Pages

Saturday, October 22, 2011

ஊடகங்களின் பொய் அம்பலம்: கடாபியின் இறுதிநேர காணொளி! (படங்கள், காணொளி)



கிளர்ச்சிப் படையினர் கடாபி தங்கியிருந்த அவரது சொந்த ஊரான சேர்ட்டேவை நேற்றைய தினம் முற்றுகையிட்டனர். இதனிடையே நேட்டோப் படையினர் தமது வேவு பார்த்தலை அதிகரித்து கடாபி அந் நகரில் இருப்பதை உறுதிசெய்துகொண்டனர்.



கிளர்ச்சிப்படையினர் தாக்குதலை தொடுத்தவேளை அங்கிருந்து அவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அவரது வாகனத் தொடரணி மீது நேட்டோப் படையின் ஆளில்லா விமானங்களும் ஜெட் விமானங்களும் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக 5 வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக நேட்டொப் படைப்பிரிவுக்கு செய்தி கிட்டியபோதிலும் அந்த வாகனத் தொடரணியில் எந்த வாகனத்தில் கடாபி இருக்கிறார் என்பதும் கூட அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.



பாதுகாப்புக்குச் சென்ற வாகனங்களை துல்லியமாகத் தாக்கியழித்துள்ளது நேட்டோப் படை. இதனால் அவர் வாகனம் மட்டும் பலத்த சேதமடைந்த நிலையில் அவரது பாதுகாப்பாளரும் சாரதியும் வாகனத்தை திருப்பி மறைவான ஒரு இடத்தில் நிறுத்தியுள்ளனர். அதனையும் வேவுபார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானம் கடாபி வீதி ஓரமாக இருக்கும் ஒரு சுரங்கக் குழிக்குள் இருக்கிறார் என்ற தகவலை தலைமைக்கு பரிமாற அவ்விடம் நோக்கி கிளர்ச்சிப்படையினர் நகர்ந்துள்ளனர்.



காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் பதுங்கியிருந்த அவரை வெளியே இழுத்து சேட்டைக் களற்றி நிர்வாணமாக்கி அவரைப் பிடித்து உலுக்கி கன்னத்தில் அடித்து முதலில் மானபந்தப் படுத்தியுள்ளனர் கிளர்சியாளர்கள். பின்னர் அவர் தலையிலும் வயிற்றிலும் சுட்டுள்ளனர்.



ஆனால் கடாபி தன்னைச் சுடவேண்டாம் எனக் கெஞ்சியுள்ளார். நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடாபியின் மகன்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காலில் சிறு காயங்களோடு பிடிபட்டார் என முதலில் அறிவித்த கிளர்ச்சியாளர்கள் பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். அதேபோல மற்றைய மகனும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன் பின்னரே அவர் உடலை ஒரு அம்பூலன்ஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். ஆனால் மேற்குலக தொலைக்காட்சிகள் கடாபி காயங்களுடன் பிடிபட்டதாகவும் அவருக்கு அவசர முதலுதவி வழங்கப்பட்டதாகவும் பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ரத்தப் பெருக்கு காரணமாக அவர் உயிரிழந்தார் எனவும் கதைகளைக் கட்டியது. ஏதோ மனிதநேயம் மிக்க ஒரு நடவடிக்கையை தமது நேட்டோப் படைப்பிரிவு செய்ததாக இவர்கள் நினைப்பது அடி முட்டாள் தனமாகும்.


அமெரிக்காவின் திட்டப்படி கடாபியை தனிமைப்படுத்தி அவருக்கு மரணபயத்தைக் காட்டி யாரும் இல்லாத நிலையில் வீதியில் ஓடவிட்டு பின்னர் ஒரு மறைவிடத்தை அவர் தேடிய பின்னர் சினிமாப்பட பாணியில் அவரைக் கொண்றுள்ளனர் கிளர்சிப் படையினர். கடாபிக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் என்ன வித்தியாசம்?


இதில் வேதனையான விடையம் என்னவென்றால் சரணடைந்த கடாபியின் வாகன ஓட்டுனரை முதலில் கைகளைக் கட்டி வாகனத்தில் ஏற்றிவிட்டு(புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது) பின்னர் அவர் இறந்துவிட்டார் எனவும் கிளர்ச்சிப் படையினரும் அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. 


கடாபி பல குற்றங்களை இழைத்தவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரை கண்ட இடத்தில் சுட்டுக் கொலைசெய்ய கிளர்ச்சியாளர்களுக்கு என்ன அருகதை உள்ளது ? அவரை இலகுவாகப் பிடித்து நீதிமன்றின் முன் நிறுத்தியிருக்கலாம். அப்படி அவர்கள் நிறுத்தியிருந்தால் கிளர்ச்சிக்காரர்கள் மரியாதை சற்று உயர்ந்திருக்கும். ஆனால் அவர்கள் அவசரப் போக்கு மிக ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது.


குறிப்பாக பென்காசி என்னும் நகரில் உள்ளவர்கள் தாமே முதலில் புரட்சியை ஆரம்பித்ததால் நாட்டை ஆளும் பொறுப்பு தம்மிடமே உள்ளது என்றும் மிஸ்ராட்டா நகரவாசிகள் தாமே முழுப் பொறுப்பையும் எடுப்போம் என்று குழுக் குழுவாகப் பிரிந்து விவாதம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். பல முஸ்லீம் இனங்கள் வாழும் லிபியாவில் இனி ஆரம்பமாக இருக்கும் அரசியல் எப்பாதை நோகிச் செல்லும் எத்ததைய சவால்களைத் தோற்றுவிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.











புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடலை புதைப்பதில் இடைக்கால அரசின் அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இறைச்சி கூடமாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் கடாபி உடல் அனாதையாக கிடக்கிறது. இது லிபிய மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்கா நாடான லிபியாவை புரட்சி மூலம் கைப்பற்றி 42 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் கடாபி(69). கடந்த பிப்ரவரியில் அவருக்கு எதிராக கிளர்ச்சி தொடங்கியது. அவரை எதிர்த்தவர்கள் ஓரணியில் திரண்டு புரட்சி படை என்ற பெயரில் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு அமெரிக்கா உட்பட நேட்டோ படைகளும் ஆதரவு அளித்தன.
கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி தலைநகர் திரிபோலியை புரட்சி படை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அப்போது முதல் 2 மாதமாக தலைமறைவாகி இருந்த கடாபி அவரது சொந்த ஊரான சிர்தி யில் நெடுஞ்சாலைக்கு அடியில் செல்லும் பாதாள சாக்கடை குழாயில் பதுங்கி வாழ்ந்துள்ளார்.
அவரது இருப்பிடத்தை நேற்று முன்தினம் புரட்சி படையினர் கண்டுபிடித்தனர். துப்பாக்கி முனையில் அவரை வெளியே இழுத்துப் போட்டனர். அப்போது சுட்டு விடாதீர்கள் என்று கடாபி கதறியதாக புரட்சி படை வீரர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இருப்பினும் அவர் தப்ப முயன்றதாகவும், அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறி புரட்சி படையினர் சுட்டதில் கடாபி பலியானார்.
அவரது உடலை மிஸ்ரடா பகுதியில் முன்பு இறைச்சி கூடமாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் வைத்துள்ளனர். கடாபி உடலை அடக்கம் செய்வதில் இடைக்கால அரசை சேர்ந்தவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மத வழக்கப்படி உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறினர்.
ஆனால் சர்வாதிகார ஆட்சி நடத்திய கடாபி பலியானதில் சந்தேகம் ஏற்படாமல் இருக்க சில நாட்கள் அவரது உடலை வைத்திருக்கலாம் என்று சிலர் தெரிவித்தனர்.
ஈராக்கில் தூக்கிலிடப்பட்ட சதாம் உசேனை மத சடங்குகள்படி அடக்கம் செய்தது போல கடாபியையும் அடக்கம் செய்ய ஒரு பிரிவினர் வலியுறுத்தினர்.
ஆனால் கடாபியை அடக்கம் செய்யும் இடத்தை ரகசியமாக வைத்திருக்கவும், அவரது ஆதரவாளர்கள், உறவினர்களுக்கு தெரிந்து நினைவிடமாக வழிபடாமல் தடுக்கவும் வேண்டும் என்று சிலர் கூறினர். வேறு சிலரோ மகன் உட்பட உறவினர்கள் இருப்பதால் அவர்களை கொண்டு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்றனர்.
இதனால் பலியாகி 2 நாட்கள் ஆகியும் கடாபி உடல் அடக்கம் செய்யப்படாமல் கிடக்கிறது. இதுபற்றி தேசிய மாற்று அரசு கவுன்சில்(என்.டி.சி) கமாண்டர் அப்துல் சலாம் கூறுகையில்,“கடாபி உடல் முழு மரியாதையுடன் இஸ்லாமிய வழக்கப்படி 24 மணி நேரத்துக்குள் அடக்கம் செய்யப்படும்” என்றார்.
இதற்கிடையே கடாபி உயிருடன் பிடிபட்டும் அவரை சுட்டதுடன், ரத்த காயங்களுடன் கதறிய அவரை புரட்சி படையினர் அடித்து சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிர்ச்சி அளிக்கும் செல்போன் வீடியோ காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மனித உரிமைகளை காப்பதாக கூறும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இதற்கு என்ன பதில் சொல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடாபியிடம் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை அமைப்பு உத்தரவிட்டுள்ளது. மேலும் கடாபி மறைவுக்கு பிறகு லிபியாவில் ஜனநாயகம் மலர்ந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ள நிலையில் புதிய அரசு அமைப்பதில் புரட்சி படைக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், தலைமை பொறுப்புக்கு மோதல் உருவாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





உயிருடன் பிடிக்கப்பட்ட கடாபி!

[ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 05:19.05 AM GMT ]
லிபியாவின் முன்னாள் ஆட்சியாளர் கேணல் கடாபி அவரின் சொந்த ஊரான சேர்ட்டேவில் நேற்று வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர் கால்வாய்க் குழியொன்றிலிருந்து தேசிய இடைக்கால கவுன்ஸில் படைகளினால் பிடிக்கப்பட்டதாகவும் தன்னை சுட வேண்டாம் என அவர் மன்றாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் பினன்ர் அவர் தலையிலும் வயிற்றிலும் சுடப்பட்டு கொல்லப்பட்டார். கால்வாய்க் குழியொன்றிலிருந்து கேணல் கடாபி கிளர்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டபோது அவர் இராணுவ பாணி ஆடை அணிந்திருந்தார். பிக் வாகனமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட கேணல் கடாபி பின்னர் ஓரிடத்தில் வைத்து வாகனத்திலிருந்து இறக்கப்படும் காட்சிகளை லிபிய தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
தன்னை சுட்டுவிட வேண்டாம் என கடாபி கோரியதாகவும் கிளர்ச்சிப் படை வீரர் ஒருவரிடம் ‘ நான் உங்களுக்கு என்ன செய்தேன்’ எனக் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அவரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் தலையிலும் வயிற்றிலும் சுடப்பட்டார். அவரின் சடலத்தை கிளரச்சிப்படையினர் இழுத்துச் செல்லும் காட்சியை அல் ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பின்னர் அவரின் சடலும் அம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றப்பட்டது.
1942.06.07 ஆம் திகதி பிறந்த முவம்மர் கடாபி 1969 ஆம் ஆண்டு தனது 27 ஆவது வயதில் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். . தனது 42 வருடகால ஆட்சிப்பிடியை நேட்டோ ஆதரவுடனான கிளர்ச்சிப்படையினரிடம் கடந்த ஓகஸ்ட் மாதம் அவர் இழந்தார். தனது 69 ஆவது வயதில் அவர் நேற்று வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

Friday, October 21, 2011

அர்ஹம் மவ்லவியுடன் SLTJ யின் விவாத ஒப்பந்தம் வீடியோ பதிவு வெளியீடு.



October 20, 2011
அர்ஹம் மவ்லவியுடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த 01.10.2011 அன்று மாபோலையில் வைத்து 2 தலைப்புகளில் விவாத ஒப்பந்தம் போடப்பட்டது.  அந்த ஒப்பந்தத்தின் நகல் பிரதிகளைநாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.
விவாத ஒப்பந்தத்தின் வீடியோ பதிவையும் இங்கு வெளியிடுகிறோம்.


Tuesday, October 18, 2011

பெருநாள் பயானிற்கு மிம்பர் (சொற்பொழிவு மேடை அவசியமா?


வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
956 حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَرْحٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ وَالْأَضْحَى إِلَى الْمُصَلَّى فَأَوَّلُ شَيْءٍ يَبْدَأُ بِهِ الصَّلَاةُ ثُمَّ يَنْصَرِفُ فَيَقُومُ مُقَابِلَ النَّاسِ وَالنَّاسُ جُلُوسٌ عَلَى صُفُوفِهِمْ فَيَعِظُهُمْ وَيُوصِيهِمْ وَيَأْمُرُهُمْ فَإِنْ كَانَ يُرِيدُ أَنْ يَقْطَعَ بَعْثًا قَطَعَهُ أَوْ يَأْمُرَ بِشَيْءٍ أَمَرَ بِهِ ثُمَّ يَنْصَرِفُ قَالَ أَبُو سَعِيدٍ فَلَمْ يَزَلْ النَّاسُ عَلَى ذَلِكَ حَتَّى خَرَجْتُ مَعَ مَرْوَانَ وَهُوَ أَمِيرُ الْمَدِينَةِ فِي أَضْحًى أَوْ فِطْرٍ فَلَمَّا أَتَيْنَا الْمُصَلَّى إِذَا مِنْبَرٌ بَنَاهُ كَثِيرُ بْنُ الصَّلْتِ فَإِذَا مَرْوَانُ يُرِيدُ أَنْ يَرْتَقِيَهُ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَجَبَذْتُ بِثَوْبِهِ فَجَبَذَنِي فَارْتَفَعَ فَخَطَبَ قَبْلَ الصَّلَاةِ فَقُلْتُ لَهُ غَيَّرْتُمْ وَاللَّهِ فَقَالَ أَبَا سَعِيدٍ قَدْ ذَهَبَ مَا تَعْلَمُ فَقُلْتُ مَا أَعْلَمُ وَاللَّهِ خَيْرٌ مِمَّا لَا أَعْلَمُ فَقَالَ إِنَّ النَّاسَ لَمْ يَكُونُوا يَجْلِسُونَ لَنَا بَعْدَ الصَّلَاةِ فَجَعَلْتُهَا قَبْلَ الصَّلَاةِ  رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (வீட்டிற்குத்) திரும்புவார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்த போது கஸீர் பின் ஸல்த் என்பார் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏற முன்றார். நான் அவரது ஆடையைப் பிடித்து கீழே இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள்' என்று கூறினேன்.
அதற்கு மர்வான், 'நீர் விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறி விட்டது' என்றார். 'நான் விளங்காத (இந்தப் புதிய) நடைமுறையை விட நான் விளங்கி வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாக மிகச் சிறந்ததாகும்' என நான் கூறினேன்.
அதற்கு மர்வான், 'மக்கள் தொழுகைக்குப் பிறகு இருப்பதில்லை, எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன்' என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1472
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ إِسْمَعِيلَ بْنِ رَجَاءٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ح وَعَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ أَخْرَجَ مَرْوَانُ الْمِنْبَرَ فِي يَوْمِ عِيدٍ فَبَدَأَ بِالْخُطْبَةِ قَبْلَ الصَّلَاةِ فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا مَرْوَانُ خَالَفْتَ السُّنَّةَ أَخْرَجْتَ الْمِنْبَرَ فِي يَوْمِ عِيدٍ وَلَمْ يَكُنْ يُخْرَجُ فِيهِ وَبَدَأْتَ بِالْخُطْبَةِ قَبْلَ الصَّلَاةِ فَقَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيِّ مَنْ هَذَا قَالُوا فُلَانُ بْنُ فُلَانٍ فَقَالَ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ رَأَى مُنْكَرًا فَاسْتَطَاعَ أَنْ يُغَيِّرَهُ بِيَدِهِ فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ  
அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265, அஹ்மத் 10651 ஆகிய நூல்களின் அறிவிப்பில் 'மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம் செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர். இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டு வரப்படவில்லை...' என்று இடம் பெற்றுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரேயொரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ أَخْبَرَنِي أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الْعِيدِ فَيُصَلِّي بِالنَّاسِ رَكْعَتَيْنِ ثُمَّ يُسَلِّمُ فَيَقِفُ عَلَى رِجْلَيْهِ فَيَسْتَقْبِلُ النَّاسَ وَهُمْ جُلُوسٌ فَيَقُولُ تَصَدَّقُوا تَصَدَّقُوا فَأَكْثَرُ مَنْ يَتَصَدَّقُ النِّسَاءُ بِالْقُرْطِ وَالْخَاتَمِ وَالشَّيْءِ فَإِنْ كَانَتْ حَاجَةٌ يُرِيدُ أَنْ يَبْعَثَ بَعْثًا يَذْكُرُهُ لَهُمْ وَإِلَّا انْصَرَفَ   (رواه ابن ماجة)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்கு) வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில் நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: இப்னுமாஜா 1278
மிம்பர் அவசியம் என்போர் எடுத்து வைக்கும் ஆதாரம்
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து பெருநாள் பயானை மிம்பர் இல்லாமல் தரையில் நின்று நிகழ்த்துவது தான் நபிவழி என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
சிலர் பெருநாள் பயானையும் மிம்பர் மேடையின் மீது தான் நின்று நிகழ்த்த வேண்டும் என்பதற்கு ஒரு ஆதாரத்தை முன்வைக்கின்றனர். அந்த ஆதாரத்தைப் பற்றி விரிவாகக் காண்போம்.
1441 حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو عَنْ الْمُطَّلِبِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ شَهِدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَضْحَى بِالْمُصَلَّى فَلَمَّا قَضَى خُطْبَتَهُ نَزَلَ عَنْ مِنْبَرِهِ فَأُتِيَ بِكَبْشٍ فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ أَنْ يَقُولَ الرَّجُلُ إِذَا ذَبَحَ بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ وَهُوَ قَوْلُ ابْنِ الْمُبَارَكِ وَالْمُطَّلِبُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ يُقَالُ إِنَّهُ لَمْ يَسْمَعْ مِنْ جَابِرٍ  رواه الترمدي
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :  நான் திடலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தது உரையை முடித்தவுடன் மிம்பரிலிருந்து இறங்கினார்கள். ஒரு ஆடு கொண்டு வரப்பட்டது. அதனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய கையினால் அறுத்தார்கள். பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் (அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வே மிகப் பெரியவன்) இது என் சார்பாகவும். என்னுடைய உம்மத்தில் உள்ஹிய்யா கொடுக்காதவர்கள் சார்பாகவும் ஆகும் எனக் கூறினார்கள். 
நூல் ; திர்மிதி (1441)
இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இதனுடைய அறிவிப்பாளர்களின் ஒருவரான அல்முத்தலிப் இப்னு அப்துல்லாஹ் பின் ஹன்தப் என்பவர் ஜாபிர் (ரலி) அவர்களைச் சந்தித்ததில்லை. அவரிடமிருந்து எதையும் செவியேற்றதுமில்லை. எனவே இது அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த ஹதீஸ் ஆகும்.
இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அடிக்குறிப்பில் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
وَالْمُطَّلِبُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ يُقَالُ إِنَّهُ لَمْ يَسْمَعْ مِنْ جَابِرٍ  رواه الترمدي
அல்முத்தலிப் பின் அப்தில்லாஹ் பின் ஹன்ப் ஜாபிர் அவர்களிடமிருந்து எதையும் செவியேற்கவில்லை என்று கூறப்படுகிறது (திர்மிதி 1441 ஹதீஸ் அடிக்குறிப்பு)
மேலும் இமாம் திர்மிதி அவர்கள் 775 வது ஹதீஸின் அடிக்குறிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
775 حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو عَنْ الْمُطَّلِبِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَيْدُ الْبَرِّ لَكُمْ حَلَالٌ وَأَنْتُمْ حُرُمٌ مَا لَمْ تَصِيدُوهُ أَوْ يُصَدْ لَكُمْ قَالَ وَفِي الْبَاب عَنْ أَبِي قَتَادَةَ وَطَلْحَةَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ مُفَسَّرٌ وَالْمُطَّلِبُ لَا نَعْرِفُ لَهُ سَمَاعًا عَنْ جَابِرٍ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لَا يَرَوْنَ بِالصَّيْدِ لِلْمُحْرِمِ بَأْسًا إِذَا لَمْ يَصْطَدْهُ أَوْ لَمْ يُصْطَدْ مِنْ أَجْلِهِ قَالَ الشَّافِعِيُّ هَذَا أَحْسَنُ حَدِيثٍ رُوِيَ فِي هَذَا الْبَابِ وَأَقْيَسُ وَالْعَمَلُ عَلَى هَذَا وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَقَ  رواه الترمدي
முத்தலிப் அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியேற்றதாக நாம் அறியவில்லை (திர்மிதி 775 வது ஹதீஸ் அடிக்குறிப்பு)
மேலும் இமாம் திர்மிதி அவர்கள் 2840 ஹதீஸின் அடிக்குறிப்பில் முத்தலிப் என்ற அறிவிப்பாளரின் அறிவிப்புகளைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்கள்.
2840 حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الْحَكَمِ الْوَرَّاقُ الْبَغْدَادِيُّ حَدَّثَنَا عَبْدُ الْمَجِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ الْمُطَّلِبِ بْن حَنْطَبٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنْ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنْ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ قَالَ وَذَاكَرْتُ بِهِ مُحَمَّدَ بْنَ إِسْمَعِيلَ فَلَمْ يَعْرِفْهُ وَاسْتَغْرَبَهُ قَالَ مُحَمَّدٌ وَلَا أَعْرِفُ لِلْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ سَمَاعًا مِنْ أَحَدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا قَوْلَهُ حَدَّثَنِي مَنْ شَهِدَ خُطْبَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ و سَمِعْت عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ يَقُولُ لَا نَعْرِفُ لِلْمُطَّلِبِ سَمَاعًا مِنْ أَحَدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عَبْدُ اللَّهِ وَأَنْكَرَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ أَنْ يَكُونَ الْمُطَّلِبِ سَمِعَ مِنْ أَنَسٍ  رواه الترمدي
இமாம் முஹம்மது (புகாரி இமாம்) அவர்கள் கூறுகிறார்கள் : முத்தலிப் பின் அப்துல்லாஹ் என்பார் நபித் தோழர்களில் எந்த ஒருவரிடமும் செவியேற்றதாக நான் அறியவில்லை. என்றாலும் (நபித் தோழரின் பெயரைக் குறிப்பிடாமல்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குத்பாவில் கலந்து கொண்ட ஒருவர் எனக்கு அறிவித்துள்ளார் என்று (மட்டும்) கூறியுள்ளார். 
அப்துல்லாஹ் பின் அப்திர்ரஹ்மான் கூறுகிறார் : நபித் தோழர்களில் எந்த ஒருவரிடமிருந்தும் முத்தலிப் செவியேற்றதாக நாம் அறியவில்லை. மேலும் அப்துல்லாஹ் கூறுகிறார் : அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து முத்தலிப் செவியேற்றார் என்பதை அலிய்யிப்னுல் மதனீ மறுத்துள்ளார்
நூல் ; திர்மிதி 2840 வது ஹதீஸ் அடிக்குறிப்பு
மேலும் பல்வேறு ஹதீஸ்கலை அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் இவர் எந்த நபித் தோழரிடமிருந்தும் எதையும் செவியேற்கவில்லை என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
சுருக்கத்தைக் கருதி அதன் அரபி மூலங்களை மட்டும் கீழே தருகிறோம்.
جامع التحصيل - (ج 1 / ص 281)
 774 - المطلب بن عبد الله بن حنطب روى عن أبي هريرة وابن عباس وعائشة وأم سلمة وجابر وابن عمر وزيد بن ثابت وعبد الله بن عمرو وغيرهم رضي الله عنهم قال البخاري لا أعرف للمطلب بن حنطب عن أحد من الصحابة سماعا إلا قوله حدثني من شهد خطبة النبي صلى الله عليه و سلم قال الترمذي وسمعت عبد الله بن عبد الرحمن يعني الدارمي يقول مثله قال عبد الله وأنكر علي بن المديني أن يكون المطلب سمع من أنس بن مالك وقال أبو حاتم المطلب بن حنطب عامة أحاديثه مراسيل لم يدرك أحدا من أصحاب النبي صلى الله عليه و سلم إلا سهل بن سعد وأنسا وسلمة بن الأكوع أو من كان قريبا منهم ولم يسمع من جابر ولا من زيد بن ثابت ولا من عمران بن حصين وقال مرة أخرى لم يدرك عائشة ويشبه أن يكون أدرك جابرا وقال أبو زرعة أرجو أن يكون سمع من عائشة وقال الترمذي عقيب حديثه عن جابر حديث صيد البر لكم حلال ما لم تصيدوه أو يصاد لكم المطلب لا نعرف له سماعا من جابر والله أعلم
مغانى الأخيار - (ج 5 / ص 53)
2298- المطلب بن عبد الله بن حنطب: ويقال: المطلب بن عبد الله بن المطلب بن حنطب بن الحارث بن عبيد بن عمرو بن مخزوم القرشى المخزومى المدنى، وقيل: المطلب بن عبد الله بن المطلب بن عبد الله بن حنطب، قاله أبو حاتم، وقيل: إنهما اثنان. عن أنس بن مالك، وجابر بن عبد الله، وحمران بن أبان، وزيد بن ثابت، وسعيد بن المسيب، وعامر بن سعد بن أبى وقاص، وأبيه عبد الله بن حنطب، وعبد الله بن عباس، وعبد الله بن عمر بن الخطاب، وعبد الله بن عمرو بن العاص، وعبد الله بن أبى عمرة، وعمر بن الخطاب، ومحمد بن سعد بن أبى وقاص، وأبى رافع مولى رسول الله - صلى الله عليه وسلم -، وأبى موسى الأشعرى، وأبى هريرة، وعائشة زوج النبى - صلى الله عليه وسلم -، وأم سلمة زوج النبى - صلى الله عليه وسلم -، وعن من سمع من النبى - صلى الله عليه وسلم -
روى عنه ابنه الحكم بن المطلب بن عبد الله بن حنطب، وخالد بن رباح، وزهير بن محمد التميمى، وعبد الله بن طاووس، وعبد الله بن أبى لبيد، وعبد الرحمن الأوزاعى، وأبيه عبد العزيز بن المطلب بن عبد الله بن حنطب، وعبد الملك بن جريج، ومولاه عمرو بن أبى عمرو، وآخرون. قال أبو حاتم فى روايته عن عائشة: مرسل، ولم يدركها. وقال فى روايته عن جابر: يشبه أن يكون أدركه. وقال فى روايته عن غيره من الصحابة: مرسل. قال: وعامة حديثه مراسيل، غير أنى رأيت حديثًا يقول فيه: حدثنى خالى أبو سلمة. وقال أبو زرعة: ثقة. وقال: محمد بن سعد: كان كثير الحديث، وليس له يُحتج بحديثه؛ لأنه مرسل عن النبى - صلى الله عليه وسلم - كثيرًا، وليس له لقى، وعامة أصحابه مدلسون. وقال الدارقطنى: ثقة. وذكره ابن حبان فى الثقات، روى له البخارى فى القراءة خلف الإمام، والباقون سوى مسلم، وروى له أبو جعفر الطحاوى.

எனவே மேற்கண்ட ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த பலவீனமான ஹதீஸ் ஆகும். எனவே இதனை அடிப்படையாக வைத்து எந்த ஒரு மார்க்கச் சட்டத்தையும் எடுப்பது கூடாது.
இரண்டாவது ஆதாரம்
பெருநாள் உரைக்கு மிம்பர் மேடை அவசியம் எனக் கூறுபவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரம் காட்டுகின்றனர்
1440 حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا أَزْهَرُ بْنُ سَعْدٍ السَّمَّانُ عَنْ ابْنِ عَوْنٍ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ ثُمَّ نَزَلَ فَدَعَا بِكَبْشَيْنِ فَذَبَحَهُمَا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ  رواه الترمدي
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் பிறகு இறங்கி இரண்டு ஆடுகளை வரவழைத்து அவ்விரண்டையும் அறுத்துப் பலியிட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூ பக்ரா (ரலி)
நூல் : திர்மிதி (1440)
மேற்கண்ட ஹதீஸில் உரை நிகழ்த்தி இறங்கி ஆட்டை அறுத்தார்கள் என்று வருவதால் இது பெருநாள் உரை தான் என விளங்கி விட்டனர்.
மேற்கண்ட ஹதீஸில் எங்கே உரை நிகழ்த்தினார்கள்?, எதற்காக உரை நிகழ்த்தினார்கள்? எதிலிருந்து இறங்கினார்கள்? என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
இதே ஹதீஸ் புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் விரிவாக இடம் பெற்றுள்ளது.
இது இவர்கள் நினைப்து போல் பெருநாள் திடலில் நபியவர்கள் உரை நிகழ்த்தும் போது நடைபெற்ற சம்பவமுமல்ல. நபியர்ள் மிம்பர் மேடையிலிருந்து இறங்கவுமில்லை.
இது நபியவர்களின் இறுதி ஹஜ்ஜில் நடைபெற்ற ஒரு சம்பவமாகும். நபியவர்கள் இறங்கியது ஒட்டகத்திலிருந்து ஆகும். ஒட்டகத்திலிருந்து இறங்கித் தான் நபியவர்கள் இரண்டு ஆடுகளைக் குர்பானி கொடுக்கிறார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
3180 حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ قَالَ لَمَّا كَانَ ذَلِكَ الْيَوْمُ قَعَدَ عَلَى بَعِيرِهِ وَأَخَذَ إِنْسَانٌ بِخِطَامِهِ فَقَالَ أَتَدْرُونَ أَيَّ يَوْمٍ هَذَا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ فَقَالَ أَلَيْسَ بِيَوْمِ النَّحْرِ قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ فَأَيُّ شَهْرٍ هَذَا قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَلَيْسَ بِذِي الْحِجَّةِ قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ فَأَيُّ بَلَدٍ هَذَا قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ قَالَ أَلَيْسَ بِالْبَلْدَةِ قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا فَلْيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ قَالَ ثُمَّ انْكَفَأَ إِلَى كَبْشَيْنِ أَمْلَحَيْنِ فَذَبَحَهُمَا وَإِلَى جُزَيْعَةٍ مِنْ الْغَنَمِ فَقَسَمَهَا بَيْنَنَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ عَنْ ابْنِ عَوْنٍ قَالَ قَالَ مُحَمَّدٌ قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ قَالَ لَمَّا كَانَ ذَلِكَ الْيَوْمُ جَلَسَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَعِيرٍ قَالَ وَرَجُلٌ آخِذٌ بِزِمَامِهِ أَوْ قَالَ بِخِطَامِهِ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ يَزِيدَ بْنِ زُرَيْعٍ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ وَعَنْ رَجُلٍ آخَرَ هُوَ فِي نَفْسِي أَفْضَلُ مِنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ وَأَحْمَدُ بْنُ خِرَاشٍ قَالَا حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا قُرَّةُ بِإِسْنَادِ يَحْيَى بْنِ سَعِيدٍ وَسَمَّى الرَّجُلَ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي بَكْرَةَ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ فَقَالَ أَيُّ يَوْمٍ هَذَا وَسَاقُوا الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ابْنِ عَوْنٍ غَيْرَ أَنَّهُ لَا يَذْكُرُ وَأَعْرَاضَكُمْ وَلَا يَذْكُرُ ثُمَّ انْكَفَأَ إِلَى كَبْشَيْنِ وَمَا بَعْدَهُ وَقَالَ فِي الْحَدِيثِ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا إِلَى يَوْمِ تَلْقَوْنَ رَبَّكُمْ أَلَا هَلْ بَلَّغْتُ قَالُوا نَعَمْ قَالَ اللَّهُمَّ اشْهَدْ  رواه مسلم
3468 அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நஹ்ருடைய) அந்நாளில் தமது ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது "இது எந்த நாள் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு (மௌனமாக இருந்துவிட்டு,) "இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளல்லவா?'' என்று கேட்க, நாங்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!'' என்றோம்.
மேலும் "இது எந்த மாதம்?'' என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்று சொன்னோம். அவர்கள் "இது துல்ஹிஜ்ஜா மாதம் அல்லவா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம், அல்லாஹ்வின் தூதரே!'' என்றோம்.
மேலும், "இது எந்த நகரம்?'' என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அதற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு (மௌனமாக இருந்துவிட்டு), "இது "அல் பல்தா' (புனித நகரம் மக்கா) அல்லவா?'' என்று கேட்க, நாங்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!' என்று விடையளித்தோம்.
அப்போது அவர்கள், "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும். (இதை) இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.
பிறகு கறுப்பு கலந்த இரு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் திரும்பி, அவற்றை அறுத்தார்கள். மேலும், ஆட்டிறைச்சியில் சிறிதளவு எடுத்து எங்களிடையே பங்கிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(நஹ்ருடைய) நாள் வந்த போது நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்தார்கள். ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்'' என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
நூல் : முஸ்லிம் (3468)
67 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا بِشْرٌ قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ ابْنِ سِيرِينَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ ذَكَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَعَدَ عَلَى بَعِيرِهِ وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ أَوْ بِزِمَامِهِ قَالَ أَيُّ يَوْمٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ قَالَ أَلَيْسَ يَوْمَ النَّحْرِ قُلْنَا بَلَى قَالَ فَأَيُّ شَهْرٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ فَقَالَ أَلَيْسَ بِذِي الْحِجَّةِ قُلْنَا بَلَى قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا لِيُبَلِّغ الشَّاهِدُ الْغَائِبَ فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ  رواه البخاري
அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(துல்ஹஜ் 10ஆம் நாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இது எந்த நாள்?'' என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். "இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்' என்றோம். அடுத்து "இது எந்த மாதம்?'' என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் "இது துல்ஹஜ் மாதமல்லவா?'' என்றார்கள். நாங்கள் "ஆம்' என்றோம். நபி (ஸல்) அவர்கள் "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனித மானவையாகும்'' என்று கூறிவிட்டு, "(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில்கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூ பக்ரா (ரலி) நூல் : புகாரி (67)
எனவே பெருநாள் உரை தரையில் நின்று ஆற்றப்படவேண்டும் என்பதுதான் ஆதாரப் பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் சரியானதாகும்.
-ஆக்கம் அப்துன்னாசர்