Pages

Wednesday, September 14, 2011

வீணானவிமா்சனங்களும் விருட்ஷமாகும் ஸ்ரீலங்லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும்


பழிப்போரின் பழிச்சொல்லுக்குஅவா்கள் அஞ்சமாட்டார்கள் (5 : 54)
சத்திய  இஸ்லாத்தை  இத்தரணியில்  அதன் தூய்மையான வடிவில் முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கை இலக்காக வைத்து ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பே  ஸ்ரீலங்கா தவ்ஹீத்  ஜமாஅத். புது வடிவம் பெற்றுபுத்துணா்வுடன் நடைபயிலும் இந்த ஜமாஅத்,அதன் ஓராண்டு எனும் இடைவெளிக்குள் ஆற்றியபணிகள் ஏராளம். அரபுப் பணத்தின் அடிவருடிகளால் அலட்சியப்படுத்தப்பட்டிருந்த அழைப்புப் பணியை, உத்வேகத்துடன் உயிரூட்டி உயிர்ப்பெறச் செய்வதில் இந்த ஜமாஅத் அல்லாஹ்வின் அருளால் வெற்றிபெற்றுள்ளது. பெயா் தாங்கி தவ்ஹீத் வாதிகளின் கொள்கைச் சமரசத்தினால்,கொழுந்து விட்டு வளா்ந்த அசத்திய விருட்ஷங்கள், எமது சத்திய பிரச்சாரத்தின் எதிர் விளைவால் வேரருந்து வீழ்வதும், சுவடிழந்து போவதும்  அன்றாட நிகழ்வுகளாய்  அதிகரித்து வருகின்றன.
அல்லாஹ் ஒருவனது அச்சத்தை மட்டும் உள்ளத்தில் ஏந்தி, அசத்தியங்களை அடியோடு எதிர்த்த ஏகத்துவத் தந்தை இப்றாஹிம் (அலை) அவா்களின் வழியை முன்மாதிரியாய்க் கொண்டதினால், வழிகேட்டுக் கும்பல்களும்,நெறிபிறழ்ந்த ஜமாஅத்துக்களும் கிளிபிடித்து எமக்கெதிராய் கிளா்ந்தெழுந்துள்ளன. தம் இருப்பை ஸ்தீரப்படுத்துவதற்காய் தமக்கிடையிலான பகைமைகளை மறந்து, எம்மை எதிர்க்கும் பணியிலும், எம் மீது அவதூறுகளையும், ஆதாரமற்ற அபாண்டங்களையும் சுமத்தி சேறுபுசி, பொதுமக்கள் மத்தியில் எம் குறித்தத வறான பதிவுகளை விதைக்கும் மூன்றாம் தர களப் பணிகளிலும் அத்தனை அமைப்புகளும்  ஒன்றுபட்டு உழைப்பதனை துளாம்பரமாய்  காணமுடிகிறது.
எமது அழைப்புப் பணியின் ஆக்ரோஷத்தை அழித்தொழிக்கும் நோக்கில் முனைமழுங்கிய விமா்சனக் கணைகளை அசத்தியவாதிகளுடன் இணைந்து செயற்படும் முதுகெழும்பற்றசிலகொள்கைக் கோமாளிகளும் தொடுத்து வருவதனை பரவலாக அவதானிக்கமுடிகிறது. எம்மைஎதிர்ப்பதற்காய் ஆரம்பத்தில் இவா்கள்  விடுத்த விமா்சனக் கணைமாற்றுக் கருத்துள்ளவா்களின் மேடைகளில் இவா்கள்  தஃவா செய்ய மாட்டார்களாம்! இந்தக்  கொள்கை  தஃவாவின்  வளா்ச்சியை முடக்கும்! ”என்பதாகும்.
கொள்கைவாதி எனும் போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு இடத்திற்கு ஏற்றால் போல் வேஷம் போட்டு பித்அத்துகளை அரங்கேற்றிஜமாஅதே இஸ்லாமியின் கருத்துக்களை தங்கள் பத்திரிகைகளிலும் மேடைகளிலும் பிரச்சாரம் செய்யும் ஊதுகுழல்களாய் இருப்போரையும், ஜம்இய்யதுல் உலமாவின் பதவிகளுக்காய் கொலைகாரக் கும்பலான தரீகாவாதிகளின் கூட்டணியோடு கைகோர்த்த கோமாளிகளையும், பள்ளிகட்டுதல், கிணறுவெட்டுதல் என்று கூறி அரபுப்பணத்தை துஷ்பிரயோகம் செய்து, தமது வயிறுகளை வளர்த்துக் கொண்டவசுல் ராஜாக்களையும், எதிர்ப்புக்கு அஞ்சி ஏகத்துவத்தில் சமரசம் செய்து கொண்ட கொள்கைவங்குரோத்துக்காரா்களையும் நாம் மக்களுக்கு அடையாளப்படுத்தி, இவா்களுடன் கைகோர்த்து மேடை ஏறினால் தஃவாமக்களுக்கு தூய்மையாகசென்றடைவதில் தடங்கள் ஏற்படும் என்பதையும் விளங்கப்படுத்தினோம். எமதுவாதத்தில் உள்ள நியாயத்தை புரிந்துகொண்ட கொள்கைவாதிகள் எம்மை நோக்கி விமரசித்தவா்களைபுறக்கணித்துவிட்டு, எம்மோடு இணைந்துஅழைப்புப் பணி புரிய முழு மனதுடன் முன்வந்தனா். எந்த மாற்று மேடையை ஏற்றால்  தஃவா முடங்கும் என்றார்களோ, அக்கொள்கைதான் எமது தஃவாவை விரிவுபடுத்துகிறது என்பதற்கு எம்முடன் இணைந்துசெயற்படும் 26 கிளைகளும்,ஒருமாதத்துக்குள் தேசிய ரீதியில் நடைபெறும் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளும் சான்றாகும்.
இவா்கள் சுமத்திய முதல் அபாண்டம் தமது முகத்திலேயே புழுதியைவாரி இறைத்ததனாலும், எம் வளர்ச்சியின் மீதுகொண்டகாழ்ப்புணர்வின் விளைவாளும்இவர்கள் மத்ஹபு வாதிகள்! பி.ஜே எனும் மத்ஹபைபின்பற்றுபவா்கள்!”என்றதும் இரண்டாவது அஸ்தியை அள்ளி எறிந்தனா்.  மூடிய அறைக்குள்  இருந்து கொண்டு வெற்றுச் சவடால்கள் விட்டனா்.
ஆளுக்கு ஒரு கருத்துக்களை ஆய்வறிவின்றி மிம்பா்களிலும், பொதுமேடைகளிலும் பரப்பியதனால்தான் தவ்ஹீதியசமுதாயம் தவிடு பொடியாகி சிதறிக்கிடக்கிறது. சமுதாயத்தை சிதறடிக்கும் இப்போக்கைமாற்றிஅனைவரையும் ஓரளவுக்கேனும் ஓரணிப்படுத்துவதாயின், கருத்துவேறுபாடுடைய அம்சங்களையும் முரண்பட்ட விடயங்களையும் முதலில்  உலமாக்கள் அனைவரும் ஓரிடத்தில் அமா்ந்து, குர்ஆன்  ஸூன்னாவின் ஒளியில் தீர்வு கண்டு, எடுக்கப்படும் முடிவை ஏகமானதாய் அனைவரும் ஒன்றாய் மேடைகளில் பிரச்சாரம் செய்தால் பிளவுகள் குறையும். இவ்வுடன்பாடு காண்பதற்காய் முரண்பட்ட கருத்திலுள்ள அனைத்துதவ்ஹீத் உலமாக்களையும்நாம் அன்போடு அழைக்கின்றோம். தமது வாதங்களை எம்மோடு கலந்துரையாடவிரும்பாவிடின் மக்கள் மன்றில் விவாதிக்கவருமாறும் வேண்டுகிறோம். தாடி,கரண்டைக்குக் கீழ் ஆடை அணிதல்,சுனியம், பிறைஇது  போன்ற எவ்விடயமாயினும் எம்மோடுபேசலாம்: விவாதிக்கலாம். உங்கள் கருத்தைகேட்கநாம் சித்தமாய் உள்ளோம். இவ்விரண்டுக்கும் முன்வராது,தமதுகருத்தைநிரூபிக்கதுணிவற்ற கோழைகள், அறைக்குள் இருந்துஇவா்கள் மத்ஹப் வாதிகள்என்றுவிமா்சிப்பது எப்படி நியாயமாகும்? எமது பதிலில் துளங்கிய நியாயத்தைவிளங்கிக் கொண்டமக்கள் மத்தியில் பச்சோந்திகளின் வாதம் புஷ்வானமாகிவிட்டது.
எம்மோடு நேருக்குநோ் நின்று நெஞ்சு நிமிர்த்தி சான்று களைமுன்வைக்கமுதுகெழும்பற்ற இத்தகையகோழைகளுக்கும் கோமாளிகளுக்கும் நாம் சொல்லிக்கொள்வது இது தான்: எமது பணிகளைமுடக்குவதற்காக எந்தஅபாண்டங்களையும்,வீணான விமா்சனங்களையும் சுமத்தி, பொதுமக்களைகுழப்பி எம்மீது களங்கத்தைகற்பிக்கமுனைகிறீர்களோ, அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வின் தீனைஉங்கள் வாய்களினால் ஊதி அணைக்க முனைந்தால்,உங்கள் சுவடுகள் கூட இன்றிஅழிந்துபோவீர்கள். அல்லாஹ்வின் சுழ்ச்சிக்கு முன்   உங்கள் சு+ழ்ச்சி பஸ்பமாகிவிடும். உங்கள்  விமா்சனங்களால் எம்  வோ்கள் ஆழமாய் பதிந்து ஆழ விருட்ஷமாய் வியாபித்தேவருகிறது.சத்தியம் வானளாவவளரும்! அசத்தியம் அடியோடுஅழியும்!