீஹ் தொழுகை என்று பித்அத்தில் சங்கமித்தவர்களையும்வரதட்சணைவட்டிமது என்று பகிரங்கமாக பெரும் பாவங்களில் ஈடுபடுவோரையும்ஜின் வசிய்யத்துமந்திரம்தந்திரம் என்ற போர்வையில் சமூகத்தை ஏய்த்துப் பிழைப்போரையும்மத்ஹபு மாயையில் சிக்குண்டு சமூகத்தையும்சன்மார்க்கத்தையும் துண்டாடும் போலி உலமாக்களையும்ஆட்சி – அதிகாரம்,சமூக ஒற்றுமை என்ற கோஷங்களுக்குப் பின் மறைந்து கொண்டு குர்ஆன் – ஸ_ன்னாவுக்கு எதிரானக் கருத்துக்களை விதைத்துகுராபிகளுக்கு கூஜா தூக்கும் ஜமாஅத்துக்களையும் நாம் விமர்சிக்கும் போதுஇப்படியெல்லாம் பண்பாடற்று விமர்சிப்பது தவறு: இது கேட்போர் மனதை புண்படுத்துவதோடுதொடர்ந்தும் சத்தியத்தை கேட்காமல் இருப்பதற்கே வழிவகுக்கும் என்று கூறிமேற்சொன்ன குற்றங்களை நியாயப்படுத்தும் இயக்கங்களையும்அதன் தாஈக்களையும்,அக்கருத்தால் கவரப்பட்டவர்களையும் தஃவாக்களத்தில் பரவலாகக் காண முடிகிறது.
இதன் ஓர் வெளிப்பாடாகவே மேற்குறித்த விமர்சனமும் அமைந்துள்ளது.இங்கு யாரெல்லாம் பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளார்களோ அவர்களே தம் பேச்சுக்களிலும்எழுத்துக்களிலும் பலரின் பெயர்களை பச்சையாய் குறிப்பிட்டு விமர்சிக்கத் தான் செய்கிறார்கள். ஸல்மான் ருஷ்திதஸ்லீமா நஸ்ரின்ஜோர்ஜ் புஸ்டோனி பிளேயர்_ஸ்னி முபாரக்முஅம்மர் கடாபிஅப்துல்லாஹ்… இன்னும் இது போன்ற பலரை விமர்சிக்கக் கூடாது என்பவர்கள் கடுமையாகவும்காரமாகவும் விமர்சிப்பதை அன்றாடம் பார்க்க முடிகிறது.
இன்னும் சொல்லப் போனால்யாரை இவர்கள் இலக்கு வைத்து இவ்விமர்சனத்தை புரிகிறார்களோ அந்தப் Pது யின் பெயரை குறிப்பிட்டே தமது பத்திரிகைகளில் இவர்கள் விமர்சித்தும் வருகிறார்கள். இவர்களின் இவ்விமர்சனம் நியாயபூர்வமானது கிடையாது என்பதற்கு இவர்களே தக்க சான்றாகவும் உள்ளனர்.
விமர்சனம் என்று வருகின்ற போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விடயங்கள் உள்ளன. முதலில் விமர்சனத்தில் எது அனுமதிக்கப் பட்டதுஎது தடை செய்யப்பட்டதுஎன்பதனை ஒவ்வொருவரும் சரியாகப் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
விமர்சனம் இருவகைப்படும்:
1. தனி மனிதன் சமூகத்தை பாதிக்காத விதத்தில் புரியும் தனிப்பட்ட தவறுகள் சம்பந்தப்பட்டவை.
2. தனி மனிதன் சமூகத்தை பாதிக்கும் விதத்தில் புரியும் தவறுகள் சம்பந்தப்பட்டவை.இதில் சமூகத்தை எவ்விதத்திலும் பாதிக்காததவறிழைக்கும் மனிதனும் அல்லாஹ்வும் மாத்திரம் சம்பந்தப்பட்ட தவறுகள்பாவங்களைப் பொறுத்த மட்டில் அவற்றை பெயர் குறிப்பிட்டுஎழுத்து மூலமோபேச்சு மூலமோ விமர்சிப்பது கூடாது. கூடாது என்பதை விட அவற்றை நாளு பேருக்கு தெரியாதவாறு மறைக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறது.
ஆனால்ஒரு தனிமனிதன் விடக்கூடிய தவறு அதிலும் குறிப்பாக மார்க்கம் சம்பந்தப்பட்ட விடயத்தில் ஒருவர் விடும் தவறு ஒரு சமூகத்தை பாதிக்கும் விதமாய் அமையுமாயின்அத்தவறை தயங்காது தட்டிக் கேட்பதும்சுட்டிக் காட்டுவதும் அது குறித்து மக்களை விழிப்புறச் செய்யும் விதமாய் விமர்சிப்பதும் ஒரு முஸ்லிமின் கடமை.
கடமை என்பதை விட அது தான் மார்க்கம்.சகோதரி ஆதங்கப் படும் அளவுக்கு நாம் எதை விமர்சித்தோம்எதற்காக விமர்சித்தோம்உங்கள் பார்வையில் அற்பமாகக் கருதப்படும் கருத்து முரண்பாடுகளுக்காகவாஅல்லது அகீதாவுக்கே ஆப்பு வைக்கும் அபத்தங்களுக்காகவா?ஹதீஸை புரியும் இஜ்திஹாதில் ஏற்பட்ட தவறுக்காகவாஹதீஸையே மறுதலிக்கும் மடைமைக்காகவா?
நமது இதழில் யூஸ_புல் கர்ளாவிஅஷ்ஷெய்க் அகார் முஹம்மது(நளீமி)அஷ்ஷெய்க் றவூப் ஸெய்ன்(நளீமி)மவ்லானா மவ்தூதிமவ்லானா ஜகரிய்யா ஸாஹிப்… இவர்கள் போன்ற பலரை நாம் பெயர் குறிப்பிட்டுத் தான் விமர்சித்துள்ளோம். இன்ஷா அல்லாஹ்இனிமேலும் விமர்சிப்போம். இவர்கள் குறித்த எமது விமர்சனம் எந்த அடிப்படையில் அமைந்திருந்தது?உதாரணத்திற்குயூஸ_ப் அல் கர்ளாவி கஞ்சா அடித்தார்;, வட்டி வாங்கினார்தனிமையில் சினிமா பார்த்தார் என்று அவர்களின் தனிப்பட்ட வாழ்வோடு சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விடயங்களை விமர்சித்தோமாஅல்லது அல்கஹோலை குறைந்தளவில் பருகினால் அது குற்றமல்ல’, ‘சிறிய வட்டி ஹலால்’, ‘பெண்கள் சினிமாவில் நடிப்பது கூடும்’, ‘மீலாது விழா கொண்டாடலாம்’ போன்ற அல்குர்ஆனுக்கும் ஸ_ன்னாவுக்கும் முரணாக இவரால் வழங்கப்பட்ட மார்க்கத் தீர்ப்புகளை அல்குர்ஆன் ஸ_ன்னா அடிப்படையில் தவறு என்று விமர்சித்தோமா?
ஒருவர் முன்வைக்கும் கருத்து அல்லது கொள்கை தவறானது என்று உறுதியாகத் தெரிந்தால்,அதை மக்கள் சரிகண்டு அதன் வழியில் சென்று வழிகேட்டில் வீழ்ந்து விடாமல் அவர்களை தடுப்பதாக இருந்தால்அக்கொள்கையின் விபரீதத்தை மக்களுக்கு விளங்கப் படுத்தும் விதமாய் விமர்சிப்பதைத் தவிர வேறு என்ன வழி தான் இருக்க முடியும்?
இதைக்கூட நாமாகக் கற்பனை செய்து கூற வில்லை. திருக்குர்ஆனும் நபி மொழிகளும் மக்களை ஏமாற்ற முனையும் பேர்வழிகளை விமர்சிப்பதன் மூலம் அவர்களின் முகத்திரையை கிழிக்குமாறு எம்மை பணிக்கின்றது. இதற்கான சான்றுகள் இதோ: நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்துதங்களைச் சேர்ந்த ஓர் ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்து விட்டதாகக் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கல்லெறிந்து கொல்லுதல் பற்றி தவ்ராதில் கூறப்பட்டுள்ளது என்ன?’ என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் அவர்களுக்கு கசையடி கொடுத்து இழிவு படுத்துவோம்’ என்று விடையளித்தனர். அப்போதுஅப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் யூதர்களை நோக்கி நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள். தவ்ராதில் கல்லெறிந்து கொல்லுதல் பற்றிக் கூறப்பட்டுள்ளது’ என்றார். உடனே அவர்கள் தவ்ராதை எடுத்து வந்தனர். அவர்களில் ஒருவர் கல்லெறிந்து கொல்வது சம்பந்தமான வசனத்தைக் கையால் மறைத்துக் கொண்டுஅதற்கு முன் பின் வசனங்களை படித்தார். கையை எடுப்பீராக!’ என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கூறியதும் அங்கே அந்த வசனம் காணப்பட்டது என்ற செய்தி புகாரி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
அவர்கள் புண்படுவார்களே என்று எண்ணி அவர்களின் தவறை சுட்டிக்காட்ட நபித்தோழர் தயங்க வில்லை. நபியவர்களும் அதை அங்கீகரித்தார்கள்.தங்கள் கைகளால் புத்தகத்தை எழுதிக் கொண்டுஇது அல்லாஹ்விடமிருந்து வந்தது எனக் கூறியோருக்குக் கேடு உண்டாகட்டும்’ (2:79)என்று இறைவன் கூறுகிறான். அவர்கள் வேதத்தில் சுயமாகச் சேர்த்துக் கொண்டவைகளை இங்கே இறைவன் விமர்சனம் செய்கிறான்.இன்ஜீல் என்பது ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டு,அவர்கள் மக்களுக்குப் போதித்த தாகும் (5:110). ஈஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களால் எழுதப்பட்டவற்றை இன்ஜீல் என்று கூறிமக்களை ஏமாற்றும் போக்கை விமர்சனம் செய்வது தவறா?
ஒட்டகம் உண்பதைத் தங்களுக்கு இறைவன் ஹராமாக்கியதாக யூதர்கள் பொய் கூறிய போது,தவ்ராத்தைக் கொண்டு வந்துஅதை நிரூபியுங்கள் (3:93) என்று நபியவர்களை சவால் விடச் செய்தது பிழையா?வேதத்திற்கு தவறான விளக்கம் கூறி ஏமாற்றி வந்ததையும் இறைவன் கண்டிக்கத்தவற வில்லை (3:78). நபியவர்கள் பற்றிய முன்னறிவிப்பைத் திட்டமிட்டு அவர்கள் மறைத்து வந்ததையும் இறைவன் அடையாளம் காட்டாமல் விடவில்லை (2:146). வேதத்தில் நீங்கள் மறைத்து வைத்த அனேக வசனங்களை அம்பலப்படுத்தவே நமது தூதர் உங்களிடம் வந்துள்ளார் (5:15) என்று கூறிஅவர்களை விமர்சனம் செய்யும் நோக்கத்திற்காகவே நபி (ஸல்) அவர்கள் அனுப்பப் பட்டதாக இறைவன் பிரகடனம் செய்கின்றான். இப்றாஹீம் (அலை) அவர்கள்யூத மார்க்கத்தவராக இருந்தார்கள் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த போதுஇப்றாஹீம் காலத்தில் தவ்றாத் அருளப்பட வில்லையே! அவருக்குப் பின்னர் தானே தவ்ராத் அருளப்பட்டது (3:67) என்று மறுப்புக் கூறிஅவர்களை இறைவன் வாயடைக்கச் செய்தான்.
மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஒருவர் தவறு விடும் போது அல்லது சத்தியத்தை மறைக்கும் போது அதனை வன்மையாக விமர்சிக்க வேண்டும் என்பதற்கான சான்றுகளாகும்.பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறாஒரு தவறை சுட்டிக் காட்டும் போது,தவறிழைத்தவனுக்கு தான் செய்வது தவறு தான் என்று விளங்கும் விதத்திலும்இது எனக்குத் தான் சொல்லப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளும் வகையிலும்உள்ளத்தை உசுப்பும் விதத்திலும் மழுப்பலோமறைத்தலோசுற்றி வளைப்போ இன்றி சொல்வதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். இது எப்போது சாத்தியம்பெயர் குறிப்பிட்டு விமர்சிக்கும் போதே. இதையும் கூட நாமாகக் கூற வில்லை. யூத கிறிஸ்தவர்கள் (2:120), இஸ்ரவேலர்கள் (2:79), மஜூஸிகள் (22:17),முனாபிக்குகள் (2:8, 4:108), ஏன் ரஸ_லுல்லாஹ் (80:1-10, 3:128, 66:1), கூட தவறிழைக்கும் ஒவ்வொரு கணமும் அல்லாஹ்வால் சுட்டிக்காட்டப் பட்டு விமர்சிக்கப்பட்டது இவர்களுக்கு தெரியாதா?தவறுகளை விமர்சிக்கும் போது அதைச் சொன்னவரையும் அதைப்பின்பற்றும் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பெயர் குறிப்பிட்டுத் தான் விமர்சிக்க வேண்டும். இதுவும் அல் குர்ஆனின் வழி முறை தான். ஆது கூட்டம் (7:71), ஸமூது கூட்டம் (27:47), யானைப்படை (105:1), யஃஜூஜ் மஃஜூஜ் (18:94), அபூ லஹப் (111:1-3), இரம் (89:7), காரூன் (28:76), ஆஸர் (6:74), ஃபிர்அவ்ன் (2:49), சாமிரி (20:85),ஜாலூத் (2:249) ஆகியோர் அல்லாஹ்வால் விமர்சிக்கப்பட்டதும் இந்த அடிப்படையில் தான்.
இது போல்இன்னும் அனேக இடங்களில் வேதமுடையவர்களையும் பல தெய்வக் கொள்கையுடையோரையும் விமர்சனம் செய்துள்ளான். வேத முடையோரே!’ என்று பல இடங்களில் அவர்களை அழைத்துஅவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் உள்ளான். பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறுதான் என்றால் ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர்களின் குறைகளை அக்குவேர் ஆணிவேராக விமர்சிக்கும் இல்முல் ஜரஹ் வத்தஃதீல்’ எனும் கலையை இவர்கள் பண்பாடற்ற கலை என்று கூறத்துணிவார்களாஸகாத் வசூலிப்பதற்காக அனுப்பப்பட்ட நபித்தோழர் ஸகாத் பணத்துடன் இணைத்து வழங்கப்பட்ட அன்பளிப்பை இது எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டது’ என்று கூறியதைக் கேட்ட நபிகளார்முகம் சிவந்தவராய் மிம்பரில் ஏறிஅனைத்து தோழர்களையும் ஒன்று கூட்டி இவர் தனது தாயின் வீட்டில் இருந்திருந்தால் இது இவருக்குக் கிடைத்திருக்குமா?’ என்று கடிந்து கொண்டு அனைவர் முன்னிலையிலும் ஒரு நபித்தோழரை நபிகளார் விமர்சித்ததையும் பண்பாடற்ற விமர்சனம் என்று குறை காணப்போகிறார்களா?காரமாகவும் கடுமையாகவும் விமர்சிப்பது அல் குர்ஆனுக்கு முரணாநாம் எமது பேச்சுகளிலும்எழுத்துகளிலும் தவறிழைப்பவரை விமர்சிப்பதில் உள்ள கடுமையை விட,காரத்தை விட அல்லாஹ் தவறிழைப்பவர்களை விமர்சிப்பதற்காக பிரயோகிக்கும் வார்த்தைப் பிரயோகம் மிகுந்த கடுமையும் காரமும் மிக்கதாக உள்ளது.
அல் குர்ஆனின் வசனங்களை ஏற்க மறுப்பவனைஅதன் போதனைகளை மறுப்பவனை விமர்சிக்கும் போது அவனுக்குறிய உதாரணம் நாய். அதை நீ தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது.” (7:176) ‘நாய்’ என்று விமர்சிக்கிறான்.
இஸ்லாத்தை கற்பதற்கு முன்வராத அறிவிலிகளை விமர்சிக்கும் போது அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால் நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள்.” (7:179)
கால் நடைகள்’ என்கிறான்.வேதத்தைக் கற்று அதன் படி ஒழுகாதவர்களை விமர்சிக்கும் போதுதவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது.” (62:5) ‘கழுதை’ என்று பொறிந்து தள்ளுகிறான்
.அல் குர்ஆன்அஸ் ஸ_ன்னா ஒன்றை சொல்லும் போது அதனை புறக்கணித்துஅதற்கு மாற்றமாக நடப்பவர்களை விமர்சிக்கும் போது அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.” (74:50-51) ‘கழுதை’ என்று காட்டமாக விமர்சிப்பதைப் பார்க்கிறோம்.நாங்கள் விமர்சித்தது தவறு என்றால்எங்கள் வார்த்தை கடுமையானது என்றால்இவ்வாறு விமர்சிப்பது பண்பாடற்ற வழிமுறை என்றால்இவர்கள் முதலில் இவ்விமர்சனத்தைச் செய்த அல்லாஹ்வையும்அதனை அப்படியே ஏற்றுஅவ்விமர்சன வார்த்தைகளை அந்தத் தவறுகளை செய்த மக்களின் முகத்துக்கு முன் அப்படியே ஓதிக்காட்டிய நபிகள் நாயகத்தையும் நோக்கித் தான் தங்கள் சுட்டு விரலை முதலில் நீட்ட வேண்டும்.
உங்கள் வாதப்படி அல்லாஹ் நாய்’ என்றும், கழுதை என்றும், மிருகம்’ என்றும் நாகரீகம் இல்லாமல்: பண்பாடு தெரியாமல்: நளினம் தெரியாமல் விமர்சித்திருக்கிறான் என்று கூறவேண்டி வரும். ஒருவர் குர்ஆன் ஹதீஸ_க்கு எதிராக நடக்கும் போது அவரை நாம் விமர்சித்தால்அதனால் அவர்;கள் புண்படுவார்கள்’ என்பதெல்லாம் அறிவுடையோர் கூறும் பதிலாக முடியாது.
எதைப் பிரச்சாரம் செய்தாலும் பாதிக்கப்படுவோர் புண்படவே செய்வார்கள். இவர்கள் சொல்வதை ஏற்றால் மத்ஹபுகளைகல்லறை வணக்கத்தைதரீக்காக்களைபித்அத்துவாதிகளை மற்றும் எதையுமே விமர்சிக்க முடியாமல் போய்விடும். அத்தோடுஅல்லாஹ்வும் ரஸ_லும் நளினம் தெரியாமல்மென்மை புரியாமல் அநாகரிகமாக விமர்சித்து விட்டார்கள் என்ற தப்பான கருத்தும் வந்து விடும். நஊது பில்லாஹ்.