Pages

Showing posts with label போலித்தவ்ஹீத். Show all posts
Showing posts with label போலித்தவ்ஹீத். Show all posts

Tuesday, July 19, 2011

வந்த வழியில் திரும்பிச் சென்ற ஹாமித் பக்ரி


நாம் வாழும் காலத்தில் நாம் மாத்திரம் நேர்வழி பெற்றால் போதாது அனைத்து மக்களும் நேர்வழி பெற்று மறுமையில் சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகும்.


ஆனால் நேர்வழியைக் கொடுப்பதும் வழிகேட்டில் விட்டு விடுவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும்.

அதனைத் தனது திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன் (28:56)

நபியவர்களுக்கு அல்லாஹ் தெளிவாக கூறுகிறான்: நபி நினைத்தவர்களுக்குக் கூட நேர் வழியைக் கொடுத்துவிட முடியாது. அல்லாஹ் நாடினால் ஒருவரை நேர்வழியில் வைப்பான். அவன் நினைத்தால் அவரையே வழிகேட்டிலும் தள்ளி விடுவான்.

அதற்கு மிக அண்மைக்கால நிதர்சன எடுத்துக்காட்டுதான் ஹாமித் பக்ரி அவர்கள்.

ஹாமித் பக்ரியின் ஆரம்ப காலம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பேரியக்கம் அணைத்து தவ்ஹீத் கூட்டமைப்பாக இயங்கிய காலத்தில் அதன் தலைவராக இருந்தவர்தான் ஹாமித் பக்ரி.

தவ்ஹீத் கொள்கையை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்காக தவ்ஹீத் ஜமாத் ஆலிம்கள் அயராது பாடுபடுகின்ற நேரங்களில் அவர்கள் அணைவருக்கும் தலைவர்  இவர்தான்.

பல இடங்களில் மத்ஹபுவாதிகளை எதிர்த்து குரல் கொடுத்து, தர்கா கந்தூரி உரூஸ் போன்றவற்றை தடுப்பதற்காக பல கஷ்டங்களைப்பட்டு, மத்ஹபுவாதிகளுடன் மத்ஹபுகளில் உள்ள கருத்துக்கள் மார்க்கத்திற்கு முரணானவை என்பதை விவாதங்களின் மூலம் நிரூபித்து இந்த ஏகத்துவத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில அயராது உழைத்தார் இந்த ஹாமித் பக்ரி.

மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போதும் மூட நம்பிக்கைகளை எதிர்த்துக் குரலெழுப்பும் போதும் திருமறை வசனங்களும் நபியவர்களின் பொன் மொழிகளும் அவருடைய நாவில் அணைகடந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும் (இன்று இதே நாவில் மவ்லிதுப் பாடல்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன). 

திருமறைக் குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் தான் நாம் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை  ஆரம்ப காலத்தில் உடைத்து பேசியவர்களில் இவரும் ஒருவர்.

நடந்தது என்ன?

இடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் தவ்ஹீத் ஜமாத் அவருக்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அதிரடியாக அறிவித்தது.

வந்த வழியில் திரும்பியதன் காரணம் என்ன?

ஒரு தனி மனிதன் மேல் கொண்ட விருப்பு வெருப்பு தான் அவரின் இந்த நிலைக்குக் காரணம்.

இதை நாமாக சொல்லவில்லை. அவரே வாக்கு மூலம் கொடுத்த வீடியோக்கள் உள்ளன.

அதாவது சகோதரர் பி.ஜெ அவர்களைப் பற்றி ஹாமித் பக்ரி குறிப்பிட்டு பேசும் போது அவர் கருப்பை வெள்ளை என்றார் நாங்களும் வெள்ளை என்றோம் அவர் வெள்ளையை கருப்பு என்றார் நாமும் கருப்பு என்றோம்.

இது பக்ரியின் பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலம்.

அதாவது அவர் இந்தக் கருத்தின் மூலம் சொல்ல வருவது நான் தவ்ஹீதை பிரச்சாரம் செய்யவில்லை. பி.ஜெ என்பவரை தக்லீத் தான் செய்தேன் என்பதாகும்.

ஆனால் இவர் சொல்லும் செய்தி உண்மையானதா? பி.ஜெயின் பிரச்சாரம் தன்னை பின்பற்றச் சொல்வதா அல்லது தவ்ஹீதை எடுத்துச் சொல்வதா?

சகோதரர் பி.ஜெயின் பிரச்சாரக் களத்தில் ஓர் இடத்தில் கூட தான் பிழையே செய்ய மாட்டேன் என்னைப் பின்பற்றுங்கள் என்று சொன்னதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டமுடியாது. மாறாக நான் சொல்வது அல்குர்ஆனுக்கும் அவனுடைய தூதரின் கருத்துக்கும் ஒத்ததாக இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மாற்றமாக நான் எதை சொன்னாலும் தூக்கியெரிந்து விடுங்கள் என்பது தான் சகோதரர் பி.ஜெ அவர்களின் இவ்வளவு கால பிரச்சாரத்தின் சுருக்கமாகும்.

உதாரணத்திற்கு சகோதரர் முஜீபுர் ரஹ்மானுக்கும் பி.ஜெக்கும் மத்தியில் கடந்த வருடம் தொண்டியில் வைத்து பி.ஜெ மொழிபெயர்த்த திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் தவறுகளா? என்ற தலைப்பில் விவாதம் நடை பெற்றது.

அந்த விவாதத்தின் இறுதியில் தொகுப்புரை வழங்கிய சகோதரர் பி.ஜெ அவர்கள் அந்த தொகுப்புரையில் தான் செய்யும் தவ்ஹீத் பிரச்சாரத்தில் நான் ஏதாவது தவறாக பேசினால் அதனை யார் எனக்கு சுட்டிக்காட்டினாலும் பாகுபாடு காட்டாமல் ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று அதற்கு பல உதாரணங்களையும் காட்டியதுடன். தனது தர்ஜமாவில் தவறே இல்லை என்று ஒரு காலத்திலும் தான் வாதிடவில்லை, வாதிடவும் மாட்டேன், வாதிடவும் முடியாது ஏன் எனில் தவறுகளுக்கு அப்பாட்பட்டவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்று ஏகத்துவத்தின் அடிப்படையை தான் நினைவூட்டினார் என்பது குறிப்பிடப்த்தக்கது.


தொண்டி விவாதத்தின் தொகுப்புரை வீடியோவின் ஒரு பகுதி.

ஹாமித் பக்ரி அவர்களே! 

அவர் கருப்பு என்றால் நானும் கருப்பு என்றேன் அவர் வெள்ளை என்றால் நானும் வெள்ளை என்றேன் என்று கூறினீர்களே!

அப்படி தான் சொல்வதுதான் சரி என்று பி.ஜெ எங்காவது சொன்னார் என்று ஒரு ஆதாரத்தை காட்டி பேச வேண்டியதுதானே.

நீங்கள் சொன்னதற்கு மாற்றமாக பி.ஜெ சொல்லியுள்ளதை கீழே உள்ள வீடியோவில் பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது இலங்கையில் ஒரு கூட்டம் நீங்கள் எப்படி இருந்ததாக சொல்கிறீர்களொ அப்படி  தற்போதும் இருப்பதாக   பி.ஜெயிடம் கூறப்பட்டதற்கு சகோதரர் பி.ஜெ அவர்கள் இதை கேட்டால் எனக்கே அருவருப்பாக உள்ளது. இப்படியெல்லாம் யாரும் நடக்கக் கூடாது என்று பகிரங்கமாக கூறுகிறார்.  இப்படிப் பட்ட ஒருவர் தன்னை எப்படி தக்லீத் செய்யச் சொல்ல முடியும்?


பக்ரியின் இன்றைய நிலை என்ன?

தவ்ஹீத் ஜமாத்தின் தலைவராக இருந்த ஒருவரின் இன்றைய நிலையைப் பாருங்கள்.

ஒரு தனி மனிதன் மேல் கொண்ட வெறுப்பு இவரை கொள்கையை விட்டே வெளியேற்றி விட்டது.

இது இவருக்கு மட்டும் உரியது அல்ல. யாராக இருந்தாலும் கண்டிப்பாக அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.  இவைகளைத் தாண்டி யாரைப் பின்பற்றினாலும் எதைப் பின்பற்றினாலும் அவரின் நிலை ஹாமித் பக்ரியின் நிலைதான்.

ஹாமித் பக்ரி அன்றும் இன்றும்.

அன்று : குர்ஆனும் ஹதீஸும் மாத்திரமே நேர்வழி

இன்று : குர் ஆன் ஹதீஸ் அல்லாதவைகளிலும் நேர் வழி உண்டு.

அன்று : மத்ஹபுகளில் குர்ஆனுக்கும் ஹதீஸ{க்கும் மாற்றமான கருத்துக்கள் உள்ளன.

இன்று : மத்ஹபுகள் தான் நேர்வழி அவை புனிதமானவையே!

அன்று : மரணித்தவர்களுக்கு கத்தம் ஓதுவது கூடாது.

இன்று : மரணித்வர்களுக்கு கத்தம் கொடுப்பதே நேர்வழி.

அன்று : கூட்டு துஆ கூடாது.

இன்று : கண்டிப்பாக கூட்டு துஆ ஓத வேண்டும்.

அன்று : கந்தூரிகள் மார்க்கத்தில் கிடையாது.

இன்று : கண்டிப்பாக கந்தூரிகள் ஓதப்பட வேண்டும்.

அன்று : மவ்லிதுகள் கூடாது.

இன்று : மவ்லிதுகள் மார்க்கத்தில் உள்ளவையே!

அன்று : தர்காக்களில் நடப்பது அணைத்தும் வழிகேடு.

இன்று : அவையணைத்தும் நேர்வழி.

அன்பின் சகோதரர்களே, அணைவரும் புரிந்து கொள்வதற்காகவே ஒரு சில தகவல்களை நாம் குறிப்பிட்டுள்ளோம். மேலதிக விபரத்திற்கு கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.


ஹாமித் பக்ரியின் அவர்களின் இனிமையான குரலில் மௌலுது மற்றும் கூட்டு துவாவை கேட்க கீழே விடியோவை பார்க்கவும் (ஹாமித் பக்ரியின் ஆடியோ கீழே விடியோவில் இணைக்கப்பட்டுள்ளது).


நன்றிrasminmisc.tk

Monday, June 20, 2011

இதுதான் இவர்களின் தவ்ஹீத்.

அப்துல் வதூத் ஜிப்ரியின் பல வேஷத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
M.I.Sc

நாங்கள் மூத்த உலமாக்கள், தவ்ஹீத் கொள்கையை அந்தக் காலத்தில் இருந்தே பரப்புபவர்கள், தவ்ஹீத் எங்கள் மூச்சு என்றெல்லாம் அடிக்கு ஆயிரம் தடவை சொல்லிக் கொள்ளும் பல தவ்ஹீத் வாதிகளை இலங்கை தஃவாக் களம் நாளும் நாளும் கண்டு வருகிறது.

தங்களை மூத்த உலமாக்கள், மூத்த கொள்கை வாதிகள் என்று சொல்லிக் கொள்வதில் அலாதியான ஆர்வம் கொண்ட இவர்களில் பலரின் நிலை இன்று அந்தோ பரிதாபம் என்றாகிவிட்டது.

ஆரம்பத்தில் கொள்கையை உடைத்து சொல்ல வேண்டும் தூய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் செயல்பட்ட மூத்த உலமாக்களில் (?) பலரின் நிலை இன்று தலைகீழாய் போயுள்ளதை கண்கூடாகக் காண முடியும்.

அதில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தில் இருந்தவர் தான் மவ்லவி அப்துல் வதூத் ஜிப்ரி ஆரம்ப காலத்தில் இவரின் கொள்கை பிடிப்பு காரணமாக பல இடங்களில் தாக்கப்பட்டவர், மிரட்டப்பட்டவர், என்பதில் எல்லாம் நமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் அவரின் தற்போதைய நிலையைத் தான் நாம் கவணிக்க வேண்டும்.

ஆரம்ப கால கட்டத்தில் தவ்ஹீதுக்காக அடிபட்டார் என்பதற்காக இப்போதும் அவர் செய்யும் செயல்களை ஆதரிக்க முடியுமா என்ன?

பேருவலைப் படுகொலையும், அப்துல் வதூத் ஜிப்ரியின் பச்சோந்தித் தனமும்.

கடந்த 23.07.2009 அன்று பேருவலை மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வாயலில் சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸி (ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா ஒருங்கிணைப்பாளர் ) அவர்கள் தர்கா வழிபாடு மற்றும் கந்தூரிக்கு எதிராக ஜும்மா உரை நிகழ்த்தினார் அந்த உரையின் மூலம் எடுத்துச் சொல்லப்பட்ட சத்தியக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாத அந்த ஊரைச் சேர்ந்த புகாரி தைக்காவைச் சேர்ந்த கப்ரு வணங்கிகள் இரவோடு இரவாக மஸ்ஜிதுர் ரஹ்மானைத் தாக்கினார்கள் அந்த களோபரத்தில் 2 கொள்கைச் சகோதரர்கள் ஷஹீதாக்கப்பட்டு பலர் படுகாயமடைந்தார்கள்.

இலங்கை தவ்ஹீத் பிரச்சார வரலாற்றில் பதிந்த இந்த நிகழ்வு என்றும் மறவாத வடுவாக ஏகத்தவவாதிகளின் மனதில் இடம்பிடித்தது.

இந்தக் கொடூரம் தொடர்பாக பல ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த வேலை ஜமாத்தே இஸ்லாமியின் பத்திரிக்கையான “எங்கள் தேசம்” பத்திரிக்கை அப்துல் வதூத் அவர்களை இது தொடர்பாக ஒரு பேட்டி கண்டது.

அந்தப் பேட்டியில் ஜும்மா உரையில் பேசப்பட்ட செய்தி தொடர்பாக கருத்துச் சொன்ன அப்துல் வதூத் அவர்கள் “ இப்படியெல்லாம் பிரச்சாரம் செய்யக் கூடாது” இது பிரச்சாரத்திற்கான வழி முறை அல்ல என்று குறிப்பிட்டார்.

அவருடைய இந்தக் கருத்து அன்றைய நாட்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே இருந்தாலும் இன்றும் சிலர் அவரை நம்புவதாலும் அவருக்கு சிகப்புக் கம்பலம் விரிப்பதினாலும் இந்தத் தகவலை இங்கு பதிவு செய்கிறோம்.

கப்ரு வணக்கம் கூடாது, புகாரி கந்தூரி கூடாது, குா்ஆனும், சுன்னாவும் மாத்திரம் தான் நம் வழி அது தவிரவுள்ளவைகள் எதனையும் நாம் பின்பற்றக் கூடாது. பித்அத்துகள் செய்யக்கூடாது மூட நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது பிரச்சாரத்தின் முறை கிடையாது என்கிறார் இந்தக் கொள்கை (?) கோபுரம்.

இவர் இப்பயெல்லாம் கூறியும் கொள்கையை உடைத்துச் சொல்லக் கூடாது என்று எந்த இயக்கம் சமரசம் பேசுகிறதோ அந்த ஜமாத்தே இஸ்லாமியின் பத்திரிக்கையிலேயே இதை இவர் சொன்னார்.

ஆனால் அன்று அவரின் கருத்தை விமர்சித்தவர்கள் இன்று அவரை ஏற்றுக் கொண்டு அவருடன் மேடையேறுவதும் அவருக்கும் தவ்ஹீத் பிரச்சாரகர் என்ற பெயர் வழங்கப்பட்டு பிரச்சாரத்திற்காக இடங்கள் ஒதுக்கப்படுவதும் என்ன நியாயம்?

இவர் என்றோ தவ்ஹீதை விட்டும் தடம் புரண்டு விட்டார் என்பது தெரிந்தாலும் ஆறிய கஞ்சி பலங்கஞ்சி என்ற பழமொழியைப் போல் தவ்ஹீ்த் பிரச்சாரக் களமும் அரசியலாக்கப்பட்டு மேடை பங்கு போடப்படுகிறது.

உள்நாட்டில் கொள்கைவாதி, வெளிநாட்டில் கொள்கை வியாபாரி.

இலங்கை மக்கள் மத்தியில் தன்னை ஒரு தவ்ஹீத் வாதியாக காட்டிக் கொள்ளும் இவர் வெளிநாடுகளில் போடும் வேஷங்கள் பல சகோதரர்களுக்கும் தெரியாமல் இருக்கிறது.

பச்சோந்தியைப் போல் இடத்திற்கு ஏற்ற வேஷம் போடும் இவர் வெளிநாடுகளில் கொள்கை வியாபாரம் செய்பவர் என்பது அந்த நாடுகளில் வாழும் இலங்கை சகோதரர்களினாலேயே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.   `

ஆம் கீழே நாம் கொடுத்துள்ள வீடியோவின் லிங்கைக் கிளிக் செய்து பாருங்கள் இவர் ஆஸ்த்திரேலியா சென்ற நேரத்தில் அங்கு யாரோடு சேர்ந்து நிகழ்சி செய்கிறார் என்பது வெளிச்சத்திற்கு வருகிறது.


ஜமாத்தே இஸ்லாமியினர் இலங்கை தஃவாக்களத்தில் ஏகத்துவத்திற்கு எதிராக எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்கிறார்கள் என்பது தெரிந்தும் இப்படிப்பட்டவர்களுடன் இவர் கூட்டனி சேர்கிறார் என்றால் இவரை தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

ஏகத்துவத்தைப் பேசுபவர்களை கொள்கையை உடைத்துப் பேசுவது தஃவாவின் அனுகு முறை இல்லை என்று ஜமாத்தே இஸ்லாமியின் பத்திரிக்கையில் பேட்டி கொடுக்கிறார்.

வெளிநாடுகளில் ஜமாத்தே இஸ்லாமியுடன் சேர்ந்து நிகழ்ச்சி நடத்துகிறார். இப்போதாவது புரிகிறதா இவரின் கொள்கை வியாபாரம்?

இவர் எந்தளவுக்கு இரட்டை வேஷம் போட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்றால் ஜமாத்தே இஸ்லாமியுடன் மட்டுமல்ல லண்டனில் நடை பெற்ற ஒரு மாநாட்டில் இவர் கலந்து கொண்டார் இவருடன் யார் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் என்பதை கீழே உள்ள படத்தைப் பார்ப்பவர்கள் தெளிவாக அறிய முடியும்.


அப்துல் வதூத் ஜிப்ரியுடன் கலந்து கொண்டவர்கள் யாரென்று பாருங்கள்.

ஹஜ்ஜுல் அக்பர் (ஜமாத்தே இஸ்லாமியின்)

அப்துல்லாஹ் பெரியார் தாசன் (அனைத்துக் கொள்கைக் காரர்களோடும் கை கோர்ப்பவர்)

ரிஸ்வி முப்தி (தப்லீக் ஜமாத்தின் முக்கியஸ்தர், இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர்.)

அகார் முஹம்மத் (ஜமாத்தே இஸ்லாமி)

அப்துல் வதூத் அவர்கள் கலந்து கொண்ட லண்டன் நிகழ்ச்சியின் நிலையைப் பாருங்கள்.

இலங்கை தஃவாக் களத்தில் தவ்ஹீதுக்கு எதிராக ஷீயா ஊடுருவலை தெளிவாக ஆதரிக்கும் ஜமாத்தே இஸ்லாமியைச் சேர்ந்தவர்கள், தவ்ஹீத் வாதிகளையும் அவர்களின் பள்ளிகளை இல்லாமலாக்கத் துடிக்கும் தப்லீக் வாதிகள், சுன்னத் ஜமாத் காரர்கள் என்று அனைவரும் கலந்து கொள்கிறார்கள் அதில் இவரும் கலந்து கொள்கிறார்.

இதுதான் கொள்கை உறுதியோ ? 

இதுதான் ஏகத்துவப் பிரச்சாரமோ ?

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீரலிலும் ஒருவருக்கொருவா் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(5-2)



உண்மை வந்து வட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது. (அல்குா்ஆன் 17-81)