Pages

Sunday, July 3, 2011

இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஓர் விரைவுப் பார்வை யார் இந்த இஹ்வானுல் முஸ்லிமீன் ?.................................

இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஓர் விரைவுப் பார்வை
யார் இந்த இஹ்வானுல் முஸ்லிமீன் ?.................................

அன்பர்களின் கவனத்திற்கு:

இக்கட்டுரை யூத நஸாறாக்களின் நூற்களைத் தழுவியோ அல்லது இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் வழிகேடு எனக் கூறும் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவைப் பின்பற்றும் உலமாக்களின் நூற்களை மேற்கோள் காட்டியோ அல்லது நடுநிலையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை ஆதாரமாககொண்டோ எழுதப்படவில்லை. மாறாக இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஹஸனுல் பன்னா அவர்களால் எழுதப்பட்ட அவரது சுயச‌ரிதையான  முதக்கிறாத்துத் தஹ்வா வ த்தாஇயா ‘ (பிரச்சாரத்தினதும் பிரச்சாரகனினதும் நாட்குறிப்பு) எனும் நூலை ஆதாரமாகக்கொண்டே எழுதப்பட்டது என்பதை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.!!!

அறிந்தவை…….

இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் ஓர் உலகளாவிய இயக்கம். முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் ஜனரஞ்சகமான இயக்கம். முஸ்லிம் சமூகத்தில் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையை ஏற்படுத்தி அதனூடாக இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்க பாடுபடும் ஓர் இயக்கம்.  இவ்வியக்கம் எகிப்தில் ஹஸனுல் பன்னா என்பவரால் உருவாக்கப்பட்டதுஎன்பன போன்ற இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் பற்றிய மேலோட்டமான விடயங்களையே எம்மில் பலர் அறிந்து வைத்துள்ளோம்.

அறியவேண்டியவை……..

எனினும் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் ஸ்தாபகர் ஹஸனுல் பன்னா என்பவர் யார்அவருடைய வாழ்க்கைப் பின்புலம் என்னஎத்தகைய சூழலில் அவர் இவ்வியக்கத்தைத் தோற்றுவித்தார்? இவ்வியக்கத்தை உருவாக்க வழிநடாத்த  அவர் கையாண்ட வழிமுறைகள் (தந்திரோபாயங்கள்) என்ன? ‘ என்பன போண்ற விடயங்களை இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க உலமாக்கள் ஆய்வாளர்கள் அபிமானிகள் உட்பட பலரும் அலட்டிக் கொள்வதுமில்லை; அறிந்துகொள்ள ஆர்வங்காட்டுவதுமில்லை; பக்கசார்பற்ற நடுநிலையான ஆய்வுக்குட்படுத்த முன்வருவதுமில்லை.???

அல்லாஹ்வின் உதவியால் ஒரு சிறு முயற்சி

மேற்படி இடைவெளியை நிரப்பும்  முயற்சியின் ஒரு கட்டமாகவே இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகரின் வாழ்க்கைப் பின்புலத்தையும் அவர் எவ்வாறு இவ்வியக்கத்தைத் தோற்றுவித்தார் என்பதையும் சுருக்கமாக இக்கட்டுரையில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஓர் விரைவுப் பார்வை
பெயர்:  ஹஸன் அல் பன்னா
பிறப்பு:
இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஹஸன் அல் பன்னா என்பவர் எகிப்தின் புஹைறாமாகாணத்தில் உள்ள மஹ்மூதிய்யாஎனும் கிராமத்தில் 1906ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி பிறந்தார்.
ஹஸனுல் பன்னாவின் தந்தை:
இவரது தந்தை அஹ்மத் அப்துர் றஹ்மான் அல் பன்னா  என்பவர் கடிகாரம் திருத்தும் தொழிலை செய்துவந்ததுடன் ஹதீஸ் கலையை கற்ற ஒரு அறிஞராகவும் திகழ்ந்தார்.

முஸ்னத் அஹ்மத்எனும் மாபெரும் ஹதீஸ் கிரந்த்திற்கு இவர் வழங்கிய அல் பத்ஹுர் ரப்பானிஎனும் ஒழுங்கமைப்பு’  நூலும் புலூகுல் அமானிஎனும் விரிவுரை நூலும் இவரின் மகத்தான பணிகளுள் குறிப்பிடத்தக்கவையாகும். (அல்லாஹ் அன்னாரின் பணிகளை அங்கீகரித்து என்றென்றும் அருள் புரிவானாக)

ஹஸனுல் பன்னா ஒரு தீவிர ஸூபியாக‌:

சொந்த ஊரான மஹ்மூதியாவில் காணப்பட்ட குர்ஆன் மத்ரஸாவில் இணைந்து அல்குர் ஆன் முழுவதையும் மனனம் செய்ய வேண்டும் என்ற தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக  அரச பாடசாலையில் இணைந்துகொண்ட ஹஸனுல் பன்னா அவர்கள் அக்காலத்தில் காணப்பட்ட தரீக்கா அமைப்புகள் சிலவற்றில் சேர்ந்து தன்னை ஒரு ஸூபியாக பயிற்றுவிக்க ஆரம்பித்தார்.

இவர்  தனது பாடசாலை நாட்களில் ஸஹ்பான் றஜப் ஆகிய இரு மாதங்கள் நோன்பு நோற்றதையும் தனது நன்பர்கள் சிலருடன் சேர்ந்து வகுப்பறையில் கல்வத்’  (தனிமை) அனுஷ்டித்ததையும்!! அதன் போது மௌனவிரதம்இருந்ததையும் இதனால் பாடசாலையில் ஏற்பட்ட குழப்பத்தையும் அவரே தனது சுய சரிதையில் எடுத்தெழுதியிருப்பது வழிகெட்ட ஸூபித்துவத்தினால் ஹஸன் அல் பன்னா அவர்கள் சிறுபிராயத்திலேயே எந்தளவிற்கு தாக்கமடைந்திருந்தார் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
(பார்க்க முதக்கிறாத்துத் தஹ்வா வ த்தாஇயா 19_ 31)

ஹஸனுல் பன்னா ஓர் ஆசிரியராக‌:

இவ்வாறே தனது ஆரம்பக்கல்வியை பித்அத்துகளிலும் மௌனவிரதம் போண்ற வேற்றுமத வழிபாட்டு முறையிலும் கழித்த ஹஸனுல் பன்னா அவர்கள் தனது பதி்நான்காம் வயதில் தமன்ஹூர்நகரில் உள்ள முதல் நிலை ஆசிரியர் பயிற்சிப் பாடசாலையில் சேர்ந்துகொண்டார்.

மேற்படி பாடசாலையில் சேர்வதற்கு அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருக்க வேண்டும்என்ற தகமை கட்டாயமாக இருந்தபோதும் அல்குர்ஆனின் ஒரு சில பகுதிகளையே (ஜுஸ்உ) மனனம் செய்திருந்த ஹஸன் அல் பன்னாவை அப்பாடசாலை அதிபர் பஸீர் தஸூகி மூஸாஅவர்கள் ஓர் வாய்மொழிப் பரீட்சை மூலமாகவும் மற்றொரு எழுத்துப் ப்ரீட்சை மூலமாகவும் பரிசோதித்து இரு வருட கற்கை நெறிக்காக அப்பாடசாலையில் சேர்த்துக் கொண்டார்.

ஹஸனுல் பன்னா ஓர் தீட்சை பெற்ற முரீதாக:

இக்காலப்பகுதியியே ஹஸனுல் பன்னா அவர்களின் வாழ்வில் முக்கிய காலகட்டமாகும். இக்காலப்பகுதியலிலேயே வழிகெட்ட ஷாதுலிய்யா தரீக்காவின் உட்பிரிவுகளில் ஒன்றான ஹஸ்ஸாபிய்யா தரீக்காவின் முக்கிய பிரமுகர்களான ஷேக் ஷிப்லி முஹம்மத் அபூ ஷவ்ஷாஇ ஷேக் ஸெய்யித் உஸ்மான் அப்துல் முஹ்தால் போன்றோரின் நட்பும் அத‌னூடாக தரீக்காவின் த‌லைவர் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் அறிமுகமும் ஹஸனுல் பன்னாவிற்கு ஏற்பட்டது.

இவர்களோடு இணைந்து தமன்ஹூர்நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுவரை கால்நடையாகச் சென்று ஔலியாக்களின் சமாதிகளை!!! தரிசிக்கும் செயல்களிலும் ஹஸனுல் பன்னா அவர்கள் ஈடுபட்டார்கள்.

மேற்படி சூழலில்தான் ஹஸனுல் பன்னா அவர்கள் தரீக்காவின் தலைவர் ஷேக் அப்துல் வஹ்ஹாப் அவர்களிடம் பைஅத்’ ( ‘எச்சந்த‌ர்ப்பத்திலும் தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்என்ற உறுதி மொழி)  பெற்றுக் கொண்டு  தரீக்காவில் இணைந்து அல்ஜம்இய்யதுல் ஹஸ்ஸாபியா லில் பிர்ஹஸ்ஸாபியா நலன்புரிச் சங்கம் எனும் சங்கத்தை ஸ்தாபித்து மிகக் கடுமையாக உழைத்து அச்சங்கத்தின் செயலாளர் பதவியையும் அடைந்து கொண்டார்கள்.

  ‘பைஅத்ஒரு சிறு விளக்கம்:

இவ்விடத்தில் இஸ்லாத்தின் பார்வையில் பைஅத்என்றால் என்ன என்பதை மிகச் சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் இரு வகையான பைஅத்க‌ளையே அனுமதித்து ஆர்வமூட்டி வலியுறுத்துகின்றன.

1. அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவதாக அல்லாஹ்விடம் பைஅத்செய்வது.

2.அல்லாஹ்வுக்கு மாற்றமில்லாத விடயங்களில் இஸ்லாமிய ஆட்சியாளருக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக அவரிடம் பைஅத்செய்வது.

மேற்படி முதலாவது வகையான அல்லாஹ்விடம் செய்யவேண்டிய பைஅத்தை ‘(நபியே) உம்மிடம் பைஅத்செய்பவர்கள் அல்லாஹ்விடம் பைஅத்செய்கிறார்கள்’ (48:10) எனும் அல்குர் ஆன் வசனத்திற்கேற்ப நபி (ஸல்) அவர்களிடம் செய்துகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்பு இவ்வகை பைஅத்தை வேறு யாரிடமும் செய்துகொள்ளக்கூடாது.

இரண்டாவது வகையான பைஅத்தை சர்வ அதிகாரங்கொண்ட இஸ்லாமிய ஆட்சியாளருக்கு செய்யவேண்டுமே தவிர தரீக்காக்களின் ஷேக்மார்கள் இயக்கத்தலைவர்கள் ஆகியோருக்கு ஒரு போதும் செய்துகொடுக்கக்கூடாது என்பதை மாத்திரம் இவ்விடத்தில் சுருக்கமாக விளங்கிக்கொண்டு எமது கட்டுரையைத் தொடர்வோம்.

ஹஸனுல் பன்னா ஒரு தரீக்காப் பிரச்சாரகராக:

இவ்வாறே ஆரம்ப ஆசிரியர் பயிற்சியை இரு வருடங்களில் பூர்த்தி செய்த ஹஸனுல் பன்னா அவர்கள் பின்பு தாருல் உலூம்கல்லூரியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியை தனது இருபத்தியாறாவது வயதில் முழுமையாக முடித்து 1928ம் ஆண்டு வெளியேறினார்கள்.

குறித்த ஆண்டிலேயே எகிப்தின் பிரபலமான இஸ்மாஈலிய்யா’  நகரத்தில் அறபு மொழி ஆசிரியராக நியமனம் பெற்று கடமையாற்ற ஆரம்பித்தார்.

மேற்குறிப்பிட்ட இஸ்மாஈலிய்யாநகரத்திலேயே ஹஸனுல் பன்னாவின் முழுத்திறமையும் வெளிப்பட்டது. அறிவையும் அறிஞர்களையும் மதிக்கும் இஸ்மாஈலியா மக்கள் மத்தியில் அல்குர் ஆனின் சில பகுதிகளையும் தீவானுல் முதனப்பிஹ்உட்பட சில அறபுக் கவித்தொகுப்புகளையும் மனனம் செய்திருந்த ஹஸனுல் பன்னா அவர்கள் தனது உணர்வுபூர்வமான பேச்சினாலும் உணர்ச்சி ததும்பும் வார்த்தைகளாலும் மக்கள் மத்தியில் இடம்பிடித்துக் கொண்டார்கள்.

பள்ளிவாயில்களில் மாத்திரமின்றி மக்கள் மண்றங்கள்இ உணவகங்கள்இ பொது மைதானங்கள்இ தெருமுனைகள் போண்ற இடங்களில் ஹஸனுல் பன்னா அவர்களால் முடுக்கிவிடப்பட்ட பிரச்சாரத்தின் காரணமாக மக்கள் சாரிசாரியாக ஹஸ்ஸாபிய்யாதரீக்காவில் இணைந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு மக்கள் ஆதரவு பெருகப்பெருக  வெறுமனே ஒரு தரீக்காவின் நலன்புரிச்சங்கம்என்ற நிலையில் இருந்து சீர்திருத்தம்இ சமூக மாற்றம்இ தீமையை எதிர்த்தல்இ பாதிக்கப்பட்டோருக்காகக் குரல் கொடுத்தல் போண்ற சமூக நலன் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இதன் காரணமாக இஸ்மாஈலிய்யா நகரத்தில் தனது தரீக்காவுக்கென தனியான பள்ளிவாயில் ஒன்றையும் பெண்களுக்கான பிரச்சார நிலையம் (சென்டர்) ஒன்றையும் இஸ்லாமிய கல்வி நிறுவனம் அமைத்துக்கொண்டார்.

இவ்வாறே அரசியல் ஆட்சி என்பனவற்றுடன் அனுவளவும் சம்பந்தப்படாமல் முழுக்க முழுக்க ஒரு ஸூபித்துவ அமைப்பாகவே செயற்பட்டு நாடளாவிய ரீதியில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொண்டதன் பின்புதான்இ ஹஸ்ஸாபிய்யா தரீக்காவுக்குள் தனது கை மேலோங்கியதன் பின்புதான் ஹஸனுல் பன்னா தனது துரோகச் செயலை செயற்படுத்த ஆரம்பித்தார்.

ஹஸனுல் பன்னா குருவை மிஞ்சிய சீடனாக‌:

ஆம் எச்சந்தர்ப்பத்திலும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்என தரீக்காவின் தலைவர் ஷேக் அப்துல் வ‌ஹ்ஹாப் அவர்களுக்கு செய்திருந்த பைஅத்’ (உறுதி மொழி) யை உடைத்துக்கொண்டு தரீக்காவின் பெருமள‌விலான தொண்டர்களை தன் பக்கம் சேர்த்துக்கொண்டு இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் தனி இயக்கத்தை 1928ம் ஆண்டில உருவாக்கினார்.!!!‌

மேற்படி பச்சைத்துரோகத்தை ஹஸனுல் பன்னா அவர்களே தனது சுய சரிதையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தோற்றுவிக்கப்படும் வரை ஷேக் அப்துல் வஹ்ஹாப் அவர்களுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்து வந்தது. எனினும் இஹ்வானுல் முஸ்லிமீன் உருவாக்கப்பட்ட போது அவருக்கு அதில் உடன்பாடு இருக்க‌வில்லை. அது அவரது அபிப்பிராயம்: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது எமது அபிப்பிராயம்.!!!?’

பிளவுபட்ட இஹ்வான்கள்:

இவ்வாறு துரோகத்தில் தோற்றுவிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை ஹஸனுல் பன்னா அவர்களால் தான் கொல்லப்படும் வரை ஓரணியாக வழிநடாத்திச்செல்ல முடிந்ததா? அல்லது ஒரு கெட்ட செயலுக்கான‌ கூலி அதைப் போண்றதொரு கெட்ட செயலே’ (42:40) எனும் அல்குர்ஆன் வசனத்திற்கு ஏற்பவும் விணை விதைத்தவன் விணை அறுப்பான்; திணை விதைத்தவன் திணை அறுப்பான்எனும் முதுமொழிக்கேற்பவும்   உள்ளிருந்து ஏற்பட்ட துரோகத்தால் தோற்றுவிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு உள்ளிருந்து ஏற்பட்ட துரோகங்களினாலேயே பல கூறுகளாக பிளவுப்ட்டுப் போனதா? என்பதை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் கட்டுரைகளில் தொடந்தும் நோக்குவோம்.

எமது பிரார்த்தனை

எங்கள் இரட்சகனே! எங்களையும் எங்களுக்கு முன்னால் விசுவாசங் கொண்ட சகோதர‌ர்களையும் மன்னிப்பாயாக! இன்னும் விசுவாசங்கொண்டவர்கள் மீதான காழ்ப்புணர்வை எங்கள் உள்ளங்களில் ஏற்படுத்திவிடாதே! எங்கள் இரட்சகனே! நீயே கிருபை உள்ளவனாகவும் இரக்கம் உள்ளவனாகவும் இருக்கின்றாய்’. அல்குர்ஆன் (59:10)
நன்றி புஆத் அஷ்கர்

அசத்தியத்தை வேறு பிரித்துக் காட்டும் அற்புத வேதம் அல் குர்ஆன்


அசத்தியத்தை வேறு பிரித்துக் காட்டும் அற்புத வேதம் அல் குர்ஆன்
இந்தக் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (2 : 185)
ரமழான்மண்ணகத்து மைந்தர்களை மனித குல மாணிக்கங்களாக பட்டைத் தீட்ட வந்த மகத்தான மாதம். தீமைகளின் சுட்டெறிக்கும் தீச்சுவாலையால் காயப்பட்டுப் போன கல்புகளை கறை நீக்கி சுவனக்கரை சேர்க்க வந்த கண்ணிய மிகு மாதம். பாவப்பட்டுப் போன பாவிகளின் பழுதுப்பட்டுப் போன பண்புகளை பக்குவப்படுத்த வந்த பண்பாட்டுப்பாசறை. உலகச்சத்தை உதறித்தள்ளி இறையச்சத்தை உள்ளத்தில் விதைக்க வந்த உன்னத மாதம். ஏழைகளின் ஏக்கத்தினை அறிந்து ஏவல் புரியத்தூண்டும் எழில் மிகு மாதம்
இவை ரமழான் குறித்து எம் இதயங்களில் இழையோடி உதடுகளில் வெளிப்படும் வனப்பான வர்ணனை வார்த்தைகள். இவ்வத்தனை வர்ணனைகளையும் தாண்டி ரமழானுக்குள் புதைந்துள்ள இன்னுமோர் உண்மை சுடர்விட்டு ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆம்! ரமழான் என்ற நாமம் கிறீடமாய் ஜொலிப்பதற்கான அடிப்படை காரணம் அம்மாதத்தில் உலக வழிகாட்டி அல்குர்ஆன் அருளப்பட்டமை ஒன்று தான். இறைவழிகாட்டுதல் வழங்கப்பட்ட ஒரே காரணத்திற்காய் தான் அம்மாதத்தில் நோன்பு நோற்குமாறு வான் மறை எம்மைப் பணிக்கின்றது.
இவ்வளவு கீர்த்தி மிகுந்த திருக்குர்ஆனின் பணி குறித்து அதன் அதிபதி அல்லாஹ்வே மேற்குறித்த 2:185 வசனத்தில் விதந்துரைக்கின்றான். இவ்வேத வரி வான்மறையின் அடிப்படையான 3 பணிகளை முத்தாய்ப்பாய் எம் விழி முன்னால் முன்வைக்கின்றது:
1)            மனிதர்களுக்கு நேர்வழி காட்டும்.
2)            நோ்வழியை தெளிவாகக் கூறும்.
3)            (அசத்தியத்தை விட்டு சத்தியத்தை) வேறு பிரித்துக் காட்டும்.
எத்தனையோ ரமழான்கள் எம்மைக்கடந்து சென்றிருக்கின்றன. ஆனால், திருக்குர்ஆன் எதற்காய் அருளப்பட்டதோ அக்கடமையை எம் முஸ்லிம் சமூகம் செவ்வனே செய்திருக்கிறதா என்றால் விடை கேள்விக் குறியாய் எம் விழிமுன் நிழலாடுவதைக் காணலாம்.
இன்று இந்நாட்டில் வாழும் 92 சதவீதத்தினர் நேர்வழி என்று எண்ணி வழிகேட்டின் வாயிலில் வீழ்ந்து கொண்டிருப்பதை அன்றாடம் காண்கின்றோம். கற்கள், சிலைகள், இயற்கைப் பொருட்கள் என்ற மாயையின் பின்னால் பெரும்பான்மை சமூகம் தங்களுக்கான நேர்வழியை தேடிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், சத்தியப்போர்வையில் உலாவரும் பரலேவிஸக் கொள்கையால் காவுகொள்ளப்பட்ட எம் பெயர் தாங்கி முஸ்லிம்கள் கப்ர் வணக்கம், கொடியேற்றம் உள்ளிட்ட வழிகேடுகளை நேர்வழியாய் நினைத்து பற்றுருதியுடன் ஏற்றுப்பின்பற்றுவதனை பரவலாய் காண்கிறோம்.
இவ்விரு சாராருக்கும் இஸ்லாத்தின் நேர்வழியை தெளிவாகச் சொல்லக்கடமைப்பட்ட கற்றறிந்த கனவான்களோ நேர்வழியை தெளிவாக எடுத்துரைக்காது, சத்தியத்தைச் சொன்னால் ஒற்றுமை குழைந்து விடும் என்ற போலிகோஷத்தை ஏந்திப்பிடித்து நேர்வழியை தானும் பின்பற்றாது, பிறருக்கும் தெளிவாகச் சொல்லாது புசி மெழுகிப்போகும் வங்குரோத்து நிலையை கடைபிடித்து ஒழுகுவதனை படித்த மட்டத்தில் காணமுடிகிறது.
இவ்வத்தனை வழிகேடுகளையும் சுட்டிக்காட்டி தோலுறித்துக்காட்டக் கடமைப்பட்ட கொள்கைவாதிகளோ கோழைத்தனம் மிகுந்த கோமாளிகளாய் நிறம்மாறி நிற்கிறார்கள். கலிமாவின் பாட்டையில் பரலேவிஸம் வழிகேடு, ஷீயாயிஸம் வழிகேடு, தப்லீக் வழிகேடு, இக்வானிஸம் வழிகேடு, ஜமாஅதே இஸ்லாமி வழிகேடு என்று அசத்தியத்தை வேறுபிரித்துக்காட்ட வேண்டியவர்கள்  சமரசவாதிகளுடன் கைகோர்த்து, ஒன்றாய் மேடையேறி, கொஞ்சிக் குழாவுவதை காணமுடிகிறது.
மொத்தத்தில், அல்குர்ஆன் எம்மிடம் எதிர்பார்க்கும் இம்மூன்று பணிகளும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே பல ரமழான்கள் எம்மைக்கடந்து சென்றவன்னம் உள்ளன. எம்மை எதிர்கொள்ளப் போகும் ரமழானில் எம் பணியின் சுமை குறித்து எம் சமூகம் சிந்திக்குமா?    

ஷீஆக்களின் புரட்சியை அங்கீகரித்த மெளலான மெளதூதி!


ஷீஆக்களின் புரட்சியை அங்கீகரித்த மெளலான மெளதூதி!
_______________________________________________________

இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து தடம்புரண்டு போன வழிகெட்ட கூட்டங்களில் ஷீஆக்கள்என்போரும் ஒரு சாரார் என்பதை நாம் அனைவர்களும் நன்கறிவோம். பெரியார்களுக்கும் இறைசெய்திகள் வரும் என்று நம்பி ஈமானை இழந்த ஒரு கூட்டமே ஷீஆக்கள் ஆவர். ஷீஆயிஸமென்பது மிகவும் பயங்கரமான ஒரு கொள்கையாகும். இக்கொள்கையை முஹத்திஸீன்கள் புகஹாக்கள் அறிஞர் பெருமக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் கண்டித்து பற்பல நூற்களை இஸ்லாமிய உலகிற்குத்தந்துள்ளனர்.

முஸ்லிம்களின்
ஈமானை அடியோடு தகர்க்கும் பிழையான அடிப்படைகளை உட்பொதிந்த நூலாகியஅல்காபிஎனும் நூலையே ஷீஆக்கள் வேதவாக்காக போற்றி வருகின்றனர். இன்றும் கூட சத்தியப்பிரச்சாரத்தின் போது யாராவது ஷீஆயிஸத்தைக் கண்டித்தால் அவர்களுக்கு கொலை மிரட்டல்களும் அச்சுருத்தல்களும் இந்த ஷீஆக்களால் வழங்கப்படுவது ஊடகங்களுக்குத் தெரியாமலில்லை.

திருமறைக் குர்ஆனையும்
ஸுன்னாவையும் ஓரங்கட்டி விட்டு ஷீஆயிஸத்தைப் பிரச்சாரம் செய்துவந்த இஸ்லாத்தின் ரகசிய விரோதியே ஈரானைச் சேர்ந்த ஆயதுல்லாஹ் கொமைனிஎன்பவர். இவரால் ஈரானில் மேற்கொள்ளப்பட்ட புரட்சி ஷீஆக்களுக்கான புரட்சியே அன்றி அது இஸ்லாத்திற்கான அல்லது முஸ்லிம்களுக்கான புரட்சியோ அல்ல.

கொமைனியின்
பிழையான கொள்கைகளை இஸ்லாமிய உலகிற்கு அம்பலமாக்கிய அறிஞர்களின் மிகவும் முக்கியமான ஒரு அறிஞரே முக்பில் பின் ஹாதி(ரஹிமஹுல்லாஹ்)அவர்கள். கொமைனியின் வழிகேடுகள் பற்றி

الإلحاد الخميني في أرض الحرمينஎன்ற பெயரில் தனியான ஒரு நூலையே எழுதியுள்ளார்க‌ள்.

இஸ்லாத்தையே
விட்டு திசைமாறி புதிய‌ம‌த‌ம் க‌ண்ட‌ இக்கொமைனியின் ஈரானிய‌ப் புர‌ட்சியைஇஸ்லாமிய‌ப் புர‌ட்சிஎன‌ மெள‌லானா மெள‌தூதி கூறியதை எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலிருந்து வெளிவரும் ம‌ஜ‌ல்ல‌துத் த‌ஃவாஎனும் ச‌ஞ்சிகை 1979ம் ஆண்டு ஓக‌ஸ்ட் மாத‌ம் வெளியான‌ த‌ன‌து இருப‌த்தி ஒன்ப‌தாவ‌து இத‌ழில் பின்வ‌ருமாறு பிர‌சுரித்திருந்த‌து.அவ்வித‌ழின் அர‌பு மூல‌த்தை இங்கு காண‌லாம்.

وثورة الخميني ثورة إسلامية والقائمون عليها هم جماعة إسلامية وشباب تلقوا التربية في الحركات الإسلامية وعلى جميع المسلمين عامة والحركات الإسلامية خاصة أن تؤيد هذه الثورة وتتعاون معها في جميع المجالات


கருத்துச்
சுருக்கம்: கொமைனியின் புர‌ட்சி அது இஸ்லாமிய‌ப் புர‌ட்சியே!அப்புர‌ட்சியை மேற்கொண்ட‌வ‌ர்க‌ள் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பும் ப‌ற்ப‌ல‌ இய‌க்க‌ங்க‌ளிலிருந்து ப‌யிற்சி பெற்ற‌ இளைஞ‌ர்க‌ளுமே!. இது மெளலான மெளதூதியின் கூற்று ஆகும்.

அன்பார்ந்த‌ ச‌கோத‌ர‌ நெஞ்ச‌ங்க‌ளே!


ச‌ற்று
நிதான‌மாக‌ச் சிந்தியுங்க‌ள். ஷீஆக்க‌ள் என்போர் யார்? இஸ்லாத்திற்கும் ஷீஆயிஸ‌த்திற்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? ஷீஆக்க‌ளைப் ப‌ற்றி ஒரு முஸ்லிமின் ந‌ம்பிக்கை எப்ப‌டியான‌ வ‌கிப‌ங்கில் இருக்க‌வேண்டும்? ஒரு முஸ்லிம் அல்குர்ஆனைக் குறைகாணும் கொடிய‌ காபிர்க‌ளோடு கைகோர்க்க‌ முடியுமா? முடியாது என்றால் மெள‌லான‌ மெள‌தூதி எப்ப‌டி கொமைனியின் புர‌ட்சியை அங்கீக‌ரிக்கின்றார்? கொமைனி ஒரு இஸ்லாமிய‌க் கொள்கைவாதியில்லை. ஈமானுக்கு த‌ன‌து எழுத்துக்க‌ளாலும் பேச்சுக்க‌ளாலும் வேட்டுவைத்த‌ இக்கொடிய‌வ‌னின் புர‌ட்சியை அங்கீக‌ரிப்ப‌து இஸ்லாத்தின் அடிப்ப‌டைக்கே மாற்ற‌மில்லையா?

என‌வே அன்பார்ந்த‌ ச‌கோத‌ர‌ர்க‌ளே!


ஜ‌மாஅத்தே
இஸ்லாமியை நாம் விம‌ர்சிப்ப‌து ஏதோ எடுத்தேன் க‌விழ்த்தேன் என்ப‌து போன்ற‌ல்ல‌. இது மாதிரியான‌ இஸ்லாத்திற்கு மாற்ற‌மான‌ போக்குக‌ளே அவ்விய‌க்க‌த்தை நாம் விம‌ர்சிப்ப‌த‌ற்குக் கார‌ண‌ம்.

ஷீஆக்க‌ருத்தில்
வாழ்ந்த‌ இக்கொமைனியை ஒரு முஸ்லிம் இஸ்லாமிய‌வாதியாக‌ ஒருக்கால‌மும் ஏற்றுக்கொள்ள‌ மாட்டான். ஏற்றுக்கொள்ள‌வும் முடியாது. ஆனால் மெளலானா மெள‌தூதியோ கொமைனியின் புர‌ட்சியை இஸ்லாமிய‌ப் புர‌ட்சிஎன‌ வ‌ர்ணிக்கிறார்.

ஜ‌மாஅத்தே இஸ்லாமி ச‌கோத‌ர‌ர்க‌ளே! க‌ண்விழியுங்க‌ள்1!


த‌க்லீத் எனும் க‌ண்மூடிப்பின்ப‌ற்ற‌லைக் கைவிடுங்க‌ள்!


நேர்வ‌ழி காட்ட‌ அல்லாஹ் போதுமான‌வ‌ன்.