Pages

Sunday, May 8, 2011

பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள்

பின்லேடன் கொலையில் தொடரும் 


சந்தேகங்கள்


E-mailஅச்செடுக்க
ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக சர்வதேச ஆங்கில ஊடகங்களில் ஒரு புகைப்படமும் வெளியானது. அது வெளியாகும்வரை, ஒபாமா அறிவித்த பின்லேடன் மரணச் செய்தியினை அப்படியே உள்வாங்கியிருந்த சர்வதேச சமூகம், அப்புகைப்படம் போலியானது என்பதை வெகு எளிதில் கண்டுகொண்டது. அந்நிமிடத்திலிருந்து பின்லேடன் கொலை குறித்த பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் சர்வதேச சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. அவையாவன:

* அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பின்லேடனின் உடலை அவசரம் அவசரமாக கடலில் வீசி எறியவேண்டிய காரணமென்ன?

* தாக்குதல் நடத்திய வீரர்கள் யார் யார் என்ற விபரம் இதுவரை வெளியிடப்படாதது ஏன்?

* உலகின் மிகப்பெரும் தீவிரவாதி என்று கூறப்படும் ஒரு நபரைத் தாக்கும்போது, தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிர் தாக்குதலில் ஒரு சிறு காயம்கூட ஏற்படாமல் போனது எப்படி?

* சோவியத் ரஷ்யாவையே எதிர்த்து போரிட்டு வெற்றி பெறக்கூடிய அளவிற்குப் படைப் பட்டாளத்தை கொண்டிருந்த ஒருவருக்கு, அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்தும்போது பாதுகாவலுக்கு அவரின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மூன்று நபர்களைத் தவிர வேறு ஆளில்லை என்பதையும் நம்ப முடியவில்லையே?

* பின்லேடன் கொலை செய்யப்பட்டபின் அது குறித்த ஆதாரங்கள் ஏதும் அமெரிக்க அரசின் சார்பில் வெளியிடப்படவில்லையே, ஏன்?

* பின்லேடன் முகத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளதுபோல் ஒரேயொரு புகைப்படம் வெளியிடப்பட்டது. அதுவும் போலியானது என அறியப்பட்ட உடனேயே, பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி உட்பட பிரபல சர்வதேச ஊடகங்களிலிருந்து அவசரம் அவசரமாக அப்படம் நீக்கப்பட்டுள்ளது. இப்போது, "பின்லேடன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியிட முடியாது" என ஒபாமா அறிவித்துள்ளார். காரணம் என்ன?
* பின்லேடன் தங்கியிருந்த படுக்கையறையின் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கட்டில் பக்கத்தில் ரத்தம் உறைந்துள்ள காட்சியினை மட்டும் சுற்றிக் காண்பிக்கப்படுகிறது. அந்த அறையின் ஜன்னல்களிலோ சுவர்களிலோ தாக்குதல் நடந்ததற்கான குண்டுகள் பாய்ந்த எந்த ஒரு அடையாளத்தையும் காணமுடியவில்லை. வெளியிலிருந்து உள்ளேயிருப்பவர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடக்கும்போது, உள்ளேயிருப்பவர் குண்டு தாக்குதலுக்கு இரையானால், அவரின் இரத்தம் ஜன்னல் பக்கத்திலிருந்தே சிதற வேண்டும். ஆனால், அந்த வீடியோவில் கட்டிலின் பக்கத்தில் மட்டும் இரத்தம் உறைந்து கிடப்பது காட்டப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்?

* இரவில் தாக்குதல் நடத்தியது போன்று ஒரு வீடியோ அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்டது. அந்த வீடியோவில் கட்டிடத்தின் பல பகுதிகளிலும் (குண்டுகள் வெடித்ததால் ஏற்படும்) நெருப்பு பிளம்புகள் பற்றி எரிவது போன்று காட்டப்படுகிறது. ஆனால் தாக்குதலுக்குப்பின் கட்டிடத்தின் எந்தப் பகுதியிலும் தாக்குதலாலோ தீயினாலோ ஏற்பட்ட சேதத்தைக் காண முடியவில்லையே? அது எப்படி?
* உலகில் பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்தி வந்ததாக தொடர்ந்து கூறப்பட்டு வந்த அல்காயிதா இயக்கத்தலைவர் பின்லேடன், ஐந்து வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானின் ஒரு முக்கிய நகரில் ஒரே இடத்தில் குடும்பத்தினரோடு தங்கியிருந்திருக்க வாய்ப்பு உண்டா? ஒன்று அவர்மீது இதுவரை கூறப்பட்டு வந்த பயங்கரவாத தாக்குதல் செய்திகள் பொய்யாக இருக்க வேண்டும். அல்லது, இச்செய்தி பொய்யாக இருக்க வேண்டும். இரண்டில் எது உண்மை?

* பின்லேடன் சுடப்படும்போது, நிராயுதபாணியாக இருந்ததாக ஒரு செய்தி கூறுகிறது. இன்னொரு செய்தியோ, ஒரு பெண்ணைக் கேடயமாக பின்லேடன் பயன் படுத்தியதால் அவரை உயிரோடு பிடிக்க முடியாமல், சுட நேர்ந்ததாகக் கூறுகிறது. நிராயுதபாணியாக, பாதுகாப்புக்கு எவரும் இல்லாமல் இருந்த ஒருவரை உயிரோடுப் பிடிக்க முடியாதா?

பின்லேடன் கொல்லப்பட்டதாக மிகுந்த உற்சாகத்துடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தப்பின்னர் வெளியான புகைப்படம் மற்றும் வீடியோக்களிலிருந்தும் அமெரிக்க அதிபரின் முரண்பாடான அறிவிப்புகளிலிருந்தும் இத்தனை சந்தேகங்களும் எழுந்துள்ளன. பின்லேடன் விஷயத்தில் இதற்கு முன்னர் அமெரிக்க சிஐஏ செய்த சில தில்லுமுல்லுகளும் இதற்கு முன்னரே பின்லேடன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் இங்கு நினைவுகூரத் தக்கவை.

இன்று 2011, மே மாதம் பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா உரிமை கோரும் நிலையில், 2003லேயே பின்லேடன் இறந்து விட்டதாக அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பேனசிர் பூட்டோ அதிகாரப்பூர்வமாக அறிவித்த செய்தியினை முதலில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
இரு நாட்டு அதிபர்களின் 8 ஆண்டுகள் இடைவெளியிலான இந்த இரு அறிவிப்புகளில் எந்த அறிவிப்பு உண்மை? எந்த அறிவிப்பு பொய்? இருவரில் யார் பொய்யர்?
பின்லேடனைக் கொலை செய்யும் விஷயத்தில் பொய்யுரைத்து உலக மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் என்ன? உண்மையில் பின்லேடன் கொல்லப்பட்டாரா? இல்லை, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு நல்ல உரமிட்டு வளர்த்துவிட்டதற்குப் பிரதிபலனாக, ஒரு பக்கம் கொல்லப்பட்டதாக மேட்டரை மூடிவிட்டு, மறுபக்கத்தில் பின்லேடன் சுதரந்திரமாக உலவ வழிவகை செய்யப்பட்டுள்ளதா?

ஒரு காலத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக இருந்த ஒருங்கிணைந்த கம்யூனிச சோவியத் ருஷ்யாவை வீழ்த்த, அரபுக் கோடீஸ்வரரும் விடுதலைத் தாகம் கொண்டிருந்தவருமான பின்லேடன், இதே அமெரிக்காவாலேயே ஆயுதமும் பணமும் வாரி இறைத்து வளர்க்கப்பட்டார். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகில் தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற அகந்தையில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த அமெரிக்கா, தான் வளர்த்தெடுத்த பின்லேடனே தனக்கு எதிராகத் தலைவேதனையாக மாறுவார் என கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

அரபுலகின் எண்ணெயின் மீது ஏகாதிபத்தியத்தை நிறுவத் துவங்கிய அமெரிக்காவுக்கு நேரடியாகவே பின்லேடன் மிரட்டல்கள் விடத்துவங்கினார்.

உலகம் முழுவதும் ஆங்காங்கே அமெரிக்கத் தூதரகங்கள் பின்லேடனின் அல்காயிதா இயக்கத்தினரால் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் 2001, செப்.11 இரட்டைக் கோபுர தகர்ப்பு நிகழ்வு நடந்தது.

சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்த அமெரிக்கா, "தீவிரவாதத்துக்கு எதிரான போர்" என்ற அறைகூவலுடன் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த தாலிபான் அரசுக்கு எதிராக போரைத் துவங்கியது - அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஒருதலைபட்சமாக ஆப்கான்மீது அத்துமீறி போர் அறிவித்தார்.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவமே அமெரிக்காவின் உள்நாட்டு தயாரிப்புதான் என்றொரு தர்க்கவாதம் LOOSE CHANGE என்ற டாக்குமெண்டரி மூலமாக இன்று உலகின் எண்ணவோட்டத்தையே மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது கவனிக்கத் தக்க மற்றொரு விஷயம்.
இதற்கிடையில், 2003 ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் பேனசீர் பூட்டோவால் பின்லேடன் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்காவின் வாதத்துக்கு, ஒசாமாவிடமிருந்து அவ்வப்போது வந்ததாகக் கூறப்பட்ட மிரட்டல் வீடியோ டேப்புகள் வலு சேர்த்தன.

ஆனால், அந்த வீடியோக்கள் அமெரிக்க சிஐஏவால் தயாரிக்கப்பட்ட போலி வீடியோ டேப்புகள் என்று நுட்பரீதியாகவும் தர்க்கரீதியாகவும் நிரூபிக்கப்பட்டன.

அமெரிக்க அரசு வெளியிட்ட ஒசாமாவின் பொய் வீடியோக்களில் சில:
பின்லேடன் மிரட்டல் விடுவதாகவும் பின்லேடன் அறிக்கை என்ற பெயரிலும் வீடியோவே வெளியிட்டு உலகை முட்டாளாக்கிய அமெரிக்க சிஐஏவுக்கு, இல்லாத ஒருவரை இருப்பதாகவும் இருப்பவரை இறந்து விட்டவராகவும் ஒரு செட்டப் நாடகத்தை நடத்திக்காட்டுவதும் அதற்கு ஆதாரமாக எல் கே ஜி மாணவனுக்குரிய தகுதிகூட இல்லாத நபர்களை வைத்து, போட்டோஷாப் கைங்கர்யத்தில் போட்டோக்களைத் தயாரித்து உலாவிடுவதும் பின்னர் குட்டு உடைந்தால், உடனேயே அதனை அதிகாரம் பயன்படுத்தி நீக்க வைப்பதும் பெரிய காரியங்களா என்ன?

இதற்கு இந்திய காவல்துறையினரால் அவ்வபோது திறமையான செட்அப்களோடு நடத்தப்படும் போலி என்கவுண்டர் நாடகங்கள் எவ்வளவோ மேல் என கூறத்தோன்றுகிறது!

எது எப்படியோ, இன்றுவரை அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பை அல் காயிதா இயக்கம்தான் நடத்தியது என்பதற்கு ஆதாரமாக ஒரு ஆதாரம்கூட வெளியிடாத அமெரிக்காவின், கோபுர தகர்ப்பில் ஈடுபடுத்தப்பட்ட விமானத்தின் கறுப்புப்பெட்டியினைக் கண்டெடுக்கக்கூட இயலாத அளவு அது அழிந்துவிட்ட நிலையில் அவ்விமானத்தை இயக்கிய விமானியின் எரியாமல் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்தான், இரட்டைக் கோபுர தகர்ப்பில் பின் லேடனின் தொடர்புக்கான ஆதாரம் என்றதை அப்படியே நம்பி இன்று உலகின் அனைத்து தரப்பினரும் உள்வாங்கிவிட்டதைப் போன்று, போலி போட்டோஷாப் புகைப்படத்தை நோக்கி இன்று கேள்விகள் எழுந்தாலும் நாளை இது மறக்கடிக்கப்பட்டு, பின்லேடனை ஒபாமாதான் கொன்றார் என்று வரலாற்றில் குறிக்கப்படும்!

அதுதான் அமெரிக்காவில் சரிந்து வரும் ஒபாமாவின் பிம்பத்தை அடுத்த தேர்தலில் தூக்கி நிறுத்துவதற்கான ஒபாமாவின் உடனடித் தேவை! அதற்கு ஆதரவாக உலகளாவிய சாட்சியங்களும் தேவை - மௌன சாட்சியங்கள்!

ஆனால், அபோதாபாத்வாசிகளின் கூற்று என்னவெனில்,

"இங்கு ஒஸாமாவும் வசிக்கவில்லை; குஸாமாவும் வசிக்கவில்லை. எல்லாம் அமெரிக்கா நடத்தும் நாடகம்!"

“தஜ்ஜால் பற்றிய செய்திக்கு ஷரிஅத்தில் அந்தஸ்து எதுவுமில்லை”

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
“தஜ்ஜால் பற்றிய செய்திக்கு ஷரிஅத்தில் அந்தஸ்து எதுவுமில்லை”
நபிகளாரை பொய்யனாக்கும் ஜமாஅதே இஸ்லாமியின் ஸ்தாபகா் மவ்தூதி

இன்று சா்வதேச  ரீதியாக இஸ்லாத்தையும் அதன் இறுதித் தூதா் நபிகள் நாயகம் (ஸல்) அவா்களையும் இம்சிக்கும் ஈனத்தனமான போக்குகளும், இஸ்லாத்தின் உயா்வுக்கும் நபிகளாரின் மாண்புக்கும் சேறுபுச முனையும் மிலேச்சத்தனமான திரைமறைவு திட்டங்களும் வெகுவாக அதிகரித்து வருவதனை பரவலாக காணமுடிகிறது. இஸ்லாத்தை தீவிரவாதமாக சித்தரிக்க முனைவதும், நபிகளாரை பயங்கரவாதியாக உருமாற்றி கேலிச்சித்திரம் வரைவதும் இக்குள்ள நரித்திட்டத்தின் வெளிப்பாடுகளே!
இஸ்லாத்தின் எதிரிகள் தான் இக்கைங்கரியத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், இஸ்லாமியப் போர்வைக்குள் பதுங்கியிருக்கும் சில பெயர்தாங்கி முஸ்லிம்களும் இத்தீமைக்கு துணைபோவது தான் விசித்திரமாய் இருக்கிறது. இஸ்லாத்தை துவம்சம் செய்வதனையே குறியாய் கொண்டியங்கும் ஓரு வழிகெட்டப் பிரிவினரே ஷீயாக்கள் என்போர். இறுதித் தூதராய் இருப்பதற்கு மிகவும் தகுதிவாய்ந்தவார் அலீ (ரலி) அவர்கள் தான். இந்த முஹம்மது அலிக்குறிய நபித்துவத்தை ஏமாற்றி தன்வசப்படுத்தினார் என்று வீண்பழிகளையும் விமர்சனங்களையும் அள்ளி வீசி அண்ணலாரின் அந்தஸ்தை அசிங்கப்படுத்த எத்தனிக்கும் எட்டப்பர்களே இந்த ஷீயாக்கள்.
நபிகளாரையும் அவரின் அன்புத் துணைவியர்களான ஆயிஷா (ரலி), ஹப்ஸா (ரலி) உள்ளிட்ட மனைவியர்களையும் அவதூருகளால் அவமானப்படுத்த முனையும் அரக்கர்களே இந்த ஷீயாக்கள். நாணயமிக்க நபிகளாரையும், களங்கமற்ற கற்புக்கரசிகளான நபித் துணைவியர்களையும் தூற்றிவிட்டால் இஸ்லாத்தின் கீர்த்தியை சிதைத்து விடலாம் என்பதே இஷ்ஷீயாக்களின் அந்தரங்க எண்ணம்.
இத்தரங்கெட்ட ஷீயாக்களின் விஷக்கருத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்ட அடிவருடிகளின் சிந்தனைகளிலும் நபிகளாரை தரக்குறைவாக கருதவைக்கும் நச்சுச் சிந்தனைகள் ஊற்றெடுத்து பிரவாகிப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஆம்! இஸ்லாமிய ஆட்சியை  நிறுவப்போகிறோம்! வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இஸ்லாமிய மயப்படுத்தப் போகிறோம்! புத்திஜீவித்துவ சமூகமொன்றை உருவாக்கப்போகிறோம்! மார்க்கத்தை கல்லாமையே முதன்மைப் பாவம்! என்ற கோஷங்களை ஏந்திப் பிடித்து சமூகத்தை வழிநடாத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்ட அமைப்பே  ஜமாஅதே இஸ்லாமி.
இதன் ஸ்தாபகத் தலைவரே மௌலானா ஸெய்யித் அபுல் அஃலா மவ்தூதி என்பவராவார். இஸ்லாமிய ஜமாஅத் எனும் போர்வைக்குள் பதுங்கி, நபிகளாரை கொச்சைப்படுத்தும் ஷீயாயிஸ சிந்தனைகளை இச்சமுதாயத்தில் ஆழமாக விதைத்தவர்களுள் இவருக்கு தனியிடமுண்டு என்றால் மிகையாக மாட்டாது. காதியானிகளை எதிர்த்து தூக்கு மேடை ஏறியவரால் ஷீயாயிஸத்தை கண்டித்து ஓர் ஆக்கம் கூட எழுத திராணியற்றுப் போனமை ஒருபக்கமிருக்க, ஷீயாப் புரட்சியை இஸ்லாமிய புரட்சியாக வியாக்கியானப்படுத்தியமையே இவரின் ஷீயாயிஸ முகத்தை புரிந்து கொள்ளப் போதுமான சான்றாகும்.
இவரிடம் ஏராளமான கொள்கைக் கோமாளித்தனங்களும் மார்க்கமறியா பாமரத்தன்மையும் வெளிப்பட்ட போதிலும், அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போல் அமைவது நபிகளாரை நையாண்டி பண்ணும் விதமாய் இவரிடம் வெளிப்பட்டதஜ்ஜாலின் வருகையை மறுக்கும் மடைமைத்தனமாகும்.
இஸ்லாத்தின் பாலகன் முதல் படிப்பறிவற்ற பொது மகன் வரை அனைவராலும் அறியப்பட்ட நம்பிக்கை சார்ந்த அடிப்படை அம்சங்களில் ஒன்றேமறுமையின் அடையாளமாய் நபிகளாரால் முன்னறிவிப்புப் செய்யப்பட்ட தஜ்ஜாலின் வருகையும், ஈஸா (அலை) அவர்களின் கரத்தினால் அவன் வெட்டுண்டு மடிவதுமாகும்’. இறைவனால் அனுப்பப்பட்ட அத்துனை இறைதூதர்களினாலும் உறுதியாய் எதிர்பார்க்கப்பட்டு, தம் சமுதாயத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதி பிரதான செய்திகளில் தஜ்ஜாலின் வருகை குறித்த செய்தியும் ஒன்றாகும்.
நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப்பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி - 3057, 3337)
தஜ்ஜாலின் வருகையை அத்துனை நபிமார்களும் எதிர்பார்த்தே இருந்தனர் என்று கூறும் நபியவர்கள், தன் சமுதாயத்துக்கு ஏற்படும் பெரும் ஈமானியச் சோதனையாக தஜ்ஜாலின் வருகையை ஐயம்திரிபற அழுத்தமாய் அடையாளப்படுத்திக் காட்டுகிறார்கள்.
தொழுகையில் அத்தஹியாத்தின் இறுதியில் நான்கு விஷயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள். அதில் ஒன்றாக தஜ்ஜாலின் சோதனையை விட்டும் இறiவா உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்பதும் ஒன்றாகும். (புகாரி - 833, 1377, 6368, 6375, 6376)
உலக அழிவின் பெரும் பத்து அடையாளங்களுள் ஒன்றாக நபிகளாரால் பெரிதும் அழுத்திச் சொல்லப்பட்ட தஜ்ஜாலின் வருகையை ஜமாஅதே இஸ்லாமியினரால் இமாம் மவ்தூதி என்றும், நவீனகால இஸ்லாமிய சிந்தனையின் முன்னோடி என்றும் ஏற்றிப் போற்றப்படும் அபுல் அஃலா மவ்தூதி தெளிவாக மறுத்துரைப்பதன் மூலம் மார்க்கம் குறித்த தன் அறியாமையை வௌ்ளிடை மலையாய் வெளிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த நபிமார்களும் யாரை தன் உம்மத்துக்கு எச்சரிக்கை செய்தார்களோ அந்த செய்தியையே மறுப்பதன் மூலம் ஒட்டு மொத்த நபிமார்களின் நம்பிக்கையையும் குறைகாண முற்பட்டுள்ளார் அறிஞர் (?) மவ்தூதி. இஸ்லாத்தை விட இயக்க வெறித்தனம் உள்ளத்தை ஆட்கொண்டதாலும், நபிகள் (ஸல்) அவர்களை பின்பற்றுவதை விட தம் இயக்கத் தலைவர்களை கண்மூடிப்பின்பற்றும் தக்லீது கலாச்சாரம் கண்களை மறைத்ததாலும், நபிகளாரையே பொய்யனாக்க முயலும் மவ்தூதியின் உளரல்கள் ஜமாஅதே இஸ்லாமியினரின் அறிவுக்கண்களுக்கு ஆய்வுக்கட்டுரையாக தென்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடே மவ்தூதியின் விஷக்கருத்துக்களை வேதவாக்காக ஏற்று தங்கள் இயக்கப்பத்திரிகை சமரசத்தில் அப்படியே வாந்தியெடுத்திருப்பதாகும். இதோ! குப்ரியத்தின் வாடை வீசும் ஜமாஅதே இஸ்லாமியின் ஸ்தாபகாரின் தஜ்ஜாலை மறுக்கும் வார்த்தைகள்:
தஜ்ஜால் பற்றிய செய்திக்கு ஷரிஅத்தின் அந்தஸ்து எதுவுமில்லை. அவனைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இது தொடர்பாக நபி மொழிகளில் கூறப்பட்டுள்ள பல்வேறுபட்ட செய்திகள் நபியவர்களின் எண்ணங்கள் ஆகும். அதனைக் குறித்து நபியவர்களே சந்தேகத்தில் இருந்தார்கள். சில போது தஜ்ஜால் குராசானில் தோன்றுவான் என்று கூறுவார்கள், வேறு சமயம் இஸ்பஹானிலிருந்து இன்னொரு சமயம் ஷாம் மற்றும் ஈராக்கின் மத்திய பகுதியில் இருந்து தோன்றுவான் எனக் கூறுவார்கள். ஒரு முறை ஹிஜ்ரி இரண்டு அல்லது மூன்றில் பிறந்த இப்னு ஸியாத் என்ற யுதச் சிறுவன் தான் தஜ்ஜால் என்று எண்ணிக் கொண்டார்கள். இன்னொரு அறிவிப்பில் ஹிஜ்ரி ஒன்பதில் பலஸ்தீனைச் சேர்ந்த தமீமுத் தாரி என்கிற கிறிஸ்தவத் துறவி இஸ்லாமை ஏற்றுக் கொண்டு நபியவர்களிடம் வந்து: ஒரு முறை அவர் கடலில் பயணம் செய்ததாகவும்,(பெரும்பாலும் ரோமக் கடல் அல்லது அரபிக் கடல்) மக்கள் வசிக்காத ஒரு தீவை அடைந்ததாகவும், அங்கு ஒரு விநோதமான மனிதனுடன் சந்திப்பு ஏற்பட்டதாகவும், அம்மனிதர் தன்னை தஜ்ஜால் என்று கூறிக்கொண்டதாகவும் ஒரு சம்பவத்தைக் கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் அச்செய்தியை தவறான நம்பிக்கை எனக்கூறுவதற்கு காரணம் எதுவுமில்லை என நினைத்தார்கள். எனினும் அது பற்றி சந்தேகத்தை தெரிவித்து விட்டார்கள். ஆனால், நான் அவன் கிழக்கிலிருந்து தோன்றுவான் என்று கருதுகிறேன் என்றார்கள். நபியவர்கள் வஹியின் இல்ம் காரணமாக இவற்றைக் கூறவில்லை. மாறாக சந்தேகத்தின் பேரிலேயே கூறினார்கள் என்பது முதல் கருத்தில் தானாகவே தெரிகிறது.
தமீம் தாரி அவர்கள் கூறிய சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் சரியானது என நினைத்தார்கள். எனினும், பதின் மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தமீம் தாரி அத்தீவில் பார்த்த நபர் வெளிப்பட வில்லை. அவ்வாறிருக்க அம்மனிதர் தன்னைத் தஜ்ஜால் என்று தமீம் தாரி அவர்களிடம் கூறியது உண்மையல்ல என்பதற்கு இதுவே போதுமானதாக இல்லையா?
நபி (ஸல்) அவர்களுக்கு தஜ்ஜால் தம்முடைய காலத்திலேயே தோன்றுவான் அல்லது தமக்குப் பிறகு வெகு விரைவில் தோன்றுவான் என்கிற எண்ணம் இருந்தது. பதின் மூன்றரை நூற்றாண்டு வரலாறு நபியவர்கள் நினைத்தது சரியல்ல என்பதை உறுதிப்படுத்த வில்லையா?
(தர்ஜூமானுல் குர்ஆன், பெப்ரவரி - 1946) - (சமரசம் : மார்ச், ஏப்ரல் 1 - 15 -2011)
அன்பின் இஸ்லாமிய நண்பர்களே! ஜமாஅதே இஸ்லாமி மீது ஆய்வறிவின்றி ஆழ்ந்த பக்தி வைத்திருக்கும் ஜமாஅத்தின் முஅய்யித், முஸாயித், முன்தஸிப் ஊழியர்களே! நடுநிலைவாதிகளே! எங்கள் இமாமை மதிக்கின்றோம் என்றபெயரில் நபிகளாரை மிதிக்கும் கயமைத் தனத்தை இதன் பிறகும் செய்யலாமா? இஸ்லாம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை எமக்கு எம் ஜமாஅத் தான் முக்கியம் என்று வாழப் போகிறீர்களா? நிதானமாய் சிந்தியுங்கள்! வாழ்வில் சீர் பெறுங்கள்! சத்தியத்தை சான்றுகளுடன் யார் சொல்கிறார்களோ அவர்களோடு கைகோர்ப்போம்! அசத்தியத்திற்கு ஜால்ரா போடும் வேஷதாரிகளை உலகுக்கு அடையாளப்படுத்துவோம்!