Pages

Sunday, April 8, 2012

ஆதிக்க வெறியாட்டத்திற்கான துரும்புச் சீட்டே ஜெனீவாப் பிரேரணை!



ட்டுமொத்த உலகும் உன்னிப்பாய் அவதானித்து வந்த, ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத் தொடரில், இலங்கை குறித்து அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு, மேற்குலக மேலாதிக்கத்தை வழுப்படுத்தும் விதமாய் வெற்றியடைந்துள்ளது. சுதந்திர தேசங்களின் இறைமைக்குள் தன் ஆதிக்க வீச்சை செலுத்தி, மூக்கை நுழைத்து, நாட்டு வளங்களை மோப்பம் பிடித்து சுரையாடும் மனித உரிமை மீறல் முன்னெடுப்புக்கு ஆதரவாய் 24 நாடுகளும், ஏகாதிபத்திய உணர்வுக்கு எதிராய் 15 நாடுகளும் வாக்களித்துள்ளன. அதே சமயம், 8 நாடுகள் அமெரிக்க ஆதிக்கத்துக்கு ஆட்பட்டு அமைதிகாத்து வாக்களிப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டு நாங்கள் இன்னமும் காலனித்துவத்தின் அடிமைகளே!என்பதனை நாசுக்காய் ஒத்துக் கொண்டும் உள்ளன.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணைஎன்ற சுலோகத்துடன், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக இலங்கை அரசு நடைமுறைப்படுத்தல் வேண்டும் என்றும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களுக்கு எதிராய் போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கின்றன என்றும், இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண்பதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் என்றும் அமெரிக்காவுக்கு இலங்கை தேசம் மீதும், தமிழ் மக்கள் மீதும் அலாதியான அக்கறை திடீர்  என்று பிரவாகிக்க என்ன காரணம்?

உலக போலிஸ்காரன் நான் தான் என்ற மமதையில், ர்வதேச நாடுகளின் ஆதிக்க அச்சாணியை தன் கழுகுப்பிடிக்குள் தக்கவைப்பதன் மூலம், ஏனைய தேசங்களின் செல்வம் கொழிக்கும் வளங்களை கபளீகரம் செய்து, தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் நாரிப்போன நரித்தன எண்ணம். உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் அமெரிக்காவின் உலக வல்லரசுஎன்ற ஆதிக்க உணர்வை உலையில் போடும் விதமாய், உலக அரங்கில் சீனா மற்றும் இந்தியாவின் ஆதிக்கம் எழுச்சியடைந்து வருகின்றமை அமெரிக்காவின் கனவுக்கோட்டைகளை கல்லடிப்பட்ட கண்ணாடிக்கட்டிடமாய் துகள் துகளாக தூர்ந்து போகச் செய்துள்ளது.

அதுமட்டுமன்றி, ஆசிய பிராந்தியத்தில் அணு சக்தி ஆயுத வளம்மிக்க நாடுகளாக சீனா, இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானும் வளர்ந்து வருவதானது முஸ்லிம்களின் கை ஓங்குவதற்கும் வாய்ப்பாக மாறிவிடும் என்றும் அமெரிக்கா அச்சம் கொண்டுள்ளது. பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப ரீதியாக எழுச்சி பெறும் சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானை பெட்டிப்பாம்பாய் அடங்கச் செய்வதானால், ஆசிய கடற் பிராந்தியத்தில் மையல் கொண்டு தன் ஆதிக்க வேர்களை ஆழமாய் படரவிட வேண்டிய நிர்ப்பந்த நிலை அமெரிக்காவுக்கு உண்டு.

மெரிக்காவின் ஆதிக்க வெறிபிடித்த கழுகுப் பார்வை இலங்கை மேல் திரும்புவதற்கான காரணமும் இது தான். எந்த நாடுகளை ஒழிக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறதோ அந்நாடுகளின் மையப் புள்ளியாக ஆசிய கடற் பரப்பில் இலங்கையே உள்ளது. இலங்கையின் மன்னார் கடற் பரப்பில் இனம் காணப்பட்டுள்ள பெற்றோலிய வளம் இந்தியாவின் கைகளிலும், திருகோணமலை இயற்கை துறைமுகம், அம்பாந்தோட்டை துறைமுகம் அத்தோடு வீதி மற்றும் உள்ளாச ஹோட்டல்கள் நிர்மாணப்பணிகள் சீனா வசமும், இல்மனைட்டு எனும் கனிய வளம் யப்பானிடமும் பறிபோய் உள்ளது. இலங்கையில் அமெரிக்காவின் கரங்களில் மிச்சம் இருப்பது பொஸ்பேட்எனும் கனிய வளம் மட்டுமே!

எழுச்சி பெற்று வரும் சீன, இந்திய, பாகிஸ்தானிய பலத்தை ஒழித்து, மெரிக்க வல்லாதிக்கத்தை சர்வதேச அரங்கில் மீண்டும் நிலைபெறச் செய்வதற்கும், ஆசிய கடற்பரப்பை தன்னாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கும், இலங்கை மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பணம் கொழிக்கும் வளங்களை சுரையாடுவதற்கும் ஒரே வழி இலங்கைக்குள் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதே. இதற்காக அமெரிக்கா கையில் எடுத்த ஆயுதமே போர்கால குற்றச்சாட்டு, மனித உரிமை மீறல், தமிழ் மக்களின் நலன்என்ற கண்கவர் கோஷம்!

இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் என்பதிலோ தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதனையோ நாம் மறுதலிக்க வில்லை. அதே சமயம், மூன்று தசாப்தமாய் இந்நாட்டை சுடுகாடாய் மாற்றி, தொப்புல் கொடி உறவாய் கூடிப்பழகிய முஸ்லிம்களை புர்வீக புமியை விட்டும் துரத்தி, இறையாலயத்தில் வழிபட்ட பச்சிளம் பாலகர்களை கூட காட்டுமிராண்டித்தனமாய் சுட்டுத்தள்ளிய தமிழ் விடுதலைப்புலிகள் எனும் பயங்கரவாத அமைப்பை ஒழித்துக்கட்டிய இலங்கை அரசை மெச்சாமல் இருக்க முடியாது.

தன் சுயநலத்திற்காய் உலகையே சுடுகாடாய் மாற்றி வரும் உலகப் பயங்கரவாதி அமெரிக்காவுக்கு இலங்கை தேசம் குறித்து கருத்துச் சொல்ல இம்மியளவும் அருகதை கிடையாது. வியட்நாம், ஈராக், ஆப்கான், லிபியா, பாகிஸ்தான் வரிசையில் எம் இலங்கை தேசத்தையும் இணைத்துக் கொள்ள நாம் இடமளிக்கக் கூடாது. அமெரிக்காவின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தும் எத்தனங்கள் பிரேரணை வெற்றியோடு பல வடிவங்களில் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. அரசியல் காய் நகர்த்தல், ஆளும் அரசுக் கெதிராய் களகங்களை தோற்றுவித்தல், முடிவுற்ற யுத்தத்தை பற்றி எறிய வைக்க முஸ்தீபுகள் செய்தல்,இந்தோனேஷியாவிலிருந்து தன் கருத்துக்கு சார்பான கிழக்குத் தீமோரை பிரித்தது போன்று ஒன்றித்த இலங்கையை துண்டாடி தனக்கு தோதுவான கிறிஸ்தவ ஆளுகை பிரதேசமாய் வடக்கை மாற்றுதல் போன்ற நரித்தன தந்திரங்கள் இலங்கையை சுற்றி பின்னப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை!