Pages

Saturday, May 14, 2011

தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை !!!




தஜ்ஜால் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புகளை முதலில் அறிந்து கொள்வோம்.



தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை !!!



நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்ட தில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக் கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி),



நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127 ,3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, ,7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408, 3057



ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)



நூல்: முஸ்லிம் 5239



தஜ்ஜாலின் அங்க அடையாளங்கள்.



ஒரு கண் ஊனமுற்றவனாக அவன் இருப்பான். அது எந்தக் கண் என்பதில் இருவிதமான ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவனது ஒரு கண் ஊனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.



'நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அல்லாஹ் ஒரு கண் ஊனமானவன் அல்லன். ஆனால் தஜ்ஜாலின் வலக்கண் சுருங்கிய திராட்சையைப் போன்று ஊனமுற்றிருக்கும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)



நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127 ,3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, ,7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408, 3057



'பெரும் பொய்யனாகிய ஒற்றைக் கண்ணனைப் பற்றி எந்த நபியும் தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் இருந்ததில்லை. நிச்சயமாக தஜ்ஜால் ஒரு கண் ஊனமுற்றவன். உங்கள் இறைவன் ஒரு கண் ஊனமுற்றவன் அல்லன்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: அனஸ் (ரலி),



நூல்: புகாரி 7131,



தஜ்ஜால் என்பவன் இடது கண் ஊனமானவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)



நூல்: புகாரி 3441, 3440, 4403, 5902, 6999, 7026, 7123, 7128, 7407



ஒற்றைக் கண்ணனாக இருப்பவனெல்லாம் தஜ்ஜால் என்று முடிவு செய்து விடக் கூடாது. அவனைப் பற்றி இன்னும் பல அடையாளங்களும் உள்ளன.



ஒரு கண் ஊனமான தஜ்ஜாலின் மற்றொரு அடையாளம் அவனது இரு கண்களுக்கிடையே காஃபிர்' என எழுதப்பட்டிருக்கும். அதை அனைவரும் படிக்கும் வகையில் அந்த எழுத்துக்கள் பளிச்சென்று தெரியும்.



தஜ்ஜாலின் கண்களுக்கிடையே காஃபிர்' என்று எழுதப் பட்டிருக்கும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: அனஸ் (ரலி),



நூல்: புகாரி 7131, 7404



'எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத எல்லா முஃமின்களும் படிக்கும் விதமாக தஜ்ஜாலின் கண்களுக்கிடையே காஃபிர்' என்று எழுதப்பட்டிருக்கும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),



நூல்: முஸ்லிம் 5223



ஊனமுற்ற கண்ணின் மூக்கை ஒட்டிய ஓரத்தில் கடினமான சதைக் கட்டி ஒன்று தென்படும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.



நூல்: முஸ்லிம் 5223



ஒரு கண் ஊனமுற்றிருந்தாலும் ஊனமடையாத மற்றொரு கண் பச்சை நிறக் கண்ணாடிக் கற்கள் போன்று அமைந்திருக்கும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.



நூல்: அஹ்மத் 20220



இந்த வர்ணனையின் அடிப்படையில் அவனது முகம் கோரமாக அமைந்திருக்கும் என்று தெரிந்தாலும் அவனது உடலமைப்பில் கவர்ச்சியாகவும் சில உறுப்புகள் அமைந்திருக்கும்.



அவன் சிவந்த நிறமுடையவனாக இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.



நூல்: புகாரி 3441, 7026, 7128



அவன் அதிக வெண்மை நிறமுடையவனாக இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.



நூல்: அஹ்மத் 2707, 2041



தஜ்ஜாலின் நிறம் குறித்து இரண்டு அறிவிப்புகளும் ஒன்றுக் கொன்று முரண்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் இரண்டுக்கும் முரண்பாடு இல்லை.



ஒருவர் சிவந்த நிறமுடையவராகவும், அதிலும் அதிக சிவப்பு நிறமுடையவராக இருந்தால் அவரைப் பற்றி வெள்ளை நிறத்தவர் என்றும் கூறப்படுவதுண்டு. சிவந்த நிறத்தவர் என்றும் கூறப்படுவதுண்டு.



உதாரணமாக வெள்ளையர்கள் என்று ஆங்கிலேயர்களை நாம் குறிப்பிடுகிறோம். எந்த மனிதனும் வெள்ளை நிறத்தில் இருக்க முடியாது. சிவந்த நிறத்தைத் தான் இவ்வாறு குறிப்பிடுகிறோம். அது போலவே இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.



திடகாத்திரமான உடலமைப்புடன் இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.



நூல்: புகாரி 3441, 7026, 7128



குறிப்பிட்ட ஒரு மனிதனையே தஜ்ஜால் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்; தீய சக்தியை உருவகமாகச் சொல்லவில்லை என்பதை மேற் கண்ட அடையாளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த அடையாளங்கள் யாவும் அவன் வானத்துக்கும், பூமிக்குமாக பிரம்மாண்டமாகத் தென்படுவான் என்ற கற்பனையையும் நிராகரிக்கின்றன.



தஜ்ஜால் இனிமேல் தான் பிறப்பானா?



தஜ்ஜால் இனி மேல் பிறந்து வரப் போகிறானா? அல்லது முன்பே பிறந்து பிற்காலத்தில் வெளியே வருவானா?



இதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.



தமீமுத்தாரி (ரலி) அவர்கள் கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர். தஜ்ஜாலைச் சந்தித்த விபரத்தை அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்த போது அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.



எனவே அவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே இந்த உலகில் இருந்து வருகிறான் என்பதை நாம் நம்பியாக வேண்டும். அந்த நிகழ்ச்சியில் தஜ்ஜால் பற்றி அதிக விபரங்கள் கிடைப்பதால் அந்த ஹதீஸை முழுமையாகப் பார்ப்போம்.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்பாளர் 'அஸ்ஸலாத்து ஜாமிஆ'' (தொழுகை நடத்தும் நேரம் வந்து விட்டது) என்று அறிவிப்பதைச் செவியுற்று நான் பள்ளிவாசல் சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டு மிம்பரில் அமர்ந்தார் கள். 'ஒவ்வொருவரும் தொழுத இடத்திலேயே இருங்கள்'' என்று கூறிவிட்டு 'நான் உங்களை ஏன் கூட்டினேன் என்பதை அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று நாங்கள் கூறினோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு அச்சமூட்டவோ, ஆர்வமூட்டவோ உங்களை நான் கூட்டவில்லை. தமீமுத்தாரி கிறிஸ்தவராக இருந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தஜ்ஜால் பற்றி நான் உங்களுக்குக் கூறி வந்ததற்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். அவர் கூறியதாவது:



லக்ம், ஜுகாம் ஆகிய கோத்திரத்தைச் சேர்ந்த முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன். ஒரு மாதம் அலைகளால் நாங்கள் அலைக்கழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் நேரத்தில் ஒரு தீபகற்பத்தில் ஒதுங்கினோம். சிறு கப்பல் ஏறி தீபகற்பத்தில் நுழைந்தோம். அப்போது அதிகமான மயிர்களைக் கொண்ட பிராணி ஒன்று எங்களை எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள் இருந்ததால் அப்பிராணியின் மலப்பாதை எது? சிறு நீர்ப்பாதை எது என எங்களால் அறிய முடியவில்லை.



அப்பிராணியிடம் 'உனக்குக் கேடு உண்டாகட்டும்! நீ என்ன பிராணி?'' என்று கேட்டோம். 'நான் ஜஸ்ஸாஸா'' என்று அப்பிராணி கூறியது. 'நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்! அவர் உங்களைப் பற்றி அறிவதில் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார்'' எனவும் அப்பிராணி கூறியது. அது ஒரு மனிதனைப் பற்றிக் கூறியதும் 'அப்பிராணி ஒரு ஷைத்தானாக இருக்குமோ'' என்று அஞ்சினோம்.



நாங்கள் விரைந்து சென்று அந்த மடாலயத்தை அடைந்தோம். அங்கே பருமனான ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒரு போதும் கண்டதில்லை. இரண்டு கரண்டைக் கால்களுக்கும் முட்டுக்கால்களுக்குமிடையே இரும்பினால் கழுத்துடன் தலை சேர்த்து அவன் கட்டப்பட்டிருந்தான். 'உனக்குக் கேடு உண்டாகட்டும். ஏனிந்த நிலை?'' என்று நாங்கள் கேட்டோம்.



அதற்கு அம்மனிதன், 'என்னைப் பற்றி அறிய சக்தி பெற்று விட்டீர்கள். எனவே நீங்கள் யார்? என எனக்குக் கூறுங்கள் என்றான்.''



'நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் பயணம் செய்த போது ஒரு மாதம் கடல் எங்களை அலைக்கழித்து இந்தத் தீபகற்பத்தில் நுழைந்தோம். அடர்ந்த மயிர்களைக் கொண்ட ஒரு பிராணியைக் கண்டோம். அப்பிராணி நான் ஜஸ்ஸாஸா' ஆவேன். இந்த மடாலயத் தில் உள்ள மனிதரைச் சந்தியுங்கள் என்று கூறியது. எனவே உம்மிடம் விரைந்து வந்தோம். அதனால் திடுக்குற்றோம். அது ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம்.'' எனக் கூறினோம்.



'பைஸான் எனுமிடத்தில் உள்ள பேரீச்சை மரங்கள் பலன் தருகின்றனவா?'' என எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். அதற்கு அம்மனிதன் 'விரை வில் அங்குள்ள மரங்கள் பலனளிக்காமல் போகலாம்'' என்றான்.



'தபரிய்யா எனும் ஏரியைப் பற்றி எனக்குக் கூறுங்கள்! அதில் தண்ணீர் உள்ளதா?'' என்று அவன் கேட்டான். 'அதில் அதிகமான தண்ணீர் உள்ளது'' என்று நாங்கள் கூறினோம். 'அந்தத் தண்ணீர் விரைவில் வற்றி விடக் கூடும்'' என்று அவன் கூறினான்.



'ஸுகர் என்னும் நீரூற்றில் தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரால் விவசாயம் செய்கிறார்களா?'' என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் 'ஆம்! தண்ணீர் அதிகமாகவே உள்ளது; அங்குள் ளோர் அத்தண்ணீரால் விவசாயம் செய்து வருகின்றனர்'' என்றோம்.



'உம்மி சமுதாயத்தில் தோன்றக் கூடிய நபியின் நிலை என்ன? என்பதை எனக்குக் கூறுங்கள்'' என்று அம்மனிதன் கேட்டான். அவர் 'மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவில் தங்கியிருக்கிறார்'' என்று கூறினோம்.



'அவருடன் அரபுகள் போர் செய்தார்களா?'' என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம்' என்றோம். 'போரின் முடிவு எவ்வாறு இருந்தது?'' என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் 'அவர் தன்னை அடுத்துள்ள அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார்'' எனக் கூறினோம். 'அவருக்கு வழிப்படுவதே அவர்களுக்கு நல்லதாகும்'' என்று அவன் கூறினான்.



நான் இப்போது என்னைப் பற்றிக் கூறப் போகிறேன். 'நான் தான் தஜ்ஜால் ஆவேன். (இங்கிருந்து) வெளியேற வெகு விரைவில் எனக்கு அனுமதி வழங்கப்படலாம். அப்போது நான் வெளியே வருவேன். பூமி முழுவதும் பயணம் செய்வேன். (நான் பயணிக்கக் கூடிய) நாற்பது நாட்களில் எந்த ஊரையும் அடையாமல் இருக்க மாட்டேன். ஆயினும், மக்கா, மதீனா ஆகிய இரு ஊர்களைத் தவிர. அவ்விரு ஊர்களும் எனக்கு விலக்கப்பட்டுள்ளன. அவ்விரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயலும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு மலக்கு என்னை எதிர் கொண்டு தடுத்து நிறுத்துவார். அவற்றின் ஒவ்வொரு வழியிலும் அதைக் காக்கும் வானவர்கள் இருப்பர்'' என்று அம்மனிதன் கூறினான்.



இதை தமீமுத்தாரி (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். மேலும் தமது கைத்தடியால் மிம்பர் மீது தட்டி, 'இது (மதீனா) தைபா (தூய நகரம்) இது தைபா; இது தைபா'' எனக் கூறினார்கள். 'இதே விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா?'' என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் 'ஆம்'' என்றனர்.



அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், அல்லது எமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், இல்லை; இல்லை; அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள்.



இந்த நிகழ்ச்சியை ஃபாத்திமா பின்த் கைஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.



நூல்: முஸ்லிம் 5235.



தஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு முன்பி ருந்தே ஏதோ ஓரிடத்தில் இருந்து வருகிறான் என்பதையும் அவனைப் பற்றிய ஓரளவு விபரங்களையும் இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.



இஸ்லாத்தை எதிர்ப்பான்.



முஸ்லிம் சமுதாயத்தை வழி கெடுப்பவர்கள் பல வகையினராக இருப்பார்கள். தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டே வழி கெடுப்பவர்களும் தோன்றுவார்கள். இஸ்லாத்தை விட்டு வெளி யேறுமாறு கூறி வழிகெடுப்பவர்களும் தோன்றுவார்கள். தஜ்ஜால் என்பவன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவனாக இருப்பான்.



அவன் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்க மாட்டான். இஸ்லாத்தின் பால் அழைப்பதாகவும் கூற மாட்டான்.



இஸ்பஹான் பகுதியைச் சேர்ந்த யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),



நூல்: முஸ்லிம் 5237.



'தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே காபிர்' என்று எழுதப்பட்டிருக்கும், எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து முஃமின்களும் அதைப் படிப்பார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),



நூல்: முஸ்லிம் 5223



அவன் இஸ்லாமிய வட்டத்தில் உள்ளதாக தன்னைக் கூறிக் கொள்ள மாட்டான் என்பதற்கு அவன் செய்யும் வாதமும் சான்றாக உள்ளது.



அவன் தன்னைக் கடவுள் என வாதிடுவான்.



'தஜ்ஜால் என்பவன் ஒரு கண் ஊனமுற்றவன். உங்களது இறைவன் ஒரு கண் ஊனமுற்றவனல்லவன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.



நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127, 7131, 7407, 7408



தஜ்ஜாலின் அற்புதங்கள்.



இஸ்லாத்தின் பெயரைக் கூறாமல் எவ்வாறு முஸ்லிம்களை வழிகெடுக்க இயலும்? என்ற ஐயம் தோன்றலாம்.



தன்னைக் கடவுள் என்று சாதிக்கும் வகையில் அவன் பிரமிப்பூட்டும் அற்புதங்களைச் செய்வான்.



ஒன்றிரண்டு தந்திர வேலைகளைச் செய்வோரின் வலையில் அப்பாவி முஸ்லிம்கள் அநேகர் விழுந்து ஈமானை இழந்து வருவதை இன்றைக்கும் நாம் காண்கிறோம். அவர்களையெல்லாம் விட மிகப் பெரும் அற்புதங்களை நிகழ்த்தும் தஜ்ஜாலின் வலையில் முஸ்லிம்கள் விழுவது ஆச்சரியத்திற்குரியது அல்ல. அவன் நிகழ்த்தும் அற்புதங்கள் எத்தகையதாக இருக்கும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.



'மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். அது மழை பொழியும், முளைப்பிக்குமாறு பூமிக்குக் கட்டளையிடுவான். அது (பயிர்களை) முளைப்பிக்கும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),



நூல்: முஸ்லிம் 5228



'பின்னர் மக்களிடம் வந்து (தன்னைக் கடவுள் என்று ஏற்குமாறு) அழைப்பு விடுவான். அவனை ஏற்க மக்கள் மறுப்பார் கள். அவர்களை விட்டு அவன் விலகி விடுவான். காலையில் அம்மக்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் இழந்து விடுவார்கள்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),



நூல்: முஸ்லிம் 5228.



பாழடைந்த இடத்துக்குச் சென்று 'உன்னுடைய புதையல்களை வெளிப்படுத்து'' என்று கூறுவான். அதன் புதையல்கள் தேனீக்களைப் போன்று அவனைப் பின் தொடரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.



நூல் : முஸ்லிம் 5228



'திடகாத்திரமான ஒரு இளைஞனை அவன் அழைத்து வாளால் இரண்டு துண்டுகளாக வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான். உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டு பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி), நூற்கள்: முஸ்லிம் 5228



ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜால் பற்றி நீண்ட விளக்கம் தந்தார்கள். மதீனாவின் நுழைவாயிலுக்கு வருவது அவனுக்கு விலக்கப்பட்டுள்ளது. எனவே மதீனாவிற்கு வெளியில் உள்ள உவர் நிலத்திற்கு வருவான். ஒரு நாள் சிறந்த மனிதர் ஒருவர் அவனிடம் செல்வார். 'அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எச்சரிக்கை செய்த தஜ்ஜால் நீ தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்று அவர் கூறுவார். 'இவரைக் கொன்று விட்டு பின்னர் நான் உயிர்ப்பித்தால் (நான் கடவுள் என்ற) இவ்விஷயத்தில் சந்தேகம் கொள்வீர்களா?'' என்று அவன் கேட்பான். அவர்கள் மாட்டோம் என்பார்கள். உடனே அவரை அவன் கொல்வான். பின்னர் உயிர்ப்பிப்பான். உயிர்ப்பிக்கப்பட்டதும் அந்த நல்ல மனிதர் 'முன்பிருந்ததை விட இன்னும் தெளிவாக நான் இருக்கிறேன்'' என்று கூறுவார். உடனே தஜ்ஜால் அவரைக் கொல்ல நினைப்பான். அவனால் அது இயலாது என்று நபி(ஸல்) கூறினார்கள்.



நூல்: புகாரி 7132, 1882



இறந்தவர்களை அவன் உயிர்ப்பிப்பது ஒரே ஒரு தடவை தான் நிகழும். இதனால் தான் இரண்டாம் முறை அந்த நல்ல மனிதரை அவனால் கொல்ல இயலவில்லை.



இறந்தவர்களை உயிர்ப்பிப்பது என்பது ஒரே தடவை மட்டுமே அவனால் செய்ய இயலும்; தொடர்ந்து செய்ய இயலாது.



ஒரு மனிதனைக் கொன்று அவனை உயிர்ப்பிப்பான். மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அன்ஸாரித் தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.



நூல்: அஹ்மத் 22573



தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும் நீக்குவான். இறந்தவர்களையும் உயிர்ப்பிப்பான். மக்களிடம் 'நானே உங்கள் இறைவன்'' என்பான். 'யாரேனும் நீ தான் என் இறைவன்'' என்று கூறினால் அவன் சோதனையில் தோற்று விட்டான். 'அல்லாஹ் தான் என் இறைவன்'' என்று யார் கூறி அதிலேயே மரணித்து விடுகிறாரோ அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டு விட்டார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி),



நூல்: அஹ்மத் 19292



அவனைப் பின்பற்றியவர்கள் தவிர ஏனைய மக்கள் மிகவும் வறுமையில் இருக்கும் போது அவனிடம் மலை போல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான். இன்னொன்றை நரகம் என்பான். அவன் சொர்க்கம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் நரகமாகும். அவன் நரகம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் சொர்க்கமாகும். மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். மக்கள் பார்க்கும் வகையில் மழை பெய்யும். 'இதைக் கடவுளைத் தவிர வேறு யாரும் செய்ய முடியுமா? என்று கேட்பான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),



நூல்: அஹ்மத் 14426



தஜ்ஜாலிடம் தண்ணீரும், நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர் என்று காண்கிறார்களோ அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதனை நெருப்பு என்று காண்கிறார்களோ அது சுவை மிக்க குளிர்ந்த நீராகும். உங்களில் யாரேனும் இந்த நிலையை அடைந்தால் நெருப்பு என்று காண்பதில் விழட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),



நூல்: புகாரி 7130



தஜ்ஜால் வாழும் நாட்கள் எத்தனை?



இவ்வளவு அற்புத சக்தியுடன் வெளிப்படும் தஜ்ஜால் நீண்ட நாட்கள் ஆட்டம் போட முடியாது. வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே அவன் இவ்வுலகில் இருப்பான்.



'தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.



அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),



நூல்: முஸ்லிம் 5228



தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள்.



இந்த நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் அவன் சுற்றி வருவான். ஆயினும் சில இடங்களை அவனால் அடைய முடியாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.



மதீனா' நகருக்கு தஜ்ஜால் பற்றிய அச்சம் இல்லை. அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),



நூல்: புகாரி 7125



'தஜ்ஜால் கீழ்த்திசையிலிருந்து மதீனாவைக் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ஷாம்' பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கே தான் அவன் அழிவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),



நூல்: முஸ்லிம் 2450



'இஸ்பஹான் நாட்டு யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) கெட்ட மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். ஷாம் நாட்டில் உள்ள பாலஸ்தீன் நகரின் லுத்' எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா (அலை) இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன் பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா (அலை) இப்பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிமானாக வாழ்வார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),



நூல்: அஹ்மத் 23327



மதீனாவுக்கு மட்டுமின்றி மற்றும் மூன்று இடங்களுக்கும் அவனால் செல்ல முடியாது.



'அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களையும் அவன் அடைவான். மஸ்ஜிதுல் ஹராம், மதீனா வின் மஸ்ஜித், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிகளை அவன் நெருங்க முடியாது'' என்பது நபிமொழி.



நூல்: அஹ்மத் 22571



தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்புப் பெறும் வழி.



தஜ்ஜாலின் காலத்தை அடைபவர்கள் அவனிடமிருந்து எவ்வாறு பாதுகாப்புப் பெறுவது என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு இரண்டு வழிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.



தொழுகையில் அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கு விஷயங் களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள். அதில் ஒன்று 'தஜ்ஜாலின் சோதனையை விட்டும் இறைவா உன்னிடம் பாதுகாப்புக் கேட்கிறேன்'' என்பதாகும்.



நூல்: புகாரி 833, 1377, 6368, 6375, 6376, 6377



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கற்றுத் தந்துள்ளதால், ஜங்காலமும் தொழுது இந்தப் பிரார்த்தனையைச் செய்து வருபவர்கள் அவனது மாய ஜாலத்தில் மயங்க மாட்டார்கள்; ஈமானை இழக்க மாட்டார்கள்.



தஜ்ஜாலின் வருகைக்கு முன் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை இது. தஜ்ஜாலை நமது காலத்தில் நாம் அடைந்தால் அவனது அற்புதத்தில் மயங்கி ஈமானை இழக்காமலிருக்க கஹ்ப்' அத்தியாத்தின் ஆரம்பப் பகுதியை நாம் ஓதி வர வேண்டும்.



'உங்களில் யாரேனும் அவனை அடைந்தால் கஹ்பு அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதியை ஓதுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),



நூல்: முஸ்லிம் 5228



தஜ்ஜால் வெளிப்படும் இடம்.



தஜ்ஜால் சிரியாவுக்கும், இராக்குக்கும் இடையே வெளிப்பட்டு வலப்புறமும், இடப்புறமும் விரைந்து செல்வான். 'அல்லாஹ்வின் அடியார் களே! உறுதியாக நில்லுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.



நூல் : முஸ்லிம் 5228



மேற்கில் உள்ள குராஸான் என்ற பகுதியிலிருந்து தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.



நூல் : திர்மிதீ 2163.

காட்டிக் கொடுத்த ஹஸனுல் பன்னா - அபூ ஸைத் அல் அதரி

அன்பர்கள் கவனத்திற்கு:
இக்கட்டுரை இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தைச் சார்ந்தவர்களது வரலாற்றுக் குறிப்புகள்சுய சரிதைகள்அரச ஆவனங்கள்பத்திரிகைச் செய்திகள்என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு எகிப்து நாட்டின் அரசியல் எழுத்தாளர் மாஹிர் தகிஎன்பவரால் எழுதப்பட்ட ஆக்கத்தை தழுவியதாகவே அமைக்கப் பட்டுள்ளது. இதில் இடம் பெறும் வரலாற்று உன்மைகள்நிகழ்வுகள் தொடர்பில் மறுப்புகள்மாற்றுக் கருத்துகள் இருப்பின் ஆக்கபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் எமக்கு தெரியப்படுத்துமாறு வினயமாய் வேண்டிக் கொள்கிறோம்.
இஹ்வான்களும் இல்லை! முஸ்லிம்களும் இல்லை”!! என்ற வசனம் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தில் ஒரு பிரபல்யமான வார்த்தையாகும். இக்கூற்று யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை வரலாற்று ரீதியாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தி எட்டாம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்தி மூன்றாம் திகதி (1928/03/23) எகிப்து நாட்டின் இஸ்மாஈலிய்யா நகரில் ஆங்கிலேய ரானுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆறு நபர்கள் ஆரம்பப் பாடசாலையில் அறபு மொழி ஆசிரியராகக் கடமை புரிந்து கொண்டிருந்த ஹஸனுல் பன்னா அவர்களுடன் இணைந்து ஏழுபேருமாக தாங்கள் இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் அமைப்பைத் தொடங்கியுள்ளதாகவும் அதற்கு ஹஸனுல் பன்னா அவர்கள் “முர்ஷித்” வழிகாட்டும் தலைவராக இருப்பார் என்றும் பிரகடனம் செய்தார்கள். அப்போது ஹஸனுல் பன்னா அவர்களது வயது இருபத்தி இரண்டாக இருந்தது.
இவ்வாறு ஆரம்பிக்கப் பட்ட இயக்கத்தை ஹஸனுல் பன்னா அவர்கள் மூண்று உட்கட்டமைப்பாக நிறுவியிருந்தார்;அவைகளாவன:
1.ஆரம்பக் கட்டமைப்பு: இப்படித்தரத்தில் உள்ளவர்கள் இயக்கத்தின் போதனைகளை செவிமடுப்பார்கள். அவைகளுக்குக் கட்டுப் பட்டு நடந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
2.போராடும் கட்டமைப்பு: இத்தரத்தில் உள்ளவர்கள் இயக்கத்தின் போதனைகளை, வழிகாட்டுதல்களை செயற்படுத்தும் பணியை செய்பவர்கள். (இயக்க) தலைமைத்துவத்துக்குக் கட்டுப் பட்டு நடப்பது இவர்களுக்குக் கட்டாயமாகும்.
3.அரசியல் கட்டமைப்பு: இச்சாரார் முஸ்லிம்களின் விவகாரங்களைப் பொறுப்பேற்று அவர்களை இஸ்லாமிய சட்டத்தின் படி நிர்வகிக்கக் கூடியவர்கள்.இதன் இறுதி வடிவம்இஸ்லாமிய ஆட்சியை அமைபதாகும்.
இவ்வாறான உட்கட்டமைப்பைக் கொண்ட இயக்கம் கடும் உழைப்பினாலும் இஸ்லாத்தின் பெயரை இவர்கள் பயன்படுத்தியதனாலும் மிக வேகமாக இரண்டு வருட காலத்திற்குள் இஸ்மாஈலிய்யா நகரத்தில் இருந்து அதனை அண்டிய நகரங்களுக்கும் பரவி நான்கு வருடத்தில் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் காரியாலயம் அமைத்து இயக்கத்தின் பேரில் வார சஞ்சிகை ஒன்றை வெளியிடும் அளவிற்கு வளர்ச்சி அடைந்தது.அத்துடன் சிரியா, லெபனான், சூடான், பலஸ்தீன் ஆகிய வெளி நாடுகளிலும் கிளைகள் ஆரம்பிக்கப் பட்டன.
முதல் கட்டமைப்பை உருவாக்குவதில்  சுமார் பத்துவருட காலம் செலவிட்ட ஹஸனுல் பன்னா அவர்கள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதியெட்டாம் ஆண்டில் முத‌ல் கட்டத்தில் இருந்து இரண்டாம் கட்டமான “போராட்டக் குழுவை” உருவாக்கினார்.தனது இயக்கத்தின் ஒரு பிரிவினரை சாதாரன சிவில் பிரச்சாரப் பணியில் இருந்து ரானுவ செயற்பாட்டுக்கு பயிற்றுவித்தார்.ஆரம்பத்தில் சில பயனக் குழுக்களை அமைத்து பின்பு அவைகளுக்கென சீருடைகள் வழங்கி பின்னர் சிறு சிறு தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படக்கூடிய ஒருமைபடுத்தப் பட்ட குழுக்களை உருவாக்கினார். பின்பு அவைகளை இணைத்து“அல்ஜிஹாஸ் அஸ்ஸிர்ரி” அல்லது “அத்தன்ழீம் அஸ்ஸிர்ரி” என அழைக்கப்பட்ட ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கினார்.
இவ்வாயுதக் குழுவில் ஒருவரை இணைத்துக் கொள்ள மிகக் கஷ்டமான நிபந்தனைகளும் மிக நுட்பமான தகுதி காண் விதிமுறைகளும் பிரயோகிக்கப் பட்டன. தங்களது பாதுகாப்பிற்காகவும் ரகசியத்தன்மைக்காகவும் ஒவ்வொரு தலைவருக்கும் கீழ் ஒன்றுக் கொன்று தொடர்பில்லாத உப குழுக்களை உருவாக்குதல் என்ற ரானுவக் கட்டமைபில் பல குழுக்களாக மேற்படி ஆயுதக் குழு உருவாக்கப்பட்டது.
இவ்வாறு உருவாக்கப் பட்ட ஆயுதக் குழுவிற்கு அஹ்மத் ஸகி, மஹ்மூத் ஸப்பாஃ, அஹ்மத் ஹஸன், பிரபல்ய எழுத்தாளர் முஸ்தபா மஷ்ஹூர் ஆகியோரின் ஒத்தாசையுடன் செயற்படுமாறு அப்துர் ரஹ்மான் அஸ்ஸிந்தி என்பவரை ஹஸனுல் பன்னா அவர்கள் தலைவராக தெரிவு செய்து (மஹ்மூத் ஸப்பாஃ என்பவர் கூற்றுப் படி)தங்களுக்குத் தேவையான கட்டளைகளை தன்னிடம் (ஹஸனுல் பன்னா) இருந்தே நேரடியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பணித்திருந்தார்கள். இதற்கேற்ப இவ்வாயுதக் குழு ஆங்கிலேய படையினர் கூடும் இடங்களில் கைக் குண்டுகளை வீசியதுடன் ஆங்கிலேயப் படையினர் பயனம் செய்வதற்கான விஷேட புகையிரதத்தில் குண்டு ஒன்றையும் வெடிக்கச் செய்தனர்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்தாம் ஆண்டு (1945)”தேசிய கட்சி”யைச் சேர்ந்த மஹ்மூத் அல் ஈஸவி என்பவர் எகிப்தின் அப்போதைய பிரதமர் அஹ்மத் பாட்ஷா மாஹிர் அவர்களை படு கொலை செய்தார். எனினும் மேற்படி கொலையாளி இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் முக்கிய உறுப்பினர்தான் என்பதை இயக்கத்தின் பிரமுகர்களான ஹஸன் அல்பாகூரி மற்றும் செய்யித் ஸாபிக் (பிக்ஹுஸ் ஸுன்னா எனும் பிரபல்ய நூலின் ஆசிரியர்) ஆகியோர் தங்களது நாட்குறிப்புகளில் ஏற்றுக் கொண்டனர்!!.
இதே ஆண்டில்தான் “அல்முஸவ்விர்” சஞ்சிகையால் நடாத்தப் பட்ட “பொதுச் சேவையாளர்”பட்டத்திற்கான கருத்துக் கணிப்பில் ஹஸனுல் பன்னா அவர்கள் பட்டத்திற்குரியவராக தெரிவு செய்யப் பட்டார்கள்.
மேலும் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஆறாம் ஆண்டு(1946) செய்து கொள்ளப்பட்ட“சித்கி பீபைன்” ஒப்பந்தந்துக்கு எதிராக எகிப்தில் ஆங்காங்கே அரசுக்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன.  இவ்வார்ப்பாட்டங்களில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினரின் ஆயுதக் குழு மும்முரமாக ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் பெரும் முயற்சி செய்தனர். பொதுமக்களுக்கும் போலீஸுக்கும் இடம் பெற்ற மோதல்களில் குறித்த ஆயுதக் குழுவினர் சில போலீஸ் நிலையங்களை குண்டு வைத்துத் தகர்த்தனர்.இதனால் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினருக்கு மக்கள் மத்தியில் பிரபல்யமும் செல்வாக்கும் அதிகரித்து மக்கள் சாரிசாரியாக அமைப்பில் இணைய ஆரம்பித்தனர்.
இவ்வாண்டில்தான் காலித் முஹியித்தீன், கமால் ஹுஸைன், ஹஸனுல் பன்னாவின் இளைய சகோதரர் ஜமால் அல் பன்னா, பிற்காலத்தில் எகிப்திய கொடுங்கோல் ரானுவ ஆட்சியாளராக வந்து இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பினரையே துவசம் செய்த ஜமால் அப்துன் நாஸர் ஆகியோர் அல் குர் ஆன் பிரதி மீதும் கைத்துப்பாக்கி மீதும் சத்தியப் பிரமானம் செய்து “ஆயுதக் குழுவில்” இணைந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஏழாம் ஆண்டு நவம்பர் மாதம் (1947/11) முஸ்லிம்களின் புணித பூமி பலஸ்தீன் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமாக பிரிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளிவந்தது. இதை யொட்டி இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் தங்கள் பத்திரிகையில் யூதர்களுக்கு எதிரான அறபுப் படையணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி யுத்தத்திற்கான ஆயுதங்களையும் பொருளாதாரத்தையும் சேகரிக்க ஒரு குழுவை அமைக்கிறார். இதன் காரனமாக அறபு உலகில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினருக்கும் ஹஸனுல் பன்னா அவர்களுக்கும் மிகுந்த செல்வாக்கு ஏற்படுகிறது.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தியெட்டாம் ஆண்டு பெப்ரவரி மாதம் (1948/02)இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் குறுக்கு வழியில் கிலாப்த்தை உருவாக்கயெமனின் அப்போதைய ஆட்சியாளர் யஹ்யா ஹமீதுத் தீன் அவர்கள் எதிர்க் கட்சி யைச் சேர்ந்த அப்துல்லாஹ் அல் வஸீரி அவர்களால் படுகொலை செய்யப்பட்டதும் அவரது பேரர் அல் பத்ர் ஹமீதை ஆட்சிக்குக் கொண்டுவர பெரிதும் முயற்சித்தனர். எனினும் குறித்த குறுக்கு வழி கிலாபத் வெறும் இருபத்தி ஆறு நாட்களே நீடித்தது.இவ்வாறு இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் பிற நாட்டில் மேற்கொண்ட புரட்சியினால் எகிப்திய அரசாங்கத்துக்கும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினருக்கும் இடையே பெரும் விரிசலை தோற்றுவித்து ஒரு பதட்ட நிலையை உருவக்கியது.
இதே வருடம் மார்ச் மாதம் இருபத்தியிரண்டாம் (1948/03/22) திகதி  இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய சிவில் நீதிபதி அஹ்மத் பேக் என்பவர் வீதியைக் கடந்து செல்லும் போது ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஹுஸைன் அப்துல் ஹாபிழ்,மஹ்மூத் ஸைனுஹும் என்ற இருவரால் படு கொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலை தொடர்பாக விசாரிக்க கலாநிதி அப்துல் அஸீஸ் தலமையில் இஹ்வான்கள் ஒரு குழுவை அமைத்து ஆயுதக் குழுத் தலைவர் அப்துர் ரஹ்மான் ஸிந்தியை விசாரித்த போதுஹஸனுல் பன்னாவின் சிலேடையான வார்த்தையை புரிந்து கொண்டதில் ஏற்பட்ட தவறுதான் நீதிபதியின் கொலைக்குக் காரனம் என்பது தெரிய வந்தது. எனினும் கொலைக் குற்றத்திற்கான தண்டப் பனத்தை இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர்தான் செலுத்த வேண்டும் என விசாரனைக் குழு முடிவெடுத்தது. பின்னர் அரசாங்கமே அதை கொடுக்க வேண்டும் என பேசித்தீர்க்கப் பட்டது!!
அத்துடன் ஹஸனுல் பன்னாவின் நேரடியான உத்தரவின் மூலமாக அல்லது ஏற்கனவே நாம் விபரித்த ஆலோசனைக் குழுவின் உத்தரவின் பேரில்தான் ஆயுதக் குழு செயற்பட வேண்டும் என உறுதியான தீர்மானம் இவ்விசாரனையில் நிறைவேற்றப் பட்டது.
ஆனால் வழமையாக இடம் பெறும் இயக்கத்தின் செவ்வாய் தின உரையில் ஹஸனுல் பன்னா அவர்கள் “மேற்படி நீதிபதியின் படு கொலைக்கும் இஹ்வானுல் முஸ்லிமீனுக்கும் சம்பந்தம் இல்லை” என மறுத்துரைத்தார். எனினும் சுமார் ஐந்து மாததத்தின் பின் குற்றவாளிகளை அரசாங்கம் அடையாளம் கண்டு குற்றம் உறுதிப்படுத்தப் பட்டு இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் உன்மை முகம் சகலருக்கும் அடையாளம் காட்டப் பட்டது.!!
இதே வருடம் நவம்பர் மாதம் பதினைந்தாம் திகதி (1948/11/15)எகிப்து போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் ரக வாகனம் ஒன்றை எதேச்சையாக சோதனை செய்த போதுஇஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் ஆயுதக் குழு தொடர்பான முக்கிய ஆவனங்களும் கைக் குண்டுகள்வெடி பொருட்கள் ஆகியவையும் கைப்பற்றப் பட்டன.
மேற்படி ஆவனங்களில் ஏற்கனவே நடந்த குண்டு வெடிப்புகள் பற்றிய திட்டங்களும் எதிர்காலத்தில் செயற்படுத்தப் படவிருந்த அமெரிக்க, பிரித்தானிய தூதரகங்களை குண்டு வைத்து தகர்ப்பதற்கான ரகசிய திட்டங்களும் காணப்பட்டன. இது தொடர்பாக நடாத்தப்பட்ட புலன் விசாரனையில் அஹ்மத் ஆதில் ,மற்றும் இன்னுமொருவர், இஹ்வானுல் முஸ்லிமீன் ஸ்தாபக உறுப்பினரும் ஆயுதக் குழுவின் ஆலோசகருமான முஸ்தபா மஷ்ஹூர் ஆகிய இயக்கத்தின் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதே வருடம் டிசம்பர் மாதம் நான்காம் திகதி (1948/12/04)இப்போதைய கெய்ரோ பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை கட்டுப் படுத்த கெய்ரோ நகர போலீஸ் பொறுப்பதிகாரி ஸலீம் ஸகிநேரடியாக களத்தில் இறங்கியிருந்தார்.எனினும் ஆர்ப்பாட்டத்தின் போது இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த மானவன் ஒருவன் நாலாவது மாடியில் இருந்து வீசிய கைக்குண்டில் அவர் கொல்லப்பட்டார். இதை ஆயுதக் குழுவின் பொறுப்பாளர்களில் ஒருவரான மஹ்மூத் ஸப்பாஃ என்பவர் பின்னொரு காலத்தில் “அக்காலத்தில் ஆர்ப்பாட்டங்களின் போது குண்டு வீசுவது ஒரு சாதாரன செயலே” என நியாயப்படுத்தியும் இருந்தார்.
இதனையொட்டி இஹ்வான்களுக்கும் எகிப்திய அரசாங்கத்துக்குமிடையே பெரும் பதட்ட நிலை தோன்றியது. நில மையைத்தனித்து அரசாங்கத்துக்கும் இஹ்வான்களுக்குமிடையே ஒரு சுமூக நிலையைத் தோற்றுவிக்க ஹஸனுல் பன்னா அவர்கள் சபாநாயகர் ஹாமித் ஜௌதாஃ மூலமாக பிரதமர் மஹ்மீத் நக்றாஷி பாட்ஷா அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தார். ஆனால் சபாநாயகர் அதை மறுத்து விடவே மன்னர் பாரூக்குடன் அல்லது ஜனாதிபதி செயலகத்தலைவர் இப்றாஹீம் அப்துல் ஹாதியுடன் தொடர்பு கொள்ள எத்தனித்தார் .ஆனால் அதுவும் கைகூடவில்லை.
இதை தொடர்ந்து மேற்படி சம்பவம் இடம் பெற்று இரண்டு நாட்களுக்குப் பின் டிசம்பர் ஆறாம் திகதி இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் உத்தியோக பூர்வ பத்திரிகை அரசங்கத்தால் தடை செய்யப்பட்டது. இதே தினத்தில் அரச சார்பு பத்திரிகை “அல் அஸாஸ்” மிக விரைவில் மகிழ்சிகரமான செய்தியொன்று வெளியிடப்படும் என்ற தகவலை வெளியிட்டது.இதனால் இஹ்வான்கள் மத்தியில் பெரும் பதட்டம் நிலவியது. என்ன விலை கொடுத்தாவ்து இயக்கத்தைக் காப்பாற்ற ஹஸனுல் பன்னா அவர்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்தார். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை.
டிசம்பர் எட்டாம் திகதி இரவு பத்து மணிக்கு உள்ளக அமைச்சின் பொறுப்பாளர் அப்துர் ரஹ்மான் அம்மார் என்பவர் ஹஸனுல் பன்னாவைத் தொடர்பு கொண்டு சற்று நேரத்தில் மகிழ்ச்சிகரமான !!முக்கிய செய்தியொன்று வானொலியில் ஒலிபரப்பப் படும் எனத் தெரிவித்தார்.
கெய்ரோவின் தலைமைக் காரியாலயத்தில் இயக்கத்தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்சிகரமான!! முக்கிய செய்தியை எதிர்பார்த்து வானொலியைச் சூழ அமர்ந்திருந்த போது ரானுவ தலைமை அதிகாரியினால் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தியெட்டாம் ஆண்டுக்கான அறுபத்தி மூண்றாம் சட்டமாக “இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அனைத்துக் கிளைகளும் கலைக்கப்பட்டதாகவும் அதன் பொருளாதாரம் மற்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்ற சட்டம் பிரகடனப் படுத்தப்பட்டது.
இச்சட்டத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இஹ்வான்கள் காரியாலயத்தில் இருந்து வேளியேற எத்தனித்த போது அரச படையினர் சூழ்ந்து கொண்டு ஹஸனுல் பன்னா அவர்களைத்தவிர அனைவரையும் கைது செய்தனர்.இவ்வாறு அரசாங்கம் வைத்த பொறியில் இஹ்வானுல் முஸ்லிமீன்கள் மாட்டிக் கொண்டனர்.
தன்னை மாத்திரம் கைது செய்யாமல் விட்டு விட்டதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதை உணர்ந்த ஹஸனுல் பன்னா இயக்கத்தின் முதல் தர பொறுப்பாளர் என்ற வகையில் தன்னையும் கைது செய்யும் படி அரசாங்கத்திடம் எவ்வளவோ மண்றாடியும் அரசாங்கம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இவ்வாறு இயக்கம் கலைக்கப்பட்டதற்கு முழுப் பொறுப்பாளி பிரதமர் நக்றாஷி பாட்ஷாதான் எனக் கருதிய இஹ்வான்கள் அவரை எப்படியாவது கொண்றொழித்து விட வேண்டும் என கங்கணம் கட்டினர்.இதை பின்பு இது தொடர்பான வழக்கில் வாதி தரப்பில் ஆஜரான அப்துல்லாஹ் றஷ்வான் ,ஹஸனுல் பன்னாவின் இளைய சகோதரர் ஜமால் பன்னா ஆகியோரின் கூற்றுகள் உறுதி செய்கின்றன.
ஆனாலும் ஆளும் கட்சித்தலைவர், தேசிய ரானுவ பொறுப்பாளர், பிரதமர், உள்ளக மற்றும் நிதி அமைச்சர் ஆகிய பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த மஹ்மூத் நக்றாஷி அவர்கள் இவ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் கலைக்கப் பட்டதனால் இஹ்வான்கள் தன்னை படு கொலை செய்ய முயற்சிப்பார்கள் என்பதை அறிந்திருந்ததால் தனது பாதுகாப்பை மிகவும் பலப்படுத்தினார்.
எனினும் டிசம்பர் இருபத்தியெட்டாம் திகதி செவ்வாய்க் கிழமை காலை பத்து மணிக்கு உள்ளக அமைச்சின் காரியாலயத்துக்குள் ரானுவ சீருடையில் நுழைந்த இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பாதுகாப்புப் படையினருடன் வீற்றிருந்த பிரதமர் நக்றாஷி பாட்ஷாவின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து படு கொலை செய்து விட்டார்.
இதை தொடர்ந்து ஹஸனுல் பன்னா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவரது ஆயுதக் குழுத்தலைவர் அப்து ரஹ்மான் ஸிந்தி கைது செய்யப்பட அதன் புதிய தளபதியாக செய்யித் பாயிஸ் என்பவர் நியமிக்கப் பட்டார்.
இதைதொடர்ந்து புதிய ஆண்டான ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தொன்பது ஜனவரி மாதம் பதின் மூண்றாம் திகதி காலை இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த ஷபீக் அனஸ் என்பவர் எகிப்தின் மேன் முறையீட்டு நீதிமன்றத்திற்குள் ஒரு கைப் பெட்டியுடன் நுழைந்து தான் சில வழக்குகள் தொடர்பாக கிராமப்புறங்களின் பிரதிநிதியாக அரசாங்க வக்கிலை சந்திக்க வந்ததாகக் கூறி தனது பெட்டியை அங்கே வைத்து  விட்டு காலை உணவு அருந்தி வருவதாகக் கூறி வெளியேறினார்.
இவரது நடவடிக்கையில் சந்தேகங்கொண்ட அலுவலகப் பணியாளர்கள் பாதுகாப்புப் படையினருடன் தொடர்பு கொண்டு பெட்டியை பரி சோதித்க அதை வெளியே கொண்டு சென்ற போது வீதியில் வைத்து அப்பெட்டி வெடித்து விட்டது.!!
வெடி குண்டைக் கொண்டு வந்த ஷபீக் அனஸ் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரனைக்குட்படுத்திய போது அவர் “ஜீப் ரக வாகனத்தில் இருந்து போலீஸாரால் கைப்பற்றப் பட்ட முக்கிய ஆவனங்களையும் தடயங்களையும் அழிக்கும் நோக்கில் ஆயுதக் குழுவின் புதிய தலைவர் செய்யித் பாயிஸ் என்பவரின் பணிப்புரையின் பேரில் நீதிமன்றத்தை தகர்க்க வந்ததாக விசாரனையின் போது ஏற்றுக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து அப்துல் அஸீஸ் பாட்ஷா என்பவரும் முஸ்தபா பேக் என்பவரும் வீட்டுக் காவலில் வைத்திருந்த ஹஸனுல் பன்னா அவர்களை சந்தித்து ஒரு ரகசிய பேச்சுவார்த்தை நடாத்துகிறார்கள்.
அடுத்த நாள் பத்திரிகையில் ஹஸனுல் பன்னா அவர்கள் ஒரு அறிக்கையை விட்டிருந்தார்கள் அதில் மேற்படி வண்முறைகளில் ஈடுபட்ட, தான் பத்து வருடங்களாக உருவாக்கி கட்டிக்காத்த தனது ஆயுதக் குழுவைச் சார்ந்தவர்களை அவர்கள் ” இஹ்வான்களும் இல்லைமுஸ்லிம்களும் இல்லை” என தெரிவித்திருந்தார்கள்.!!
ஆக இஸ்லாத்தின் பெயரால் இயக்கத்தில் சேர்ந்து தங்களது உயிர்களையும் அர்ப்பணிக்கத் துணிந்த அப்பாவி இளைஞர்கள் “இஹ்வான்களும் இல்லைமுஸ்லிம்களும் இல்லை”எனக் காட்டிக் கொடுக்கப்பட்டு முத்திரை குத்தப்பட்ட கசப்பான வரலாறு இவ்வாறுதான் அரங்கேறியது.
எனவே இதன் மூலம் மேற்படி  “இஹ்வான்களும் இல்லைமுஸ்லிம்களும் இல்லை” என்ற கூற்று யாரால் கூறப்பட்டது என்ற கேள்விக்கு இஹ்வானுல் முஸ்லிமீன் ஸ்தபகர், தலைவர்ஹஸனுல் பன்னாவால் கூறப்பட்டது என்ற விடையும் யாருக்குக் கூறப்பட்டது என்ற கேள்விக்கு இஸ்லாத்தின் பெயரால் இயக்கத்தில் சேர்ந்து தங்களது உயிர்களையும் அர்ப்பணிக்கத் துணிந்த அப்பாவி இளைஞர்களுக்கு கூறப்பட்டது என்ற விடையும்எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்ற கேள்விக்கு அரசாங்கத்தின் நெருக்கடிகளின் போது,தனது உயிருக்கு ஆபத்து என்று வந்த போது, தனது மலினமான அரசியல் அபிலாஷைகளுக்கு பங்கம் ஏற்படும் என்ற போது என்ற விடையும் எமக்குக் கிடைக்கிறது.!!
படிப்பது ராமாயனம் இடிப்பது பெருமாள் கோயில் என்ற ரீதியில் ஒரு புறத்தே ஒற்றுமைக் கோஷம் எழுப்பிக் கொண்டு மறு புறத்தே நாலாந்தர அரசியல் லாபங்களுக்காக முஸலிம்களையே கொண்று குவிப்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் இருக்கிறதா என்பது ஒரு புறமிருக்க தன்னை நம்பி வந்த அப்பாவி மக்களையே காட்டிக் கொடுத்த மாபெரும் வலலாற்றுத் துரோகம் இவ்வாறுதான் ஹஸனுல் பன்னா என்பவரால் அரங்கேற்றப் பட்டது என்பது கடும் விசனத்திற்கும் கண்டனத்துக்கும் உரியதாகும்.
ஹஸனுல் பன்னா என்பவரின் நேரடிக் கட்டளையின் பேரில் செயற்பட்ட ஆயுதக் குழுவினரை அவர்கள் “இஹ்வான்கள் இல்லை” என மறுத்ததும் இல்லாமல் “முஸ்லிகளும் இல்லை”என மறுத்ததன் மூலமாக  “முஸ்லிம்களை முஸ்லிம்கள் இல்லை என மறுக்கும் வரலாற்றில் புதைந்து போன சித்தாந்தம் உயிரூட்டப் பட்டு நவீன காலத்தில் இவ்வாறுதான் மீண்டும் விதைக்கப் பட்டது என்பதையும் இதனூடாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் ஹஸனுல் பன்னா அவர்கள் கொலை செய்யப்பட்டதும் அதை அரசாங்கமே செய்தது என சிலரும்  இல்லை!! இல்லை! இந்தத் துரோகச் செயலினால்., காட்டிக் கொடுப்பால்இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஆயுதக் குழுவினர்தான் ஹஸனுல் பன்னாவை கொலை செய்தார்கள் என மற்றும் சில அரசியல் ஆய்வாளர்கள், அவதானிகளும் பலத்த சர்ச்சை கொள்கிறார்கள்.
இது பற்றிய விரிவான விளக்கங்களை இன்ஷா அல்லாஹ் தேவையேற்படும் போது இனிவரும் கட்டுரைகளில் நோக்குவோம்.
எமது பிராத்தனை:
யா அல்லாஹ்! சத்தியத்தை எமக்கு சத்தியமாகக் காட்டி அதனைப் பின்பற்றும் பாக்கியத்தையும் அசத்தியத்தை அசத்தியமாகக் காட்டி அதனை தவிர்ந்து வாழும் பாக்கியத்தையும் எமக்கு அருள்வாயாக!!”
யா அல்லாஹ் எமது பாவங்களையும் எம்மை இறை விசுவாசத்தால் முந்திய எமது சகோதரர்களின் பாவங்களையும் மண்ணிப்பாயாக!விசுவாசங் கொண்டவர்கள் மீது எம் உள்ளங்களில் எந்தக் காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தி விடாதே !! எம் இரட்சகா! நீதான் மண்ணிப்பவனாகவும் கிருபை உள்ளவனாகவும் இருக்கிறாய்!
குறிப்பு 
குறித்த “இஹ்வான்களும் இல்லை முஸ்லிம்களும் இல்லை” என்ற அறிக்கை ஹஸனுல் பன்னா அவர்களால் தான் வெளியிடப்பட்டது என்பதை இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் கலாநிதி மஃமூத் அப்துல் ஹலீம் என்பவர் தனது “الإخوان المسلمون أحداث صنعت التاريخ”

(இஹ்வானுல் முஸ்லிமீன் வரலாறு படைத்த சில நிகழ்வுகள்” என்ற இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் உத்தியோக பூர்வ வரலாற்றுப் பதிவில் இரண்டாம் பாகத்தில் எழுபத்தி ஐந்தாம் பக்கத்தில் (தாருத் தஃவா வெளியீடு) உறுதி செய்துள்ளார் என்பதை வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அபூ ஸைத் அல் அதரி