Pages

Saturday, October 22, 2011

ஊடகங்களின் பொய் அம்பலம்: கடாபியின் இறுதிநேர காணொளி! (படங்கள், காணொளி)



கிளர்ச்சிப் படையினர் கடாபி தங்கியிருந்த அவரது சொந்த ஊரான சேர்ட்டேவை நேற்றைய தினம் முற்றுகையிட்டனர். இதனிடையே நேட்டோப் படையினர் தமது வேவு பார்த்தலை அதிகரித்து கடாபி அந் நகரில் இருப்பதை உறுதிசெய்துகொண்டனர்.



கிளர்ச்சிப்படையினர் தாக்குதலை தொடுத்தவேளை அங்கிருந்து அவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அவரது வாகனத் தொடரணி மீது நேட்டோப் படையின் ஆளில்லா விமானங்களும் ஜெட் விமானங்களும் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக 5 வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக நேட்டொப் படைப்பிரிவுக்கு செய்தி கிட்டியபோதிலும் அந்த வாகனத் தொடரணியில் எந்த வாகனத்தில் கடாபி இருக்கிறார் என்பதும் கூட அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.



பாதுகாப்புக்குச் சென்ற வாகனங்களை துல்லியமாகத் தாக்கியழித்துள்ளது நேட்டோப் படை. இதனால் அவர் வாகனம் மட்டும் பலத்த சேதமடைந்த நிலையில் அவரது பாதுகாப்பாளரும் சாரதியும் வாகனத்தை திருப்பி மறைவான ஒரு இடத்தில் நிறுத்தியுள்ளனர். அதனையும் வேவுபார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானம் கடாபி வீதி ஓரமாக இருக்கும் ஒரு சுரங்கக் குழிக்குள் இருக்கிறார் என்ற தகவலை தலைமைக்கு பரிமாற அவ்விடம் நோக்கி கிளர்ச்சிப்படையினர் நகர்ந்துள்ளனர்.



காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் பதுங்கியிருந்த அவரை வெளியே இழுத்து சேட்டைக் களற்றி நிர்வாணமாக்கி அவரைப் பிடித்து உலுக்கி கன்னத்தில் அடித்து முதலில் மானபந்தப் படுத்தியுள்ளனர் கிளர்சியாளர்கள். பின்னர் அவர் தலையிலும் வயிற்றிலும் சுட்டுள்ளனர்.



ஆனால் கடாபி தன்னைச் சுடவேண்டாம் எனக் கெஞ்சியுள்ளார். நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடாபியின் மகன்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காலில் சிறு காயங்களோடு பிடிபட்டார் என முதலில் அறிவித்த கிளர்ச்சியாளர்கள் பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். அதேபோல மற்றைய மகனும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன் பின்னரே அவர் உடலை ஒரு அம்பூலன்ஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். ஆனால் மேற்குலக தொலைக்காட்சிகள் கடாபி காயங்களுடன் பிடிபட்டதாகவும் அவருக்கு அவசர முதலுதவி வழங்கப்பட்டதாகவும் பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ரத்தப் பெருக்கு காரணமாக அவர் உயிரிழந்தார் எனவும் கதைகளைக் கட்டியது. ஏதோ மனிதநேயம் மிக்க ஒரு நடவடிக்கையை தமது நேட்டோப் படைப்பிரிவு செய்ததாக இவர்கள் நினைப்பது அடி முட்டாள் தனமாகும்.


அமெரிக்காவின் திட்டப்படி கடாபியை தனிமைப்படுத்தி அவருக்கு மரணபயத்தைக் காட்டி யாரும் இல்லாத நிலையில் வீதியில் ஓடவிட்டு பின்னர் ஒரு மறைவிடத்தை அவர் தேடிய பின்னர் சினிமாப்பட பாணியில் அவரைக் கொண்றுள்ளனர் கிளர்சிப் படையினர். கடாபிக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் என்ன வித்தியாசம்?


இதில் வேதனையான விடையம் என்னவென்றால் சரணடைந்த கடாபியின் வாகன ஓட்டுனரை முதலில் கைகளைக் கட்டி வாகனத்தில் ஏற்றிவிட்டு(புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது) பின்னர் அவர் இறந்துவிட்டார் எனவும் கிளர்ச்சிப் படையினரும் அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. 


கடாபி பல குற்றங்களை இழைத்தவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரை கண்ட இடத்தில் சுட்டுக் கொலைசெய்ய கிளர்ச்சியாளர்களுக்கு என்ன அருகதை உள்ளது ? அவரை இலகுவாகப் பிடித்து நீதிமன்றின் முன் நிறுத்தியிருக்கலாம். அப்படி அவர்கள் நிறுத்தியிருந்தால் கிளர்ச்சிக்காரர்கள் மரியாதை சற்று உயர்ந்திருக்கும். ஆனால் அவர்கள் அவசரப் போக்கு மிக ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது.


குறிப்பாக பென்காசி என்னும் நகரில் உள்ளவர்கள் தாமே முதலில் புரட்சியை ஆரம்பித்ததால் நாட்டை ஆளும் பொறுப்பு தம்மிடமே உள்ளது என்றும் மிஸ்ராட்டா நகரவாசிகள் தாமே முழுப் பொறுப்பையும் எடுப்போம் என்று குழுக் குழுவாகப் பிரிந்து விவாதம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். பல முஸ்லீம் இனங்கள் வாழும் லிபியாவில் இனி ஆரம்பமாக இருக்கும் அரசியல் எப்பாதை நோகிச் செல்லும் எத்ததைய சவால்களைத் தோற்றுவிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.











புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடலை புதைப்பதில் இடைக்கால அரசின் அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இறைச்சி கூடமாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் கடாபி உடல் அனாதையாக கிடக்கிறது. இது லிபிய மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்கா நாடான லிபியாவை புரட்சி மூலம் கைப்பற்றி 42 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் கடாபி(69). கடந்த பிப்ரவரியில் அவருக்கு எதிராக கிளர்ச்சி தொடங்கியது. அவரை எதிர்த்தவர்கள் ஓரணியில் திரண்டு புரட்சி படை என்ற பெயரில் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு அமெரிக்கா உட்பட நேட்டோ படைகளும் ஆதரவு அளித்தன.
கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி தலைநகர் திரிபோலியை புரட்சி படை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அப்போது முதல் 2 மாதமாக தலைமறைவாகி இருந்த கடாபி அவரது சொந்த ஊரான சிர்தி யில் நெடுஞ்சாலைக்கு அடியில் செல்லும் பாதாள சாக்கடை குழாயில் பதுங்கி வாழ்ந்துள்ளார்.
அவரது இருப்பிடத்தை நேற்று முன்தினம் புரட்சி படையினர் கண்டுபிடித்தனர். துப்பாக்கி முனையில் அவரை வெளியே இழுத்துப் போட்டனர். அப்போது சுட்டு விடாதீர்கள் என்று கடாபி கதறியதாக புரட்சி படை வீரர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இருப்பினும் அவர் தப்ப முயன்றதாகவும், அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறி புரட்சி படையினர் சுட்டதில் கடாபி பலியானார்.
அவரது உடலை மிஸ்ரடா பகுதியில் முன்பு இறைச்சி கூடமாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் வைத்துள்ளனர். கடாபி உடலை அடக்கம் செய்வதில் இடைக்கால அரசை சேர்ந்தவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மத வழக்கப்படி உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறினர்.
ஆனால் சர்வாதிகார ஆட்சி நடத்திய கடாபி பலியானதில் சந்தேகம் ஏற்படாமல் இருக்க சில நாட்கள் அவரது உடலை வைத்திருக்கலாம் என்று சிலர் தெரிவித்தனர்.
ஈராக்கில் தூக்கிலிடப்பட்ட சதாம் உசேனை மத சடங்குகள்படி அடக்கம் செய்தது போல கடாபியையும் அடக்கம் செய்ய ஒரு பிரிவினர் வலியுறுத்தினர்.
ஆனால் கடாபியை அடக்கம் செய்யும் இடத்தை ரகசியமாக வைத்திருக்கவும், அவரது ஆதரவாளர்கள், உறவினர்களுக்கு தெரிந்து நினைவிடமாக வழிபடாமல் தடுக்கவும் வேண்டும் என்று சிலர் கூறினர். வேறு சிலரோ மகன் உட்பட உறவினர்கள் இருப்பதால் அவர்களை கொண்டு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்றனர்.
இதனால் பலியாகி 2 நாட்கள் ஆகியும் கடாபி உடல் அடக்கம் செய்யப்படாமல் கிடக்கிறது. இதுபற்றி தேசிய மாற்று அரசு கவுன்சில்(என்.டி.சி) கமாண்டர் அப்துல் சலாம் கூறுகையில்,“கடாபி உடல் முழு மரியாதையுடன் இஸ்லாமிய வழக்கப்படி 24 மணி நேரத்துக்குள் அடக்கம் செய்யப்படும்” என்றார்.
இதற்கிடையே கடாபி உயிருடன் பிடிபட்டும் அவரை சுட்டதுடன், ரத்த காயங்களுடன் கதறிய அவரை புரட்சி படையினர் அடித்து சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிர்ச்சி அளிக்கும் செல்போன் வீடியோ காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மனித உரிமைகளை காப்பதாக கூறும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இதற்கு என்ன பதில் சொல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடாபியிடம் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை அமைப்பு உத்தரவிட்டுள்ளது. மேலும் கடாபி மறைவுக்கு பிறகு லிபியாவில் ஜனநாயகம் மலர்ந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ள நிலையில் புதிய அரசு அமைப்பதில் புரட்சி படைக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், தலைமை பொறுப்புக்கு மோதல் உருவாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





உயிருடன் பிடிக்கப்பட்ட கடாபி!

[ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 05:19.05 AM GMT ]
லிபியாவின் முன்னாள் ஆட்சியாளர் கேணல் கடாபி அவரின் சொந்த ஊரான சேர்ட்டேவில் நேற்று வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர் கால்வாய்க் குழியொன்றிலிருந்து தேசிய இடைக்கால கவுன்ஸில் படைகளினால் பிடிக்கப்பட்டதாகவும் தன்னை சுட வேண்டாம் என அவர் மன்றாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் பினன்ர் அவர் தலையிலும் வயிற்றிலும் சுடப்பட்டு கொல்லப்பட்டார். கால்வாய்க் குழியொன்றிலிருந்து கேணல் கடாபி கிளர்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டபோது அவர் இராணுவ பாணி ஆடை அணிந்திருந்தார். பிக் வாகனமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட கேணல் கடாபி பின்னர் ஓரிடத்தில் வைத்து வாகனத்திலிருந்து இறக்கப்படும் காட்சிகளை லிபிய தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
தன்னை சுட்டுவிட வேண்டாம் என கடாபி கோரியதாகவும் கிளர்ச்சிப் படை வீரர் ஒருவரிடம் ‘ நான் உங்களுக்கு என்ன செய்தேன்’ எனக் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அவரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் தலையிலும் வயிற்றிலும் சுடப்பட்டார். அவரின் சடலத்தை கிளரச்சிப்படையினர் இழுத்துச் செல்லும் காட்சியை அல் ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பின்னர் அவரின் சடலும் அம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றப்பட்டது.
1942.06.07 ஆம் திகதி பிறந்த முவம்மர் கடாபி 1969 ஆம் ஆண்டு தனது 27 ஆவது வயதில் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். . தனது 42 வருடகால ஆட்சிப்பிடியை நேட்டோ ஆதரவுடனான கிளர்ச்சிப்படையினரிடம் கடந்த ஓகஸ்ட் மாதம் அவர் இழந்தார். தனது 69 ஆவது வயதில் அவர் நேற்று வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.