Pages

Friday, May 20, 2011

யார் இந்த யஹ்யா சில்மி

 யார் இந்த யஹ்யா சில்மி
இலங்கை யஹ்யா சில்மி என்பவர் குறித்து பலரும் அடிக்கடி கேள்வி கேட்டு வருகின்றனர்.

அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த சகோதரர் அல்தாஃப் இது குறித்து எழுதியதை பதிலாகத்
தருகிறோம் :

அஸ்ஸலாமு அழைக்கும் இலங்கையில் ஒரே ஜமாஅத் ஆக இருந்த தவ்ஹீத் குரான் மற்றும் சுன்னாஹ் இதுவே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்ற அடிப்படையில் செயல்பட்டு வந்தது. இலங்கையில் உள்ள ஆரம்ப தவ்ஹீத் வாதிகளைக் குறைவாக மதிப்பிட்டு எழுதும் நோக்கம் எனக்கில்லை. சில உண்மைகளை மக்ககளுக்கு முன் வைக்க வேண்டும் என்பதற்காக உண்மையாய் உள்ளதை உள்ளப்படி சொல்ல வேண்டும் என்பதற்காக எடுத்து வைக்கிறேன்.

சகோதரர் P.J பற்றி புகழ்ந்து எழுதும் போது அதை அவர் வெளிடுவதில்லை .அதை நான் நன்றாக அறிய முடிகிறது .என்னுடைய அந்த வகையில் எழுதிய எதுவும் உங்கள் கருத்து பகுதியில் வெளிடப்படவில்லை. அது மாதுரி இங்கயும் உங்களை புகழ்வதாக நினைத்துக் கொண்டு இதனை வெளி இடுவதில் எந்த தடங்களும் வந்து விடக் கூடாது என்பதற்காக எத்தனையோ செய்திகளை நான் தவிர்த்தே எழுதுகிறேன்.

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. இங்கே நான் குறிப்பிட இருப்பது இலங்கை தவ்ஹீத் வரலாற்றில் ஏற்பட்ட இன்னுமொரு குழப்பம் . குரான் மற்றும் சுன்னாஹ் என்ற இரண்டு மட்டும் தான் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்று உறுதியான கொள்கையில் இருந்த இலங்கை தவ்ஹீத் மக்களை குழப்பியடித்தது 1998 மற்றும் 1999 ம ஆண்டுகள் இந்த காலப்பகுதியில் தான் மன்ஹஜுஸ் ஸளஃப் என்ற புதிய கொள்கை ஏற்கனவே மறைந்து இருந்தாலும் விஸ்வரூபம் எடுத்தது அந்தக் காலப்பகுதில் தான் .மன்ஹஜுஸ் ஸளஃப் என்ற ஜமாத்தே உருவாகியது p.j குரான் சுன்னாவுக்கு எந்த அளவுக்குப் பிரச்சாரம் செய்தாரோ அதே வேகத்தில் இந்த மன்ஹஜை பிரச்சாரம் செய்ய புறப்பட்டார் இதன் தலைவர். இவருக்கு நல்ல அறிவு மற்றும் திறமை இருந்தது.

இளையர்களை இலகுவாகக் கவர்ந்தெடுத்தார் .எல்லாத்திற்கும் மேலாக தன்னை ஷேக் அல்பானி அவர்களின் மாணவன் என்று இலங்கையில் அறிமுகப்படுத்தினார். போகுமிடமெல்லாம் இவருக்கு அல்பானியின் மாணவன் என்பதனால் மிகுந்த அந்தஸ்து இலங்கையில் உள்ள உலமாக்களில் சிலர் அல்ல பலர் இவரை மாபெரும் இளம் அறிஞராகவே பார்த்தார்கள் .ஒரு சிலர் இவரிடம் ஹதீஸ் கலையை படிக்கவும் புறப்பட்டனர்.

ஏன் இவரது இலங்கையில் நடந்த ஆரம்ப பயான் கூட அரபியில் தான் நடந்தது .இன்னுமொருவர் தமிழில் மொழிபெயர்த்து தான் சொன்னார்.

இப்படி இவரை இந்த இலங்கை மண்ணில் வளர்த்து விட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்த தவ்ஹீத் ஆலிம்கள் தான்.

அந்த ஸளஃப் மன்ஹஜுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமில்லை; இலங்கையில் பெயரும் புகழும் பெற்ற டாக்டர் நுபார் ஃபாரூக்கின் மகன் அபூ அப்திர்ரஹ்மான் யஹ்யா சில்மி பின் நுபார் அச்சலபி அச்சைலாணி ......................etc இப்படியே இவரின் பெயர் நீண்டுக்கிட்டே போகிறது. எனக்கு இவ்வளவு தான் உச்சரிப்புடன் சொல்ல முடிகிறது அடுத்து வரிகளும் தெரிந்திருந்தாலும் கூட உச்சரிப்பு பிழையாகி விடும் என்பதால் தவிர்த்துள்ளேன்.

இவரின் கொள்கை குரான் சுன்னாஹ்வை சஹாபாக்கள் எப்படி விளங்கி இருந்தார்களோ அதற்குப் பின்னால் வந்த இமாம்கள் எப்படி விளங்கி இருந்தார்களோ அதே தொடரில் தான் நாங்களும் குரான் சுன்னாஹ்வை விளங்க வேண்டும்; அப்படி விளங்கவில்லை என்றால் அவர்கள் வழிகேடர்கள்.
அந்தப் பட்டியலில் அவர் கூறிய முதல் வழிகேடர் P.J இப்படி கூறிய உடன் தவ்ஹீத் மக்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. இதைப் பயன்படுத்தி பல நிகழ்ச்சிகளை நடத்தினார். மக்கள் கூட்டத்தையும் சேர்க்கத் தொடங்கினார்.

மக்களும் சார சாரையாக அவரது நிகழ்ச்சிகளுக்குப் போகத் தொடங்கினர். அவரது எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒரே முழக்கம் P.J வழிக்கேடர், முஃதஸிலா, கவாரிஜ். என்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், இத்தனைக்கும் இவருக்கு அரபு மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும் P.J இன் பயான் மற்றும் புத்தகங்கள் எல்லாமே தமிழில் தான் இருக்கின்றது இவருக்கோ தமிழ் தெரியாது அப்படி இருக்க இவர் P.J  இன் எந்த புத்தகத்தையும் வாசித்திருக்க முடியாது பயானும் தமிழில் உள்ளது. அதையும் சரியாக அவரால் விளங்கி இருக்க முடியாது.

அப்படி இருக்க இவர் எப்படி  P.J  கவாரிஜ் , முஃதஸிலா , என்று உறுதியாகச் சொல்கிறார் என்று சிந்தித்த போது தான் இவருக்கு சிலரால் அதாவது இலங்கையிலும் மற்றும் தமிழ் நாட்டு உலமாக்களால் இவைகள் புகுத்தப்பட்டிருப்பது எங்களுக்குத் தெரிய வருகிறது. 
இதையும் நான் ஆதாரம் இல்லாமல் குறிப்பிடவில்லை. அந்தக் கால பகுதியில் இவர் ஜாக் தலைவர் S. கமாலுதீன் மதனியுடன்  தொலைபேசியில் பல தடவைகள் பேசியுள்ளார். 
நான் அவருடன் கூட அமர்ந்து இருக்கும் பொது இவர் S.K உடன் தொலைபேசியில் பேசும் பொது இவருக்கு S.K கூறினாராம்; இன்னும் கொஞ்ச நாள் போனால் P.J தான் ஒரு நபி என்று வாதாடுவார் என்று. 

இதை யஹ்யா சில்மி மறுத்தால் நான் அவரை நேரடியாக விவாதத்திற்கு அழைத்து நிரூபிப்பேன் இன்ஷா அல்லாஹ். P.J பற்றி இலங்கையில் பேசுவதற்கு எல்லோரும் தயங்கினர். ஏனென்றால் பேசிவிட்டு சும்மா இருந்துவிட முடியாது. ஒன்று மக்கள் கேள்வி கேட்டு துவைத்தெடுப்பார்கள். அது மாத்திரமில்லை P.J க்கும் முகம் கொடுக்க நேரிடும். இருக்கும் இமேஜைக் கெடுத்துவிட முடியாது என்பதனால் அவர்களின் ஸளஃப் கொள்கைகளை மறைத்து மக்களோடு விளையாடினார்கள். 

அந்த நேரத்தில் இவர்களுக்குக் கிடைத்த மாபெரும் சக்தி தான் இந்த இளம் அறிஞர் யஹ்யா சில்மி. இவருக்கு இதுவெல்லாம் தெரியாது இவரோ இங்கு வந்த உடன் இவரை பெரிய ஆலிமாக எல்லோரும் கருதி இவரிடம் பத்வா கேட்க சிலர் புறப்பட்டதை பார்த்து P.J யும் இப்படி தான் இருப்பார் என்ற யூகத்தில் இவர் P.J அவர்களை கடுமையாக எதிர்க்கலானார். 

இந்த நேரத்தில் தான் முன்பை விட மக்கள் கூட்டம் இவரின் பயான்களில் அதிகமானார்கள் இவர் சொல்வது உண்மை தானா P.J கவாரிஜா , முஹ்தசிலாவா, என்ற கேள்வி சிலர் மனதைக் கெடுத்தது, இவரின் பயானுக்கு வந்த கூட்டத்தை விட பல நூறு மடங்கு கூட்டம் இவரை எதிர்க்கலானது, இவரின் பயான்களில் மக்கள் எழுந்து கேள்வி கேட்கும் நிலை உருவானது. தடுமாற்றத்தில் திணறினார் இந்த மாமேதை. 

இவரின் உளறல்கள் இவரின் அறியாமையை மக்களுக்கு அம்பலப்படுத்தியே ஆக வேண்டும் என்பதற்காக இவரைப் பற்றி P.J இடம் கூறினோம். இவருக்கு இலங்கையில் உள்ள பல உலமாக்கள் பெரிய ஆலிம் என்ற நற்சான்றை வழங்கி விட்டனர்.இவரும் தன்னை ஷேக் அல்பானி அவர்களின் மாணவன் என்று பிரச்சாரம் செய்து உங்களை மிகவும் தரக் குறைவாக விமர்சிக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக குரான் சுன்னாஹ்வைப் பின்பற்றுகிற தவ்ஹீத் வாதிகளை வழிகேடர்கள் என்கிறார். 

இதைத் தட்டிக் கேட்க யாரும் முன் வரவில்ல்லை இலங்கையில் உள்ள எந்த ஆலிமும் முன் வரவில்லை குரான் சுன்னாஹ்வைப் பின்பற்றுகிறவர்களை வழிகேடர்கள் என்று பகிரங்கப் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்ட பின்பும் இலங்கையில் உள்ள எந்த ஆலிமுக்கும் ரோசம் வரவே இல்லை என்று இவரைப் பற்றி P.j இடம் கூறினோம். 

அந்த நேரத்தில் தான் நிலைமையைக் கவனித்த P.J அவர்கள் அவருக்கு பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுங்கள் என்று எங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். நாங்கள் அவரை அவரது இடத்துக்கே சென்று இந்த விவாத அழைப்பை விடுத்தோம் அவரும் ஒப்புக் கொண்டார். 

இத்தறுவாயில் 2001 ஆண்டு PJ ஹாமித் பக்ரி ஆகியோர் இலங்கைக்கு பறேலவிகளுடன் மாபெரும் விவாதம் ஒன்றிற்காக வந்திருந்தனர். அந்த விவாதம் தவ்ஹீதுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தந்தது அல்ஹம்து லில்லாஹ். 

அந்த விவாதத்தின் பின் கொழும்பில் நியாஸ் ஹாஜியாரின் வீட்டில் PJ தங்கி இருந்தார். அந்த சமயம் பார்த்து ஷேக் யஹ்யா சில்மி அனுமதி இல்லாமல் PJ தங்கி இருந்த அறைக்குள் நுழைந்து யார் PJ ? யார் PJ ? என்று கேட்டார். 

அப்போது உடன் இருந்த அப்துல் வதூத் மௌலவி அவர்கள் நட்பு முறையில் சந்திக்கும் வகையில் நீங்கள் நடக்கவில்லை; எனவே PJயை விவாதத்தில் சந்தியுங்கள் என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். அப்போது அவர் அரபியில் எழுதிய கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டு சென்றார் என்று நினைக்கிறேன். 

இந்த யஹ்யா சில்மி யை PJ அன்று தான் நேரடியாக பார்க்கிறார் அந்த நாள் பகல் நேரம் நான் PJ அவர்களை நியாஸ் ஹாஜியார் வீட்டில் சந்தித்து இந்த யஹ்யா சில்மி யார் ? இவரின் கொள்கை பற்றி எல்லாம் நேரடியாகச் சந்தித்து விளக்கினேன். 

அந்த தினம் PJ அவர்கள் விடியக்காலையிலேயே சென்னைக்கு புறப்படவிருந்தார். ஆனால் அன்று காலை விடுதலைப் புலிகள் கொழும்பு விமான நிலையத்தில் புகுந்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தினர். அதனால் PJயின் பயணம் நின்றுச் விட்டது. சுமார் இரு மனித்தியலத்திட்கு மேல் யஹ்யா சில்மி செய்த அத்துணை குழப்பங்களையும் விவரித்தேன். 

PJ அவருக்கு விவாதத்திற்கு அழுத்தம் கொடுக்க சொன்னார். அதன் பின் நாங்கள் PJ சார்பாக அவரைக் காணும் இடமெல்லாம் விவாதத்திற்கு அழைத்தோம். அவருக்கு PJ கைப்பட எழுதிய விவாத அழைப்பை ஈமெயில் மூலம் மற்றும் நேரடியாகவும் கொடுத்தோம். இப்படி பல கடித தொடர்புகள் விவாதம் சம்மந்தமாக PJ க்கும் யஹ்யா ஸில்மிக்குமிடைஇல் நடந்தது என்ன செய்வது தெரியாமல் யஹ்யா சில்மி தடுமாறினார். 

விவாதத்தை விட்டு விலகி ஓட்டமெடுத்தார். அண்ணன் விடவில்லை மீண்டும் மீண்டும் கடிதங்களை அனுப்பி அவரை நிழலுடன் யுத்தம் புரியும் யஹ்யா சில்மியை நிஜத்துடன் யுத்தம் புரிய வரும்படி அழைத்துக் கொண்டே இருந்தார். 

தப்பிக்க முடியாத மாமேதை யஹ்யா சில்மி புதிய யுக்தியைக் கையாண்டார் விவாதம் என்பது இஸ்லாத்தில் கிடையாது அது வழிகேடு பித்அத் என்று கூறி ஓடி ஒழிய பார்த்தார். 

மக்கள் விடவில்லை. அழுத்தத்துக்கு மேல் அழுத்தம் அவரும் ஓடும் ஓட்டத்திலிருந்து நிற்பதாக தெரியவில்லை. இறுதியில் அவர் நடத்திய கூட்டம் PJ இன் தர்ஜுமா விமர்சனம். இது இலங்கையில் நடந்த இரண்டாவதும் இறுதியுமான தர்ஜுமா விமர்சனம். இந்த நேரத்தில் தான் அவருக்கு சாவு மணி அடிக்கப்பட்ட நேரம் பெரும் திரளான மக்கள் கூடி இருந்த அந்த கூட்டத்தில் நாங்கள் எழுந்து நின்று இவரின் முகத்திரையைக் கிழிக்கத்த் தொடங்கினோம் இவருக்கும் PJ க்கும் இடையில் நடந்த அனைத்து விடயங்கள் தொடர்பாக மக்கள் முன் எடுத்து வைத்தேன். 

அவர் மறுத்ததை அவர் வாயால் ஒப்புக் கொள்ள வைத்தோம். அங்கு வந்தவர்களில் பாதிப்பேர் உடனே எழுந்து அவருக்கு சலாம் கூறி வெளிநடப்பு செய்தனர். இதற்குப் பின்னால் இவருடைய விவாதம் தொடர்பான கருத்துக்களை மக்கள் முன் எடுத்து வைத்தோம். 

ஏற்கனவே இவர் தப்லிக் ஜமாத்துடைய மௌலவிகளுடன் தனி அறையில் விவாதம் நடத்தியுள்ளார் ,ஜமாத்துல் முஸ்லிமினுடன் கலந்துரையாடல் என்கிற பெயரில் காரசாரமான விவாதம் நடத்தியுள்ளார். ஏன் சர்வதேச பிறை தான் சரி அதற்காக யாருடனும் விவாதிக்க தயார் என்று பகிரங்க அழைப்பு விட்டார், இதற்கும் PJ உடன் தொடர்பு கொண்டு விவாதிப்பதற்காக நேரம் ஒதுக்கி கேட்டோம் அண்ணனும் ஒருமாதம் முழுவதுமாக நேரம் ஒதுக்கி கொடுத்தார்.

அதற்கான கடிதம் ஃபாக்ஸ் fax மூலம் சகோதரர் காலித் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. இவர் கொழும்பு தெஹிவளையைச் சேர்ந்தவர். அந்த ஃபாக்ஸ் ஐ யஹ்யா சில்மி இடம் நான் நேரடியாக கொடுத்தேன். அதற்கும் அவர் முன் வராமல் பின்வாங்கி ஓட்டமெடுத்தார். 

அது சம்மந்தமாக சுமார் மூன்று மணித் தியாலங்களுக்கு மேல் பேசப்பட்டு பதிவு செய்த ரெகார்டிங்கை அவர் வேன்றுமென்றே அழித்து அந்த கேசட்டை நாசமாக்கினார். அந்த கேசட் வெளி வந்திருந்தால் இந்த யஹ்யா சில்மி யார் என்பதை மக்கள் அறிந்திருப்பர். 

இவருக்கு யார் யாரெல்லாம் PJ எதிர்க்கச் சொன்னது இவரின் உண்மையான முகம் என்ன அத்துனையும் அந்த கேசட்டில் பதிவானது இந்த கேசட் வெளி வந்தால் தன்னுடைய எதிர்கால தஹ்வா  முற்றாக இஸ்தம்பித்து விடும் என்பதை அறிந்து அதை அழித்து விட்டார். 

இந்தக் கலந்துரையாடலில் என்னோடு கலந்துக்கொண்டவர்களில் என்னுடைய சகோதரர் அஸ்வான் , மற்றும் சகோதரர் அஜீத் இவர் தற்போது லண்டனில் உள்ளார். அவர்கள் சார்பாக யஹ்யா சில்மி மற்றும் பன்னிரண்டு பெயர்கள் கலந்து கொண்டனர் . 

இந்த கேசட்டை அவர் அழித்ததை தர்ஜுமா விமர்சன கூட்டத்தில் அவரே ஒப்புக் கொண்டார் இதற்கு அங்கு வந்த அத்துணை பெரும் சாஹீதுகள் . இதன் பின்னால் PJ இன் சஹாபாக்களை பின்பற்றலாமா? என்ற கேசட் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது .

சலபிச மன்ஹஜுகள் ஒடுக்கப்பட்டன. யஹ்யா சில்மிகள் தவ்ஹீத் வாதிகளால் ஒதுக்கப்பட்டனர். இவரின் அறியாமையை PJயின் கடிதங்கள் தோலுரித்து அவரின் முகத்திரையை கிழித்தன. இன்று அவரின் தாவா களம் பத்து ஆண்டுகளைத் தாண்டி நிற்கிறது. 

ஐம்பதுக்கும் குறைவானவர்களே இவரின் கோரப்பிடியில் சிக்கினர். அசத்தியத்திலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டனர். இது வரலாற்றின் சுருக்கமே, இன்று இந்த யஹ்யாசில்மி தூர எறியப்பட்டுள்ளார். இவரை சுற்றி தமிழ் அறவே தெரியாத ஆங்கிலம் பேசக் கூடியவர்கள் அவர் சொல்வது மாத்திரம் தான் மார்க்கம் என்று நம்பி இருக்கின்றனர் இலங்கையைச் சேர்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் குறிப்பாக கொழும்பில் இவருக்கு கூட்டம் போட்டால் முப்பது பெயரை தாண்டுவதில்லை. 

இந்த அளவுக்கு PJ இன் விவாத அழைப்பு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இவரை பின்னால் இருந்து இயக்கியவர்களுக்கு அல்லாஹ் சூழ்ச்சிகாரனுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் என்பதை புரிய வைத்துள்ளான் .எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே 

பகிரங்க விவாதத்துக்கு அழைத்தும் புரமுதுகோடிய சில்மியஹ்யா

சுன்னத் ஜமாஅத்தா தர்கா ஜமாஅத்தா?

சுன்னத் ஜமாஅத்தா தர்கா ஜமாஅத்தா?

சுன்னத் வ‌ல் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை!






சுன்னத் வல் ஜமாஅத்தினரே இது சுன்னத்தா?ஷிர்க்கா?

சகோதரர்களே! சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.


சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம்:
 

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

இங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று கவனிக்கவும்.
  •  அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தும், 
  • அல்லாஹ்வுடைய தூதரது வழிமுறை மற்றும் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்படிய வேண்டும் என்பதும் பொருளாகும். 
மேற்கண்ட இரண்டிற்கும் கட்டுப்படும்போது ஒரு முஸ்லிம் தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறான். இந்த இரண்டில் ஒன்றை நிராகரிக்கும் போது முஷ்ரிக்காகவோ, முனாஃபிக்காகவோ மாறிவிடுகிறான்!(அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)

அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்


அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள் என்று அருள்மறையில் அல்லாஹ் கூறுகிறான். நாம் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அல்லாஹ்வை மட்டும் வணங்குகிறோம். இங்கு அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகிறோம்!

நபிமார்களுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்


எந்த நபிமாரும் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் கையேந்திப் பிரார்த்தித்ததில்லை! தங்களின் குழந்தைகளுக்கும், தங்களுக்கும்  மரண நேரம் நெருங்கிய போது கூட அல்லாஹ்விடமே அழுது பிரார்த்தித்தார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைக் கூட யாரும் வணங்கக்கூடாது என்று கட்டளையுடன் கூடிய அறிவுரையை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள். 

இந்த நபிமார்களின் அறிவுரையை நாம் கேட்கும்போது அதன்படி அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்கமாட்டோம். மேலும் அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியில் அல்லாஹ்வைப் பிரார்த்தித்து முற்றிலும் தூதர்களின் வழியில் நடப்போம். இதை "சுன்னத் ஜமாஅத்" என்று கூறும் கப்ருவணங்கிகள் செய்கிறார்களா?

                            சுன்னத்திற்கு மாற்றமாக நடக்கும் சுன்னத்ஜமாஅத்

சகோதரர்களே! சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளதாக முன்பே கூறியிருந்தோம். அதை இப்போது வெளிச்சம் போட்டு காட்டலாமா? 'சுன்னத்' என்பதற்கு 'நபிவழி' என்று பொருள்படுகிறது. இதன் அடிப்படையில் சுன்னத் ஜமாஅத்தை அட்டவணைபடுத்தலாமா?
நபி வழி சுன்னத் சுன்னத் ஜமாஅத் 
எப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வின் மேல் முழு ஈமான் கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவது. சாதாரண எறும்பு கடித்தால் கூட 'யா கவுஸ்!', நாகூர் ஆண்டவரே!, என்று ஈமானை பரிகொடுத்து அவ்லியாவிடம் குய்யோ முய்யோ என்று கதறுவது, உதவி தேடுவது 
அல்லாஹ்விடம் மட்டுமே அழுது துஆ செய்வது அவ்லியாவிடம் அழுது துஆ கேட்பதை தெய்வீகமாக கருதுவது 
இணைவைப்பு வழிபாடு கிடையாது சமாதி வழிபாடு முக்கியத்துவம் 
மார்க்கத்தில் புதுமையைப் புகுத்துவதை தடுப்பது! மார்க்கத்தில் நாள்தோறும் புதுமையைப் புகுத்துவது 
நபிமார்கள் முதற்கொண்டு எந்த மனிதருக்கும் அற்புத சக்தி கிடையாது என்றும் அவர்கள் அல்லாஹ்வைச் சார்ந்தவர்கள் என்றும் நம்புவது! அதில் உண்மையாக நிலைத்து நிற்பது பச்சை ஆடை உடுத்தி, தாடி வைத்துக்கொண்டு ஒருவர் வந்துவிட்டால் போதும் அவர்தான் அவ்லியா என்று நம்பி அவரிடம் முரீது, பைஅத்,  தீட்சை என்று நம்பி மோசம் போவது! 
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த துஆக்கள், வணக்க வழிபாடுகளை மட்டும் மேற்கொள்வது ஸலவாத்துன் நாரியா, மவ்லூது, ஷிர்க், கஜல் என்று கண்டதையெல்லாம் நம்பி வணக்கமாக‌ மேற்கொள்வது 
இணைவைப்பது பாவம் என்றும் மறுமையில் நரகம் உறுதி என்றும் பயந்து அல்லாஹ்வை மட்டும் வழிபடுவது இணைவைப்பது புண்ணியம் என்றும் மறுமையில் அவ்லியாக்கள் கைக் கொடுப்பார்கள் என்றும் நம்பி அல்லாஹ்வுக்கு இணையாக செத்துப்போன மனிதர்களை கருதுவது! 
அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக வாழ்ந்து மடிவது! இணை வைப்பதன் மூலம் அல்லாஹ்வுக்கு துரோகம் செய்து நன்றிகெட்ட மனிதனாக வாழந்து மடிவது 

சுன்னத் ஜமாஅத்தினரே இது சுன்னத்தா?

  • தர்காவுக்கு போவது சுன்னத்தா?
  • அவ்லியாவை வணங்குவது சுன்னத்தா?
  • கப்ரு வணக்கம் சுன்னத்தா?
  • மவ்லூது சுன்னத்தா?
  • மீலாது சுன்னத்தா?
  • ஸலவாத்துன் நாரியா சுன்னத்தா?
  • தாயத்து, தட்டு, தகடு சுன்னத்தா?
  • முரீது சுன்னத்தா?
  • ஷைகுமார்களின் கால்களில் விழுவது சுன்னத்தா?
  • கத்தம் ஃபாத்திஹா சுன்னத்தா?
  • 10ம் நாள், 20ம் நாள், 40ம் நாள், ஆண்டு பர்ஸி சுன்னத்தா?
  • 1000 முறை கத்தினால் கவுஸ் வருவார் என்பது சுன்னத்தா?
  • ஸபர், முஹர்ரம் மாதம் பீடை என்பது சுன்னத்தா?
  • வரதட்சனை வாங்குவது சுன்னத்தா?
  • வளர்பிறை, தேய்பிறை சகுணம் சுன்னத்தா?
  • நாகூர் மொட்டை சுன்னத்தா?
  • தப்ருக் தட்டுக்கள் சுன்னத்தா?
  • மரணித்தால் ஜியாரத் பொரி வழங்குவது சுன்னத்தா?
  • சமாதியை கழுவி அந்த அழுக்கு நீரை குடிப்பது சுன்னத்தா?
  • தர்காஹ் சந்தனத்தை நெற்றியிலும் கழுத்திலும் தடவிக்கொள்வது சுன்னத்தா?
  • உரூஸ், படையல் சுன்னத்தா?
  • சந்தனக்கூடு சுன்னத்தா?
  • கொடிமரம் சுன்னத்தா?
  • அவ்லியாக்களுக்கு நேர்ச்சை செய்வது சுன்னத்தா?
  • கப்ரை உயர்த்திக் கட்டுதல் சுன்னத்தா?
  • தஸ்பீஹ் மணி உருட்டுதல் சுன்னத்தா?
  • கவாலி இசைக் கச்சேரிகள் சுன்னத்தா?
  • யானை, குதிரை ஊர்வலங்கள் சுன்னத்தா?
  • ஜோதிட நம்பிக்கை சுன்னத்தா?
  • கருமணி, தாலி கட்டுதல் சுன்னத்தா?
  • மஞ்சள் நீராட்டுவிழா சுன்னத்தா?
  • சுன்னத் கத்னா திருவிழா சுன்னத்தா?
அல்லாஹ்தஆலா 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களை இந்த உலகத்திற்கு அனுப்பியதாக அருள்மறையில் சாட்சி கூறுகிறான். எந்த நபியாவது மேற்கண்ட இழிச்செயல்களை செய்து காட்டினார்களா? குர்ஆன் - ஹதீஸ் மூலமாக ஆதாரம் இருந்தால் காட்டவும்!

இவர்களின் சுன்னத் ஜமாஅத் என்பது முழுக்க முழுக்க சுன்னத்தை தவறவிடுவதேயாகும்!


அல்லாஹ்வுக்கு இணைவைத்துக்கொண்டு தங்களை அழகான 'சுன்னத் ஜமாஅத்தினர்' என்று பெயரை சூட்டிக்கொண்டால் மட்டும் சுவனம் சென்றுவிடமுடியுமா? கீழ்கண்ட வசனத்தை உணர்ந்திருக்கக் கூடாதா?

இணைக் கற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது!


     ‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணைக் கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)

இணைக் கற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்!


     (ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணைக் கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)

இணைக் கற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்!


      அவர்கள் இணைக் கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)

 இணைக் கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். 


       நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக்குர்ஆன்:    39:65,66)

இறைத்தூதர்களும்கூட‌ இணைக் கற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!


       நீர் இணைக் கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன்:  039:065, 066)

         அல்லாஹ் கூறுகிறான்:  “…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

பெயர் மாற்ற கோரிக்கை:


நபிகளாரின் சுன்னத்திற்கு மாற்றமாக நடந்துக்கொண்டு தங்களை சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயர்  வைத்திருப்பது அந்த சுன்னத்திற்கு (நபிவழிக்கு) அவமானப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரை மாற்ற இவர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை இத்துடன் முன்வைக்கிறோம்!

என்ன பெயர் வைக்கலாம் யோசியுங்கள்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிக் காட்டுவானாக

பைஅத், முரீது (தீட்சை)

பைஅத், முரீது (தீட்சை)



மனிதனது அறிவை மழுங்கச் செய்யும் எந்தக் காரியத்திற்கும் இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை. பைஅத், முரீது என்பது தான் மனிதனின் அறிவை மழுங்கச் செய்வதில் முதடத்தில் உள்ளது எனலாம். இதை விரிவாகப் பார்ப்போம்.
'ஷெய்கு எனப்படுபவர் தன்னிடம் பைஅத் (தீட்சை) வாங்கியவர்களுடன் உள்ளத்தால் தொடர்பு வைத்திருக்கிறார்; முரீதின் (சீடரின்) உள்ளத்தில் ஊடுருவி போதனைகளைப் பதியச் செய்கிறார்'என்றெல்லாம் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை இஸ்லாமிய அடிப்படையில் சரியானது தானா? 'எந்த ஒரு மனிதனும் எந்த மனிதனின் உள்ளத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாது' என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.
'உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!' என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : திர்மிதீ 3511
'மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 4798
'உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும் எந்தப் பங்குமில்லை'என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனைவியர் விஷயத்தில் மிகவும் நேர்மையுடன் நடந்து கொண்டார்கள். அவர்களுக்கிடையே எந்தப் பாரபட்சமும் காட்டியது இல்லை. ஆனாலும் தம் மனைவியரில் ஆயிஷா (ரலி)யை மட்டும் மற்றவர்களை விட அதிகம் நேசித்தார்கள். இவ்வாறு ஒருவர் மீது நேசம் வைப்பது மனிதனின் முயற்சியால் நடப்பது அல்ல. முயற்சியையும் மீறி நடப்பதாகும்.
இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது
'இறைவா! எனது சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் நான் சரியாக நடந்து கொள்கிறேன். எனது சக்திக்கு மீறிய (சிலர் மீது அதிக அன்பு வைக்கும்) காரியங்களில் என்னைக் குற்றவாளியாக்காதே!'என்று குறிப்பிடுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்கள் : திர்மிதீ 1059, அபூதாவூத் 1822, நஸயீ 3883 இப்னுமாஜா 1961, அஹ்மத் 23959
தமது உள்ளத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது அல்லாஹ்வின் தூதருக்கே இயலவில்லை என்றால், அடுத்தவர் உள்ளங்களில் ஷெய்கு (குரு) எப்படி ஆட்சி செலுத்த முடியும்?
மிகவும் அக்கறையுடனும், ஆர்வத்துடனும், கலப்பற்ற தூய எண்ணத்துடனும் தம் பெரிய தந்தை அபூதாலிபுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்தும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அவரது உள்ளத்தை ஊடுருவி போதனையைப் பதியச் செய்ய இயலவில்லை.
இது பற்றி இறைவன் கூறும் போது
(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன். அல்குர்ஆன் 28:56
என்ற வசனத்தை அருளினான்.
எத்தனையோ நபிமார்கள் தங்கள் மனைவியருக்கும், மக்களுக்கும், பெற்றோருக்கும் செய்த போதனைகள் பயனளிக்கவில்லை.
மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி 'அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!' என்று நூஹ் கூறினார். 'ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிருந்து காப்பாற்றும்' என்று அவன் கூறினான். 'அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.'பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!' என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. 'அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமானோர்' எனவும் கூறப்பட்டது. நூஹ், தம் இறைவனை அழைத்தார். 'என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்;உனது வாக்குறுதியும் உண்மையே; நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்' என்றார். 'நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; இது நல்ல செயல் அல்ல; உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்; அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்' என்று அவன் கூறினான். 'இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்' என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 11: 42-48
நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. 'நரகில் நுழைவோருடன் சேர்ந்து இருவரும் நுழையுங்கள்!' என்று கூறப்பட்டது. (அல்குர்ஆன் 66:10)
இவையெல்லாம் நமக்கு என்ன பாடம் கற்பிக்கின்றன?
'ஒருவர் எவ்வளவு இறையச்சம் உடையவர் ஆனாலும், தூய்மையான எண்ணம் கொண்டவரானாலும், பழுத்த பழமாக இருந்தாலும் அவர் தனது போதனைகளை எந்த உள்ளங்களிலும் சேர்ப்பிக்க முடியாது' என்பது தான் இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடம்.
இதற்கு மாற்றமாக பைஅத், முரீது என்பது அமைந்துள்ளது.
எடுத்துக் காட்டாக, முரீது வியாபாரத்தில் நேர்மையான வியாபாரிகள் என்று நம்பப்படும் சிஷ்திய்யா தரீக்காவை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மவ்லவிகள் பலரும் இந்த தரீக்காவில் முரீது வாங்கியுள்ளனர்.
ஹுஸைன் அஹ்மத் மதனீ, ரஷீத் அஹ்மத் கங்கோஹி போன்ற பெரியார்களெல்லாம் இதன் கலீஃபாக்களாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.
தப்லீக் தஃலீம் புத்தகம் எழுதிய முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் இந்த தரீக்காவின் வரலாறு பற்றி உருதுவில் எழுதிய நூலை ஆரணியைச் சேர்ந்த கமாலுத்தீன் அவர்கள் (இவர் தமிழகத்தில் இந்த தரீக்காவின் கலீஃபா அதாவது ஏஜெண்ட்) 'சிஷ்திய்யா ஷைகு வரலாறு' என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார்.
இவருக்கு நிறைய மவ்லவிகள் இன்றளவும் முரீதுகளாக உள்ளனர். அந்த நூலில் இடம் பெறும் சில சம்பவங்களையே இங்கே நாம் எடுத்துக் காட்டாக கூறப் போகிறோம்.
மஷாயிகுமார்கள் (பெரியார்கள்) தங்களிடமுள்ள குணாதிசயங்களைப் பிறரில் பரவச் செய்கிறார்கள். அதற்கு நடைமுறையில் தவஜ்ஜுஹே இத்திஹாதீ' என்று சொல்லப்படுகின்றது.
(மேற்படி நூல் பக்கம் 10)
இந்த தவஜ்ஜுஹே இத்திஹாதீ' சம்பந்தமாக ஹஜ்ரத் காஜா பாக்கிபில்லாஹ் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்' அவர்களின் சம்பவம் பிரபல்யமானதாகும். அதை ஷைகு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள். ஒரு முறை ஹஜ்ரத் அவர்களுடைய வீட்டிற்கு விருந்தனர் பலர் வந்து விட்டனர். விருந்தினரை உபசரிக்க வீட்டில் எதுவுமில்லை. கவலையுடன் ஹஜ்ரத் அவர்கள் வெளியே வந்தார்கள். அருகே ரொட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார். அவர் ஹஜ்ரத் வீட்டிற்கு விருந்தினர் வந்ததைப் பார்த்து விட்டு நல்ல உணவுப் பொருட்களைத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு ஹஜ்ரத்திடம் வந்தார். ஹஜ்ரத் அவர்கள் அம்மனிதரை நோக்கி மகிழ்ச்சி மேலீட்டால், 'உனக்கு என்ன வேண்டுமோ கேள்!' என்றார்கள். அதற்கு அம்மனிதர் 'உங்களைப் போன்றே என்னையும் ஆக்கி விடுங்கள்!' என்றார். ஹஜ்ரத் அவர்கள், நீ சமாளிக்க மாட்டாய்'என்றார்கள். எனினும் அம்மனிதர் பல முறை கெஞ்சி வேண்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டார். பல தடவை மறுத்தும் அவர் கேட்காததால் வேறு வழியின்றி ஹஜ்ரத் அவர்கள் அவரை வேறு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே தவஜ்ஜுஹே இத்திஹாதீ' செய்தார்கள். அறையிலிருந்து வெளியே வந்த போது இருவரின் முகமும் ஒரே மாதிரித் தோற்றமளித்தது. ஹஜ்ரத் காஜா சாஹிப் உணர்வோடு இருந்தார்கள். அம்மனிதரோ உணர்வின்றி இருந்தார். இது தான் வித்தியாசம். அதே உணர்வற்ற நிலையில் மூன்று நாட்கள் இருந்து பின்னர் இறந்து விட்டார்.
(அதே நூல் பக்கம்: 11, 12)
இப்படியெல்லாம் மூளைச் சலவை செய்யும் மடமைக் கதைகளுக்கும் 'சுப்ஹானல்லாஹ்'சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.
மனிதனை முட்டாளாக்கி, அல்லாஹ்வின் தூதரை விடவும் தன்னை உயர்த்திக் கொள்ள முற்படும் இந்தப் பித்தலாட்டக்காரர்கள் ஷெய்குகளாம்! பக்குவப்பட்டவர்களாம்!
மேலே நாம் காட்டிய சான்றுகளுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள்! இவர்கள் இஸ்லாத்திற்கு எவ்வளவு பகிரங்கமான எதிரிகளாக உள்ளனர் என்பதை அறிவீர்கள்.
கற்பனை உலகில் தங்கள் முரீதுகளை மிதக்க விடுவதற்காக இவர்கள் கட்டியுள்ள கதைகள் எண்ணிலடங்கா.
'அப்துல் வாஹித் சார்பாக நதியே நீ காய்ந்து விடு' என்று நதியிடம் அப்துல் வாஹித் தன் முரீதுகளை சொல்லச் சொன்னார்களாம். அப்படியே நடந்ததாம்.
(அதே நூல் பக்கம் : 143)
ஹஜ்ரத் அவர்களிடம் பக்கீர்கள் கூட்டம் ஒன்று வந்ததாம். ஹஜ்ரத் துஆ செய்தததும் காசு மழை பொழிந்ததாம். அதற்கு அல்வா வாங்கிச் சாப்பிட்டார்களாம்.
(அதே நூல் பக்கம் 143)
நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கொருமுறை நோன்பு திறப்பது இவர்களின் வழக்கமாக இருந்தது. அதுவும் புல் பூண்டுகளைக் கொண்டு நோன்பு திறப்பார்கள்.
(அதே நூல் பக்கம் 156)
இப்படியெல்லாம் இஸ்லாத்தைத் தகர்த்து தரை மட்டமாக்கும் சம்பவங்கள் ஏராளம்! தன்னைப் போன்ற ஒரு மனிதரை இந்த அளவுக்கு உயர்த்திட இவர்கள் எங்கே கற்றார்கள்?அல்லாஹ்விடமிருந்தா? அல்லாஹ்வின் தூதரிடமிருந்தா? நிச்சயமாக இல்லை.
பண்டாரங்கள், பரதேசிகள் ஆகியோரிடமிருந்து இதைக் கற்று இஸ்லாத்தில் திணித்து விட்டனர். பிறர், இஸ்லாத்திற்கு வருவதற்கு தடைக் கற்களை ஏற்படுத்தி விட்டனர். இவர்கள் கப்ரு வணக்கத்தை ஏற்படுத்தியவர்களை விட மோசமானவர்கள். அல்லது அதற்குச் சற்றும் குறையாதவர்கள்.
மிகவும் உயர்வானது என மதிக்கப்படும் தரீக்காவின் நிலை இது. இதே தரீக்காவில் இன்னும் நவீன கோட்பாடுகள் பல உள்ளன.
காலில் விழச் சொல்லும் ஷெய்குகள்
இசையில் மயங்கும் ஷெய்குகள்
தொழுகை போன்ற வணக்கங்கள் தேவையில்லை எனக் கூறும் ஷெய்குகள்
என்றெல்லாம் பல பித்தலாட்டக்காரர்கள் உள்ளனர்.
ஒழுங்கான இஸ்லாமிய ஆட்சி நடந்தால் இவர்களெல்லாம் மரண தண்டனைக்கு உரியவர்கள்.
திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் அனைத்து தரப்பினாலும் ஏற்கப்பட்ட ஹிஜ்ரி 971ல் மரணமடைந்த இமாம் குர்துபீ (முஹம்மத் பின் அஹ்மத் அல் அன்ஸாரி) அவர்கள் தமது 'அல் ஜாமிவுல் அஹ்காமில் குர்ஆன்' எனும் திருமறை விரிவுரை நூலில் குறிப்பிடுவதை இங்கே எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
சூஃபியாக்களின் கொள்கை முட்டாள் தனமானதும், வழிகேடும் ஆகும். இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் வேதத்தையும், அவன் தூதருடைய நடைமுறையையும் தவிர வேறில்லை. நடனமாடுவது, இறைக் காதல் என்பதெல்லாம் ஸாமிரி என்பவன் உருவாக்கியதாகும். இஸ்லாமிய ஆட்சியாளர்கள், இவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுத்து நிறுத்துவது அவசியமாகும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகின்ற எவரும் இவர்களின் அவைக்கு வருகை தரக் கூடாது. இவர்களின் தவறுக்கு துணை நிற்கலாகாது. இது தான் இமாம் மாலிக், இமாம் அபூஹனீபா, இமாம் ஷாபீ, இமாம் அஹ்மத் பின் ஹம்பல் மற்றும் முஸ்லிம் அறிஞர்களின் முடிவாகும் என அபூபக்கர் தர்தூஷி அவர்கள் சூபியாக்கள் பற்றிய கேள்விக்கு விடையளித்தார்கள்.
(பார்க்க தாஹா அத்தியாயம் 92 வது வசனத்தின் விரிவுரை)
இந்த வழிகெட்ட சூபியாக்கள் நான்கு மத்ஹபுகளுக்கும் கூட அப்பாற்பட்டவர்கள் என்பதற்கு குர்துபி அவர்களின் இந்தக் குறிப்பு சான்றாக அமைந்துள்ளது.
காலில் விழலாமா?
ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி,கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் '(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?' எனக் கேட்டார்கள். 'மாட்டேன்'என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)
நூல்: அபூதாவூத் 1828
தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது 'எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.
காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
'உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே' என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத்தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள்.'எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில் கும்பிடாதீர்கள்' என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர். எனவே தமது கால் விழுமாறு மக்களுக்கு வழி காட்டுவோர் கயவர்களாவர்.

thanks to www.onlinepj.com