Pages

Saturday, April 16, 2011

ஹெம்மாதகமையில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி




ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாத கமை கிளை ஏற்பாடு செய்திருந்த மார்க்க விளக்க நிகழ்சி கடந்த 07.04.2011 அன்று ஹெம்மாத கம மஸ்ஜிதுல் ஹிதாயாவில் நடை பெற்றது. இந்நிகழ்வில் சகோதரர் எம்.ஐ சுலைமான் அவா்கள் அசத்தியம் அழிவுரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பகிரங்க கேள்வி பதில் நிகழ்சியும் நடை பெற்றது. கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது ஜமாத்தே இஸ்லாமி என்ற அமைப்பினரைப் பற்றி முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது. அந்தக் கேள்விகளுக்கு குா்ஆன், ஹதீஸில் இருந்து மிகத் தெளிவாக பதில் கொடுக்கப்பட்டதுடன் ஜமாத்தின் அழைப்பு மாத இதழ் ஜமாத் தே இஸ்லாமி தொடர்பாக பொய்யான தகவலை எழுதியிருப்பதாக கேட்கப்பட்ட கேள்வி நேரத்தில் இது தொடர்பாக ஜமாத்தே இஸ்லாமி பகிரங்கமான வழி கேட்டில் இருக்கிறது அவா்கள் தான் இலங்கையில் ஷீயா சிந்தனை பரவுவதற்கு துணையாக இருக்கிறார்கள் நாம் சொல்வதும் , அழைப்பு பத்திரிக்கையில் எழுதியுள்ளதும் பொய்யான , தவறான செய்தி என்றால் அதே பத்திரிக்கையில் ஜமாத்தே இஸ்லாமிக்கு பகிரங்க விவாத அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அதனை அவா்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரா என்ற சவாலும் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About the Author

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்