Pages

Monday, February 27, 2012

அமெரிக்காவுக்கு எதிராக SLTJ நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்



February 28, 2012

“அந்நிய சக்திகள் இலங்கையின் இறைமையை தட்டிப்பறிக்க இடமளியோம்!”
களத்தில் இறங்கியது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணை குழுவின் பரிந்துரையை இலங்கை அரசு நடைமுறைப்பபடுத்தத் தவறிவிட்டது என்றும் கூறி அமெரிக்க தலைமையிலான மேற்குலக ஆதிக்கவாதிகள் நேற்று ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசுக்கெதிராய் தீர்மானங்கள் நிறைவேற்றக் காத்திருந்தன.

இலங்கை தேசத்து பிரச்சினையை அதன் குடிமக்களாகிய நாங்கள் பேசித்தீர்த்துக் கொள்வோம்! ஆட்டூழியம் புரிந்து பல நாடுகளின் இயற்கை வளங்களை சூரையாடி தனது மத மற்றும் உளுத்துப் போன சீரழிந்த கலாச்சாரத்தை திணித்து பல நாடுகளை சுடுகாடாய் மாற்றிய அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகளுக்கு மனித உரிமை குறித்து குரல் எழுப்புவதற்கோ இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிப்பதற்கோ அணுவளவும் அறுகதை கிடையாது என்பதோடு மனித உரிமை என்ற போர்வையில் இலங்கை மண்ணை கபளீகரம் செய்ய நினைக்கும் மேற்குலக நரித்தனத்தை இந்நாட்டு மக்களுக்கும் சர்வதேச உலகுக்கும் உணர்த்தும் விதத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை எமது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேற்று மேற்கொண்டது.

பி.ப.2.00 மணியளவில் மாளிகாவத்தையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ்வார்பாட்டம் கொட்டும் மழையில் அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களுடனும் தக்பீர் முழக்கங்களுடனும் மிக நேர்த்தியாக நடை பெற்றது. சாலை நெறிசல்களை ஏற்படுத்தாது பிறருக்கு ஊரு விளைவிக்காது கட்டுப்பாட்டுடன் நடைபெற்ற முன்மாதிரி மிகு ஆர்ப்பாட்டமாக இதனை அடையாளப்படுத்த முடியும்.

நட்டின் இறைமையை இமையாய் காக்க ஒரே முஸ்லிம் அமைப்பாக எமது ஜமாஅத் தான் களமிறங்கியது என்பதனை மாளிகாவத்தை பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டமை அவதானத்துக்குரியது. மாளிகாவத்தையில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் பஞ்சிக்கா வத்தை, மறதானை புகையிரத நிலையம் தாண்டி கண் மருத்துவ மனை வரை ஊர்வலமாய் வந்து அமைதியாய் முடிவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, February 23, 2012

இரகசிய இலக்கங்கள் களவாடபடுவது எப்படி " hacking passwords "




முதல் பகுதி 

இணையம் பாதுகாப்பானதா பகுதி 2



ஒரு நாளில் 24 மணி நேரம் போதவில்லை இதை அதிபடுத்த எதாவது ஆலோசனை உண்டா??
 சரி நண்பர்களே பதிவுக்கு வருகிறேன் ..எங்கள் இரகசிய இலக்கங்கள் எப்படி களவாட படுகின்றன என்பதை ..

இன்று இணையம் ஒரு அத்தியாவாசிய பாவனைகளில் ஒன்றாக வந்து விட்டது பலரதும் தனிபட்ட இரகசியங்கள் அவற்றில் அடங்கி இருக்கிறது. இப்படியான காலத்தில்  இதன் பாதுகாப்பு பற்றி அறிந்திருப்பது அவசியம்.

உங்கள் மினஞ்சல் ,முகபுத்தக மற்றும் உங்களின் கணக்குகளை வேறு ஒரு கணனியில் திறக்கும் பொது மிகவும் அவதானாமாக இருக்கவும். இன்று அதிக மென்பொருள்கள் இருக்கிறது இலவசமாக கணனியில் நிறுவி வைத்துவிட்டால் நீங்கள் பயன் படுத்தும் தட்டச்சு சொற்கள், இலக்கங்கள் பதிவு செய்து வைக்கப்படும் அதில் இருந்து உங்கள் இரகசிய இலக்கங்களை கண்டறியலாம்.

"சைபர் கபே" களில் உங்கள் கணக்குகளை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்கவும் ..

இந்த மென்பொருளை "கூகிள்" தேடலில் இலகுவாக பெறலாம் ............

எனக்கு தெரிந்த ஒரு நபர் "சைபர் கபே" களில் இந்த மென்பொருளை நிறுவி வைப்பார் அதன் உரிமையாளர்களுக்கே  தெரியாமல் சில நாட்களுக்கு ஒரு முறை சென்று அங்கு பதிவாகிய கணக்குகளை எடுத்து அதில் விளையாடுவார் இப்படியான மன நிலையிலும் பலர் இருக்கிறார்கள்....

அடுத்தவர்கள் நாட்குறிப்பு ,இரகசியங்கள் படிப்பது,அறிவது சிலருக்கு அலாதி இன்பம்.........

அடுத்தவர்களை குறை சொல்லுவதில் பயன் இல்லை எனவே நாங்கள் அவதானமாக இருப்போம் ...பாதிப்பு எங்களுக்கே!!!!

உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர் உங்களுக்கு இணையம் பற்றி தெரியாத நேரத்தில் கணக்கை ஆரம்பித்து கொடுத்து இருக்கலாம் அதை நான் மேலே கூறியது போன்ற நிகழ்வால் ஒருவர் களவாடி விட்டால் உங்களுக்குள் இருக்கும் அன்பில் விரிசல் ஏற்படலாம் நம்பிக்கை உடையலாம் எனவே அவதானம் நண்பர்களே ............இது என் அனுபவத்தில் சொல்கிறேன்.....

இதில் ஒரு மென்பொருள் எப்படி பயன் படுத்துவது என்பதை இந்த கானொளியில் ....


Sunday, February 12, 2012

SLTJ க்கும் ஹெம்மாத்தகம சட்ட அமுலாக்கள் சங்கத்தினரருக்கும் இடையில் விவாத ஒப்பந்தம் கையெழுத்தானது.






ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் ஹெம்மாதகம சட்ட அமுலாக்கள் சங்கத்திற்கும் இடையில் கடந்த 22.01.2012 (ஞாயிற்றுக் கிழமை) விவாத ஒப்பந்தம் கையெழுத்தானது. அல்ஹம்துலில்லாஹ்.

சுமார் ஏழரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் இவ்விவாத ஒப்பந்தம் போடப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும். 


விவாதத்தின் தலைப்பும், நிலைபாடுகளும்.

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது?

சட்ட அமுலாக்கள் சங்கத்தின் நிலைபாடு.
இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும், இஜ்மாவும், கியாசுமாகும்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு.


“இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் வஹியாகும்”. இவ்வஹி குர்ஆனும், ஆதார புர்வமான நபி வழி மட்டுமே ஆகும். இதைப் பின்பற்றுவது மட்டுமே நேர்வழி. இதுவல்லாத இஜ்மா, கியாஸ், நபித் தோழர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை இஸ்லாத்தின் மூலாதாரமாக ஏற்றுப் பின்பற்றுவது வழிகேடாகும். மேலும் நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ள மத்ஹபுகளிலும், தப்ஸீர்களிலும், சட்ட நூல்களிலும் இஸ்லாத்திற்கு எதிரான சட்டங்களும், அசிங்கங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படுகின்றன. எனவே இவை பின்பற்றத் தகுதியற்றவை. இதுவே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடாகும்.

விவாத நாள்.
ஏப்ரல் 21, மற்றும் 22 ஆகிய நாட்களில் விவாதம் நடை பெரும்.  இன்ஷா அல்லாஹ்.
இவ்விவாத ஒப்பந்தத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக கலந்து கொண்டோர்.
சகோதரர் ரியால் (தலைவர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
சகோதரர் கமர்தீன் (துணைத் தலைவர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
சகோதரர் சாதிக் (ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாக உறுப்பினர்)
சகோதரர் பர்ளீன் M.I.Sc (அழைப்பாளர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
சகோதரர் பர்சான் (ஆசிரியர் – அழைப்பு மாத இதழ்)
சகோதரர் பஸீஹ் M.I.Sc (அழைப்பாளர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
சகோதரர் ஸப்வான் D.I.Sc (அழைப்பாளர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
சகோதரர் ரஸ்மின் M.I.Sc (துணை ஆசிரியர் – அழைப்பு மாத இதழ்)
சகோதரர் ஹிஷாம் M.I.Sc (அழைப்பாளர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)














  குறிப்பு:-
  விவாத ஒப்பந்த வீடியோ விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.