Pages

Tuesday, March 27, 2012

சிலாபத்தில் நடைபெற்ற SLTJ அங்கத்தவர்களுக்கான தர்பியா (விரிவான செய்திகளுடன்)



March 27, 2012
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் மற்றும் மாதம்பைக் கிளைகள் இணைந்து நடாத்திய முழு நாள் தர்பியா நிகழ்ச்சி கடந்த 25.03.2012 அன்று காலை 9.30 மணிக்கு இஸ்லாமிய அழைப்பு மையம், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையில் சகோதரர் எம்.எஸ்.எம் ஸப்வான் டி.ஐ.எஸ்.ஸீ அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
தலைமை உரையில் இத்தர்பியாவின் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகோதரர் எம்.டீ.எம். ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸீ அவர்களினால் “அழைப்பாளர்களின் அணிகலன்கள்”" எனும் தலைப்பில் சிறப்பானதொரு பயற்சி வழங்கப்பட்டது. இதில் அழைப்பாளன் என்றால் யார்? அழைப்புப் பணியின் அவசியம், அழைப்பாளர்களிலிடம் இருக்கவேண்டிய மற்றும் தவிர்க்கப்படவேண்டிய பண்புகள் போன்ற அம்சங்கள் தெளிவாக விளக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த கிளை அங்கத்தவர்களை மூன்று குழுக்களாக பிரித்து “அழைப்புப் பணியில் ஏற்படும் சவால்களும் அதற்கான தீர்வுகளும்” எனும் தலைப்பில் ஜமா’அத்தின் தேசியத் தலைவர் ஆர்.எம்.ரியால் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் நடாத்தப்பட்டு அதற்கான தீர்வுகளும் சொல்லப்பட்டன.
இதன் பின் ளுஹர் மற்றும் மதிய உணவிற்காக 12.30 மணியளவில் இடைநிருத்தப்பட்டு மீண்டும் 2.00மணிக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகக் கொள்கைகள் குறித்த அங்கத்தவர் கேள்வி பதில் நிகழ்ச்சி ஜமாஅத்தின் தேசிய பொதுச் செயலாளர் அப்துர் ராஸிக் பீ.காம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிளை அங்கத்தவர்களால் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு அங்கத்தவர்களே முன்வந்து பதிலளித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதனைத் தொடர்ந்து சகோதரர் எம்.டீ.எம். பர்ளீன் எம்.ஐ.எஸ்.ஸீ அவர்களினால் “எதிர்ப்புக்கு மத்தியில் ஏகத்துவ எழுச்சி” எனும் தலைப்பில் உறுக்கமானதோர் உரை நிகழ்த்தப்பட்டது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைத் தூதர்கள் எதிர்கொண்ட எதிர்ப்புகள் மற்றும் அவர்களை ஈமான் கொண்ட தோழர்கள் முகம் கொடுத்த இன்னல்களையும் வஹியின் ஒளியில் படம்பிடித்துக் காட்டும் வன்னம் இவ்வுரை அமைந்திருந்தது.
அடுத்ததாக எம்.டீ.எம். பர்ஸான் அவர்களினால் “நிர்வாகவியல் ஒர் இஸ்லாமியப் பார்வை” எனும்  தலைப்பில் தெளிவுரை நிகழ்த்தப்பட்து. அதில் நிர்வாகம் என்றால் என்ன? நபிகளார் கடைபிடித்த நிர்வாக ஒழுங்குகள் மற்றும் ஒரு நிர்வாகியிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இறுதியாக மாலை 6.00 மணியளவில் சிலாபம் கிளைத் தலைவர் எம்.ஆர்.எம். பவ்ஸாத் அவர்களால் முடிவுரை வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பு: இந்நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சிலாபம், மாதம்பை, அகுரனை, வட்டதெனிய, மல்வானை, பானந்துரை, சம்மாந்துரை, கல்முனை உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் சுமார் 60 பேரளவில் கலந்துகொண்டனர்.