Pages

Showing posts with label நுழைவாயில். Show all posts
Showing posts with label நுழைவாயில். Show all posts

Friday, August 24, 2012


நுழைவாயில்
எம்.டீ.எம்.பர்ஸான்

கருகும் மியன்மாரும் காத்திருக்கும் இலங்கையும்

உலக வரை படத்தில் அன்பே அடிப்படைஎன்ற கொள்கையைக் கொண்ட பௌத்த தேசம் என அடையாளப்படுத்தப்பட்ட மியன்மார்(ர்மா), இன்று நரமாமிச வேட்டையாடும் அரக்கத்தனத்திற்கு எடுத்துக் காட்டாய் திகழ்கிறது. மேற்கு மியன்மாரின் ராக்கோன் மாநிலத்தில் ஜீவிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்பெரும்பான்மை இனமாகிய பௌத்தர்களால் முழுமையான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனா. காவி உடை தரித்த காடையர்களின் தலைமையில், இராணுவ - அரசியல் பின்புலத்துடன் கதறக்கதற வெட்டிச் சாய்த்தும், சுட்டெரித்தும், கற்பழித்தும் கொலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் உயிர்களின் எண்ணிக்கை இற்றை வரை 30 000 ஆயிரத்தை அண்மித்துவிட்டது.

சமாதானப் புறாவாக உலகை வலம் வரும் ஜனநாயகவாதி ஆங்சான் சுகி, ஆன்மீக வாதியாக அடையாளப்படுத்தப்படும்  தலாய்லாமா மற்றும் மனித உரிமைக்காய் குரல் கொடுப்பவர்கள் என்று மார்தட்டும் மேற்குலக வல்லாதிக்க நாடுகள் உள்ளிட்ட எவரும் மியன்மாரின் கொலைக்களத்தை கண்டித்து இது வரை எதிர் நடவடிக்கைகள் எடுக்காமல் மௌனம் சாதித்தே வருகின்றனர். மெரிக்காவின் எலும்பை உண்டுவிட்டு வாலை ஆட்டித்திரியும் சாவதேச முஸ்லிம் உம்மத்தின் உறுப்பு நாடுகளான அரபு தேசங்களோ எதுவுமே நடைபெறாதது போன்று சமூக பிரக்ஞையின்றி இருப்பது எமது உம்மத்தின் உணர்வுகள் கூட செத்துவிட்டன என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தினந்தோரும் குருதிச் சொட்டுக்களால் உறைந்து காணப்படும் மியன்மாரின் அட்டூழியத்தினை இலங்கை தேசத்தின் அரசியல் தலைமைகளாவது கண்டித்து அறிக்கை ஆர்ப்பாட்டங்கள் புரிந்தார்களா என்றால் அதனையும் எங்கும் காணமுடியவில்லை. தன்னினத்தவன் அட்டூழியம் புரிந்தாலும் அது அகிம்சை தான் என்ற இனவாத உணர்வு இன்று நம் மண்ணிலும் ஆழமாய் வேர்விட்டு வளர ஆரம்பித்துள்ளமை நம்மவர்களுக்கான அபாய சமிக்ஞையாகவே கருதவேண்டியுள்ளது.

கருகும் மியன்மாரின் தீப்பொறி இலங்கையையும் கருகச் செய்யுமோ என்று சிந்திக்க வேண்டிய தருணத்தில் இன்று இலங்கை முஸ்லிம்கள் உள்ளனர். தம்புள்ளை, குருனாகல, தெஹிவலை என்று ஆரம்பித்த முஸ்லிம் விரோதப் போக்கு இன்று பல்பரிணாமம் பெற்று வியாபித்து வருவது கவலைக்கிடமானது, கண்டிக்கத்தக்கது. தம்பகம மஸ்ஜிதுல் அர்க்கம் ஜூம்ஆ பள்ளிவாசல் முற்றவெளியில் பிரித் ஓதி தொழுகையை இடை நிறுத்துமாறு பிக்குமார்கள் நடாத்திய அராஜகம், கொழும்பு - 07 எம்.எச்.எம்.அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலையும் அதனை அண்டிவாழும் குடும்பங்களையும் இடம்பெயரச் செய்து விட்டு அவ்விடத்தில் ரஷ்ய தூதுவராலயத்தின் 4 மாடி கட்டடத்தை நிர்மாணிக்க புர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை, ராஜகிரிய கிரீடா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்கள் வழமைக்கு மாற்றமாக அதிகமாக வந்ததனை சாட்டாக வைத்து தொழுகையை தடுப்பதற்கு பிக்குமார்கள் ஒன்று திரண்டமை, கிண்ணியா பாலத்திற்கு அருகில் முஸ்லிம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வரவேற்பு கோபுர நிர்மாணப்பணிகளை இடைநிறுத்துமாறு பேரின அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளமை, திருகோணமலை மாவட்ட அநுராதபுர எல்லைக்கிராமமான ரொட்டவௌ பகுதியில் பரம்பரை பரம்பரையாக செய்து வரப்பட்ட சேனைப் பயிர்ச்செய்கை காணியும் விவசாயக் காணியும் வனவள அதிகாரிகளினால் பரிமுதல் செய்யப்பட்டு வருகின்றமை, மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்களுக்குரிய கோந்தப்பிட்டி துறியனையை விடத்தல் தீவு கிறிஸ்தவ மீனவர்களுக்குரியதாக நீதிபதியினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை, மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் நொச்சிக்குளத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அவர்களுக்கெதிராய் ஆர்ப்பாட்டம் செய்தமை, சன்னார் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அவர்களது காணிகளை கொடுக்காததோடு வேறு இடத்திலும் காணிகளை வழங்கக் கூடாது என்று மன்னார் ஆயா ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியமை, புதுக்குடியிருப்புக்கும் எருக்கலம்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் 200 முஸ்லிம்களுக்கு சொந்தமான 1500 ஏக்கர் காணியினை தனியொரு தமிழருக்கு வழங்கியமை, ரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போல் தம்புள்ளை புனித புமி பிரச்சினைக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தீர்வு கிடைக்காவிட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும்என்று அஸ்கிரிய மகாநாயக்க உடுகம ஸ்ரீபுத்தரக்கித்த தேரர் விடுத்துள்ள மிரட்டல், ‘இன்று எமக்குள்ள பிரச்சினை தமிழ் பயங்கரவாதமல்ல! இஸ்லாமிய தீவிரவாதமே! இதற்காக ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டும்என்று இனவாதத்தை கக்கியவண்ணம் களமிறங்கியுள்ள பௌத்த செயல் முன்னணியின் சுடு பரக்கும் அறிக்கை, தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கெதிராய் கிளர்ந்தெழச் செய்யும் விதத்தில் கல்முனைக்குச் செல்லும் தமிழ் பெண்கள் முஸ்லிம் வியாபாரிகளிடம் இலவசமாக பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள்முஸ்லிம்கள் தன்னினப் பெண்களை அடக்குமுறையில் வைத்து விட்டு எமது தமிழ் பெண்கள் மீது சுகம் கொள்கின்றார்கள்என்ற வரிகளுடன் மட்டக்களப்பில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் உள்ளிட்ட அண்மைய முன்னெடுப்புகள் யாவும் இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்து பேரின மற்றும் தமிழ் கிறிஸ்தவ இனவாதிகள் தொடுக்கும் இனவாத தாக்குதலாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

ரியும் மியன்மார் தீச்சுவாலையின் பின்புலத்தில் இருந்து கொண்டு இலங்கை முஸ்லிம்களையும் அவர்களின் இருப்பையும் சேர்த்து கருகச்செய்வதற்கான காய் நகர்த்தல்களாகவே மேற்படி நிகழ்வுகளை எம்மால் நோக்க முடிகிறது. பதவிகளை தக்க வைப்பதற்காய் போராடி சிதறிய செங்கற்கள் துகள்களாய் நாட்புறமும் சிதறிக் காணப்படும் வங்குரோத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளை நம்பி நம் சமுதாயத்தின் இருப்பை ஸ்தீரப்படுத்த நினைப்பது வெறும் பகற்கனவாகவே அமைய முடியும்.

அல்லாஹ்வின் அச்சத்தை உள்ளத்தில் இருத்தி, கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று, சமுதாய அக்கறையுடன் களத்தில் இறங்கும் மாற்று சக்திகள் குறித்து முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறார்கள். சிந்திக்குமா நம் சமுதாயம்???
 

ஆகஸ்ட் மாத அழைப்பு இதழின் ஆசிரியர் கருத்து

Wednesday, May 30, 2012

தம்புள்ளை பள்ளிவாசல் ஆக்ரமிப்பும் கோடாரிக் காம்பாய் மாறிப்போன முஸ்லிம் தலைமைகளும்!


தம்புள்ளை பள்ளிவாசல் ஆக்ரமிப்பும்

கோடாரிக் காம்பாய் மாறிப்போன முஸ்லிம் தலைமைகளும்!

மனிதர்களில் ஒருவர்  மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.” (அல்குர்ஆன் 22 : 40)

கடந்த 20/04/2012 ஆம் திகதி இலங்கை முஸ்லிம்களின்  உணர்வுகள் மொத்தமாய் எரிமலையாக்கப்பட்ட தினம்! இலங்கை தேசத்தின் இறைமையை காக்கும் இமைகளாய் வாழ்ந்த முஸ்லிம்களின் இறையில்லம், இனவாதிகளின் ஆக்ரமிப்புக்கும், அடாவடித்தனத்துக்கும் உள்ளாகி, எமது வழிபாட்டு உரிமை தட்டிப்பறிக்கப்பட்ட கரு தினம்! 50 ஆண்டுகளாய் அல்லாஹ்வை வழிபட்டு வந்த, அரச பதிவுகளுடன் கூடிய ஆவணங்களை அத்தாட்சியாய் வைத்துள்ள, ர்  இறையில்லத்தை திட்டமிட்ட சதிவலைகள் மூலம் சில இனவாத சக்திகள் கபளீகரம் செய்ய எத்தனித்த தினம்!

பௌத்தர்களுக்குரிய புனித புமிக்குள் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் அமைய இடமளியோம்!என்ற உண்மைக்குப் புறம்பான வார்த்தை ஜாலங்களை சோடித்து, இனவாத கோஷத்துடன் ஓர் இறையில்லம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை இந்நாட்டின் புர்வீகக் குடிகளான முஸ்லிம்களின் மத உரிமையை தட்டிப்பறிக்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளது.

இலங்கை சனநாயக சோசலிஸக் குடியரசின் சட்ட யாப்பின் மத சுதந்திரத்தை வழியுறுத்தும் 10ம் ஷரத்து மற்றும் நிந்தனைகளிலிருந்து பாதுகாக்கும் 11ம் ஷரத்து, அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் 15ம் ஷரத்து போன்றவை இவ்வினவாதிகளினால் இங்கு அப்பட்டமாய் மீறப்பட்டுள்ளன.

இரண்டு கோடி என்ற இலங்கையின் சனத்தொகையில் இரண்டாம் பெரும்பான்மையாய் முஸ்லிம்கள் வளர்ந்து வருகிறார்கள் என்ற அண்மைய புள்ளி விபரத்தின் இரகசிய தகவல் கசிவு, மெரிக்க வல்லாதிக்கத்தின் ஜெனீவா பிரேரணையை எதிர்த்து நாட்டின் இறைமையை காப்பதற்காய் தம்புள்ளை நகரில் ஒன்று குழுமிய 1000 க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை, இறையில்ல ஆக்ரமிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன் ஜனாதிபதியை சந்திப்பதற்காய் உலகப்பந்தின் ஒவ்வொரு சாண் நிலப்பரப்பிலிருந்தும் முஸ்லிம்களை கருவறுக்கத் துடிக்கும் ஸியோனிஸ இஸ்ரேலிய தூதுக்குழுவின் இலங்கைக்கான திடீர் விஜயம், தம்புள்ளை ரஜமஹா விகாரையை தளமாக வைத்து இயங்கும் ரங்கிரி F.M இன் தொடர்ந்தேர்ச்சியான இனத்துவேச அறிவிப்புகள், 19ஆம் திகதி இரவே ஆக்ரமிப்பை தடுப்பதற்குண்டான உதவிகள் காவல் நிலைய உயரதிகாரிகளிடம் பள்ளி நிர்வாகிகளினால் கோரப்பட்ட போதும்  பாதுகாப்பு முஸ்தீபுகளில் காவல் நிலையம் கரிசனைகாட்டாமை, காவி உடை தரித்த காடையர் கூட்டம் காட்டு தர்பார் நடாத்திய போதும் காவல் நிலைய காவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தமை, உச்ச நீதிமன்ற அறிவித்தலுடன் மட்டுமே சீல் வைக்க அதிகாரம் உள்ள வணக்கஸ்தலத்தை, நீதி மன்ற உத்தரவின்றி பிரதேச செயலக  அதிகாரியும், காவல் நிலைய DIG யும் சீல் வைத்தமை, இத்தனை சட்ட மீறல்களையும் கண்டித்து எதிர் நடவடிக்கை எடுக்க கடைமைப்பாடுள்ள பிரதமர், நடைபெறாத ஒரு ஒன்று கூடலை நடைபெற்றதாகக் கூறி, குறித்த பள்ளிவாசலை அது அமைந்துள்ள இடத்திலிருந்து அகற்றி வேறு இடத்துக்கு இடமாற்ற அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்தனர் என்று தனது அலுவலக முத்திரையுடன் வெளியிட்ட ஊடக அறிக்கை, பள்ளிவாசல் ஆக்ரமிப்பை எதிர்த்து நடாத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளை அரச சார் சக்திகள் தடுப்பதற்குண்டான வழிவகைகளை செய்தமை, பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்த காடையர்களை கைது செய்தல் குறித்து இது வரை ஜனாதிபதியவர்கள் எந்தவொரு அறிக்கையினையும் ஊடகங்களுக்கு விடாது மௌனம் சாதிக்கின்றமை  உள்ளிட்ட குறித்த நிகழ்வுடன் தொடர்புற்ற அனைத்து காரணிகளையும் ஒன்றினைத்து நோக்குகையில், நடந்த சம்வத்திற்கும் ஆளும் அரசிற்கும் நெருங்கிய தொடர்பும் பின்புலமும் உண்டு என்ற வழுவான ஐயப்பாடு முஸ்லிம்களின் ஆழ்மனதில் எழ ஆரம்பித்துள்ளது.

இலங்கை மண்ணின் புர்வீகக் குடிகளில் முஸ்லிம்கள் ஒன்றும் மூன்றாம் தர பிரஜைகளல்லர். இந்நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அபிவிருத்திக்காகவும் உதிரத்தை உரமாய் பாய்ச்சிய கீர்த்திக்குரிய பிரஜைகள் நாம்.தேசப்பற்றுடன் செயலாற்றும் எம்மை நசுக்கி, எம் உரிமைகளை பறித்து, எம் கலாசார முதிசயங்களை அழித்து, எம் இருப்பை இம்மண்ணை விட்டும் இல்லாதொழிக்க நினைத்தால் அது வெரும் பகற்கனவு தான் என்பதை இனத்துவேஷ விஷமிகளின் செவிகளுக்கு உரத்துச் சொல்கிறோம்! அதே சமயம், முஸ்லிம்களின் இருப்பும், ரிமைகளும் கண்னெதிரே களவாடப்படுவதை கண்ட பின்பும், தங்களது அதிகாரக் கதிரைகளை தக்க வைத்துக் கொள்வதற்காய், அரசியல் காய்நகர்த்தி, வார்த்தையில் மட்டும் எனது சமூகம்என்று நீலக்கண்ணீர் வடிக்கும் முஸ்லிம் அரசியல் வேஷதாரிகளின் உண்மை முகம் இந்நிகழ்வுடன் சமுதாயத்திற்கு தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.

மேலும், முஸ்லிம்களின் மார்க்க மற்றும் உலகியல் வழிகாட்டல்களுக்கு நாங்களே ஏகபோக உரிமை கொண்டவர்கள் என்று கருதப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சமூக பிரக்ஞை அற்ற சுயநலத்தனமும், அரச சார்பான பச்சோந்தித்தனமும் வெள்ளிடை மலையாய் வெளிப்பட்டுமுள்ளது. அநீதியை தட்டிக்கேற்க திராணியற்று, அதிகார வீச்சுக்கு முன் பெட்டிப்பாம்பாய் அடங்கி, மார்க்கம் சொல்லாத அடிப்படையில் நோன்பு நோற்று அமைதிகாக்கும் படி ஏவிய ஜம்இய்யதுல் உலமாவின் மார்க்க அறிவை என்னவென்று சொல்வது?

பல்லின சமுதாயத்தவர்கள் தொப்புல் கொடி உறவாய் கூடி வாழும் இலங்கை நாட்டில் ஒவ்வொரு இனத்தவருடைய உரிமைகளையும், உணர்வுகளையும் மதித்து வாழும் போதே நல்லிணக்கமும் சமாதானமும் நீடித்து நிலைக்க முடியும். இனங்களுக்கிடையிலான நல்லுறவை சிதைக்கும் இனவாத செயற்பாடுகளை அரசு மற்றும் சிவில் நிறுவனங்கள் உரிய முறையில் நிறைவேற்றத்தவரினால் அதன் விளைவு விபரீதமானதாய் இருக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்களின் செவிகளுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வாஞ்சையோடு எடுத்துச் சொல்கிறது. உரியவர்கள் இது குறித்து சிந்திப்பார்களா?